தொடரும் தோழர்கள்

சனி, ஆகஸ்ட் 11, 2012

அழகாயிருப்பது எப்படி?


அழுக்கில்லையென்றாலே அழகு வந்துவிடும்.

நான் சொல்வது உடல் அழுக்கல்ல; மன அழுக்கு!

கீழேயுள்ள அழகுக் குறிப்புகளைப் பாருங்கள் ---

உதடுகள் அழகாக இருக்க எப்போதும் அன்பான சொற்களையே பேசுங்கள்.

கண்கள் அழகு பெற மற்றவர்களிடம் இருக்கும்  நல்ல  பண்புகளையே பாருங்கள்.

அழகிய மெல்லிய உடல் அழகுக்கு உங்கள் உணவை பசித்தவர் களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

கேசப் பொலிவுக்கு தினம் ஒரு முறையாவது ஒரு குழந்தையின் கைகள் உங்கள் கூந்தலைத் தடவட்டும்.

நிமிர்ந்த நன்னடைக்கு,எப்போதும் நாம் தனியாக இல்லை என்ற நினைப்பு உங்களுடன் இருக்கட்டும்.

உதவும் கரம் தேவையென்றால் நினைவில் வையுங்கள் அது உங்கள் மணிக்கட்டுக்குக் கீழே இருக்கிறது என்பதை.வயது முதிர்ச்சி யடையும்போது,உணருங்கள் இரண்டு கரம் உள்ளது ,ஒன்று உங்களுக்கு உதவ,மற்றது அடுத்தவர்க்கு உதவ என்பதை.

ஒரு பெண்ணின் அழகு அவள் உடலமைப்பிலோ,அவள் அழகிய உடைகளிலோ,அவள் கூந்தல் அலங்காரத்திலோ இல்லை.
அது அவள் அன்பு உறையும் ஆன்மாவின் சாளரமான அவள் கண்களில்தான் இருக்கிறது.

இறைவனின் கண்களில் அனைவரும் அழகுதான்.அவன் அனைவரையும் விரும்புகிறான்.அவன் பார்வையில் ,அனைவருமே அழகானவர்கள்தான்

இந்தச் சிந்தனைகள் யாரிடம் பிறந்தன தெரியுமா?

ரோமன் ஹாலிடே என்ற படத்தில் அறிமுகமாகி,ஒரு மிகச் சிறந்த நடிகையாக மட்டுமன்றி ,ஒரு மிக நல்ல  மனித உயிராகவும் இருந்த ஆட்ரி ஹெப்பர்னிட மிருந்து!. 






31 கருத்துகள்:

  1. இதற்க்கு மேல் ஒரு மனிதனை எப்படி அழகு படுத்திட முடியும்.. அருமை..

    பதிலளிநீக்கு
  2. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய " அழகான " கருத்துக்கள்... நன்றி ஐயா... (TM 2)

    பதிலளிநீக்கு
  3. நடிகையென்றால் அழகு பொம்மை என்றும் அவர்கள் அறிவு குறைவென்றும் கருதும் காலத்தில் அருமையான கருத்துக்களை சொன்ன நடிகை ஆச்சரியம்தான். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. மிக அழகாக சொல்லியுல்லிர்கள் ,,,, நன்றி

    பதிலளிநீக்கு
  5. அர்த்தமும் அழகும் பொருந்திய வரிகள் அருமை ஐயா பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ‘அழுக்கில்லையென்றாலே அழகு வந்துவிடும்.’

    சொல்லவேண்டியவகளை ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டீர்கள். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. நல்ல கருத்துகள் யார் சொன்னாலென்ன... பாராட்டவும், பின்பற்றப் படவேண்டியவையும்தானே...!

    பதிலளிநீக்கு
  8. அழகைப் பற்றிய அருமையான தகவல்கள் (கருத்துக்கள் )
    பகிர்வுக்கு நன்றி அய்யா .

    எம். ஆர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ரமேஷ்.நல்மா?காலம் எந்தக் காயத்தையும் ஆற்றும்..இறைவன் இருக்கிறான்..

      நீக்கு
  9. // அவள் அன்பு உறையும் ஆன்மாவின் சாளரமான அவள் கண்களில்தான் இருக்கிறது.// பெண்களின் கண்கள் பற்றி குறிப்பிட்ட இக்கருத்துக்களை மிகவும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  10. சுலபமான் அனைவரும் எளிதாக
    பின்பற்ற்க்கூடிய வழியினை பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  11. உண்மையான அழகை பற்றிய
    தெளிவான சிந்தனை கொண்ட கருத்துப் பதிவு ஐயா...

    பதிலளிநீக்கு
  12. அழகை அழகாய்ச்சொன்னவிதம் அழகு.

    பதிலளிநீக்கு