தொடரும் தோழர்கள்

வியாழன், பிப்ரவரி 28, 2013

மீண்டும் பதிவு எழுதலாமா?!



சித்திரமும் கைப்பழக்கம்,செந்தமிழும் நாப்பழக்கம்!

கை பழகப் பழகத்தான் சித்திரம் வரும்;நா பழகப் பழகத்தான் செந்தமிழ் வரும்.

தொடர்ந்து பழகுதல் என்பது அவசியம்

ஒரு சிறந்த பாடகனாயினும் தினம் சாதகம் செய்தால்தான் குரல் ஒத்துழைக்கும்.

அது போலத்தான் எழுதுவதும்.

எழுதிக்கொண்டே இருந்தால் புதிய கருத்துகள்,சிந்தனைகள் பிறந்து கொண்டே இருக்கும்.

சில காலம் எழுதாமல் இருந்து விட்டால்,சிந்தனை துருவேறி விடும்;கற்பனை  சண்டித் தனம் செய்யும்.

அதுதான் இன்று என் நிலையும்.

சில காரணங்களால் பதிவு எழுதுவதையே நிறுத்தியிருந்தேன்.

மீண்டும் எழுதலாம் என்ற எண்ணம் எழும்போதும் ,ஒரு தயக்கம் வந்து தடுத்துக் கொண்டிருந்தது.

ஆனால் இரு வாரங்களாக வலைச்சரத்தில் திரு தமிழ் இளங்கோ அவர்களும், திரு நாஞ்சில் மனோ அவர்களும் என்னை அன்புடன் நினைவு கூர்ந்து அறிமுகப்படுத்தி,மீண்டும் எழுதும் எண்ணத்தைத் தூண்டி விட்டு விட்டார்கள்.

ஆனால் கணினி முன் அமர்ந்தால்   படிக்காமல் போய்த் தேர்வில் கேள்வித்தாளைக் கையில் வாங்கிப் பார்த்து விழிக்கும் மாணவன் போல் உணர்கிறேன்.

என்ன செய்யலாம்?

மனக்குதிரை ஓடத் தொடங்கும் வரை,இதுநாள் வரை நான் எழுதியவற்றில்  எனக்குப் பிடித்த சில பதிவுகளை மீள் பதிவாகத் தர எண்ணுகிறேன்.

 முன்பே படித்தவர்கள் பொறுத்தருள்க!

இது வரை படிக்காதவர் படித்துப் பயன்(!) பெறுக!


நாளை முதல், மீள்பதிவு!
நாளை,முதல் மீள் பதிவு!