தொடரும் தோழர்கள்

வெள்ளி, செப்டம்பர் 06, 2019

என்னதான் முடிவு?


நித்யா கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

அவளுக்குக் கோலம் போடுவதில் எப்போதுமே  அதிக ஆர்வம் உண்டு.

அன்று வெள்ளிக் கிழமை வேறு.

எனவே மிகவும் மும்முரமாகக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் அருகில் ஒரு பைக் வந்து நின்றது.

தலையைத் தூக்கிப் பார்த்தாள்.

பைக்கில் அமர்ந்திருந்தவன் தன் கையில் இருந்த காகிதத்தை நீட்டி “இந்த விலாசம் எங்கே இருக்குன்னு சொல்ல முடியுமா” என்றான்

அதை வாங்க அருகில் சென்றாள் நித்யா.

அவள் அவனை நெருங்கியதும்,அவன் அவள் கழுத்தில் இருந்த சங்கிலியை வெடுக்கென்று இழுத்து அறுத்து எடுத்துக்கொண்டு பைக்கை வேகமாகச் செலுத்தியவாறு சென்று விட்டான்.

ஒரு சில விநாடிகளில் எல்லாம் முடிந்து விட்டது.

அவன் சங்கிலியை இழுத்தபோது ஏற்பட்ட காயத்தைக் கையால் அழுத்தியவாறு நித்யா கத்த ஆரம்பித்தாள்.

அவள் கணவன்,மாமியார் உள்ளிருந்து ஓடி வந்தனர்.அண்டை அயலார்களும் வந்து கூடினர்.

அவள் நடந்ததைச் சொன்னாள்.

காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் என்பதே பலரின் ஆலோசனையாக இருந்தது.

ஆனால் நித்யா,அவள் கணவன் குமார்,அவள் மாமியார் பங்கஜம் மூவரும் காவல் நிலையம் போனால் தொடர்ந்து ஏதாவது பிரச்சினை வருமோ என்று தயங்கினர்.

அந்த வீதியிலேயே இருந்த ஒருவர்,அந்தப் பகுதி காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்தவர் குமாரைப் பார்த்துச் சொன்னார்.”கட்டாயம் புகார் கொடுக்கணும் நான் வீட்டுக்குப் போய் தயாராயிட்டு வரேன் .நீங்களும் தயாராகுங்க.இந்த வீதியிலேயே ரெண்டு சிசிடிவி காமிரா இருக்கு.அதில அவன் மாட்டிக்குவான்.”


அவர் வந்ததும் அவருடன் புறப்பட்டான் குமார்.

புகார் கொடுக்கப்பட்டது........

காவல் நிலையத்தில் காமிரா படத்தை பார்த்ததில் பைக்கில் அவன் வருவதும்,நித்யாவிடம் பேசுவதும் ,சங்கிலியை அறுத்துக் கொண்டு வேகமாகச் செல்வதும் நன்கு பதிவாகியிருந்தது.

உடன் இரு காவலர்கள் அவனைத் தேடும் பணியில் அனுப்பப் பட்டனர்.திருட்டு நகை வாங்குவதில் பெயர் பெற்ற ஒரு கடையைக் கவனிக்கத் தீர்மானித்தனர்.

கடை திறக்கவில்லை

சிறிதுதள்ளி நின்று காத்திருந்தனர் .

கடை திறந்தது.

சிறிது நேரத்தில் பைக்கில் வந்து இறங்கி உள்ளே சென்றான் அவன்.

ஓரிரு நிமிடங்கள் கழித்துக் காவலர் கடைக்குள் சென்றனர்,.

அவன் தப்ப முடியாமல் அமுக்கிப் பிடித்தனர்


கடைக்காரர் சொன்னார்”சார் !இவன் கவரிங் நகையைக் கொண்டு வந்து என்னை ஏமாற்றிக் காசு வாங்கப் பாத்தான்”

போலீசார் திகைத்தனர்..கவரிங் நகையா?

சிறிது நேரம் சென்று காவல் நிலையத்திலிருந்து குமாருக்கு அழைப்பு வந்தது.

ஆய்வாளர் கோபமாக இருப்பது தெரிந்தது.மேசை மீது அந்தச் சங்கிலையத் தூக்கி எறிந்து சத்தம்போட்டார்”ஏய்யா,கவரிங் நகைன்னு முதல்லயே சொல்லித்தொலைக்கறதுதானே? ஜம்பமா தங்கநகைமாதிரி புகார் எல்லாம் கொடுத்துட்டீங்க?எடுத்துட்டுப் போங்க”
குமாருக்கு அவமானமாக இருந்தது.

சங்கிலியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.

”என்னங்க?சங்கிலி கிடைச்சுடுச்சா” என்று ஆர்வமாகக் கேட்டாள்  .

”கிடைச்சது நித்யா.ஆனா கவரிங் நகை.போலிஸ் பிடிக்கிறதுக்கு முன்னாலயே அவன் ஏதோ பண்ணிட்டான் போல.போலிஸும் நம்பிட்டாங்க.அவங்க நம்ம மேல தப்பு சொல்றாங்க.இனிமே ஒண்ணும் செய்ய முடியாது”.

நித்யாவும் அவள் மாமியாரும்  ஏமாறத்துக்குள்ளாயினர்.

குமார் மனத்தில் ஓடிய எண்ணங்கள் அவர்களுக்குத் தெரியாது

என்னதான் நடந்திருக்கும்?

(தொடரும்)







செவ்வாய், செப்டம்பர் 03, 2019

தேங்காய்னா சும்மாவா?!


இப்போதெல்லாம் எத்தனையோ தினங்கள் கொண்டாடப் படுகின்றன.....அன்னையர் தினம்,தந்தையர் தினம்,பெண்கள் தினம்,குழந்தைகள் தினம் என்றெல்லாம்.இவற்றுக்கிடையே நேற்று ஆரவாரமில்லாமல் ஒரு தினம் கடந்து சென்றிருக்கிறது.நமது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு பொருளின் தினம்

ஆம்.

அகில உலக தேங்காய் தினம்.

தேங்காயின் முக்கியத்துவம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சில சமையல் வகைகளுக்குத் தேங்காய் இருந்தால்தான் சுவை.

என்றுமே மற்ற முடித் தைலங்களை விடத் தேங்காய் எண்ணெய்தான் தலைக்குத் தடவச் சிறந்தது.

கேரளாவில் சமையலுக்கு முழுவதும் பயன்படும் எண்ணெய்,தேங்காய் எண்ணெய்தான்.

இந்தத் தேங்காயைத்தரும் தென்னை மரம் ,கவிஞர்களின் வாக்கிலும் இடம் பெறுகிறது.

மூதுரையில் அவ்வையார் சொன்னார்

’நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.’’

எனவேதான் ஒரு திரைக்கவிஞன் சொன்னான்

தென்னையைப் பெத்தா இளநீரு
பிள்ளையைப் பெத்தா கண்ணீரு

என்று.

நன்றிக்கு எடுத்துக்காட்டாகப் புகழப் படுவது தென்னைதான்.

காணி நிலம் கேட்ட பாரதி கூட,வேறெந்த மரத்தையும் கேட்காமல்,”பத்துப் பன்னிரண்டு தென்னை மரம் பக்கத்திலே வேண்டும்” என்றுதான் கேட்கிறான்.

நேற்று விநாயகர் சதுர்த்தி.

வேண்டுதல் நிறைவேற,விநாயகருக்குச் சிதறுகாய்(தேங்காய்) உடைப்பது வழக்கம்.

சதுர்த்திப் பிரசாதங்களில் மிக முக்கியமானது,தேங்காய்ப் பூரணத்தில் செய்த கொழுக்கட்டைதான்


தேங்காய் தினம் நேற்று அமைந்தது மிகப் பொருத்தம்தான்.

திங்கள், செப்டம்பர் 02, 2019

போவோமா,புதுக்கோட்டைக்கு.......


நான் புதுக்கோட்டைக்கு இன்று வரை போனதில்லை.

போக வேண்டும் என்றொரு ஆசை ,பலமான ஆசை சில முறை எழுந்ததுண்டு.

 1967

ஒரு பகலில் ஓடும் ரயிலில்  சந்தித்த நட்பை மாலை பிரிகையில் அந்நட்பு புதுக்கோட்டையைச்  சேர்ந்தது என்பது தவிர வேறெதுவும் அறியாமல்  திரும்பிய காலம்.

சில நாட்கள்சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்ததுண்டு. போய்த் தேடிப்
பார்க்கலாமா என.னாலும் ஓர் அச்சம்.   ஊரில் எங்கென்று தேடுவது.அங்கும் இங்கும் அலைந்து யாருக்காவது ஐயம் ஏற்பட்டால்?எனவே போகாமலே இருந்து விட்டேன்.இன்றும் புதுக்கோட்டை என்றால் நினைவுக்கு வருவது அந்த அழகிய நட்பே!

மற்றொரு தொடர்பு சாந்தானந்த சுவாமிகள்.என் உறவினர் ஒருவர் என்னை அவரது புவனேச்வரி அதிஷ்டானத்தில்  ஆயுட்கால உறுப்பினர் ஆக்கி விட்டார்.பணம் நான்தான் கட்டினேன்!முன்பெல்லாம் என் பிறந்தநாளன்று குங்குமப் பிரசாதம் வந்து கொண்டிருந்தது;சுவாமிகளையும் நான் புதுக்கோட்டையில் பார்க்கவில்லை,சேலத்தில்தான் பார்த்தேன்.


என் அம்மாவின் சித்தி,புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள்,கல்யாண சமையலைக் கூடக் கவனிக்கும் சாமர்த்தியம் பெற்றவர்கள்.புதுக்கோட்டைக் காரர்கள் எல்லாருமே சமையலில் விற்பன்னர்களோ என நினைக்கிறேன்


புதுக்கோட்டைப் பிரபலம் என்றால் என் நினைவுக்கு வருபவர் ஜெமினி கணேசன் அவர்கள்.

இப்போது போகலாமா என ஒரு ஆசை!

ஆனால் கொல்லன் உலையில் ஈக்கென்ன வேலை என்று என் மனம் என்னையே கேட்கிறது!
நானும் ஒரு காலத்தில் தீவிரமாக  தமிழில் வலைப்பதிவுகள் எழுதிக் கொண்டிருந்தவன்தானே....இது நான்.
ஆனால் இப்போது நடக்கப் போவது பதிவர் சந்திப்பு இல்லையே,இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்தானே என்கிறது மனம்.
அதனால் என்ன?..நான்
அதனால்தான் ஆரம்பத்திலேயே சொன்னேன்,கொ உ.ஈ எ வே என்று.
உனக்குத் தமிழில் எழுதுவதைத் தவிர  வேறு எந்தத் தொழில் நுட்பமும் தெரியாது.அந்தக்காலத்திலேயே உன் வலைப்பூவில் பிரச்சினை என்றால் உடனே   திண்டுக்கல்லுக்குத் தொலை பேசி உதவி கேட்பாய்.
திண்டுக்கல்லா?  நான்.
ஆம்.திண்டுக்கல் என்றால் போதும்.அவரைத்தான் குறிக்கும்.
ஓ!
ஆம்.அதனால்தான் சொன்னேன் நீ புதுக்கோட்டைக்குப்போய் உருப்படியாக என்ன செய்யப் போகிறாய் என்று.....
எழுத்தில் மட்டுமே பார்த்த நண்பர்களை நேரில் சந்திப்பேன்.நானும் ஏதாவது கற்றுக் கொள்வேன்.கல்லாதது உலகளவு அல்லவா?
என்னவோ செய்.

பேச்சு முடிந்தது
என்ன செய்யப் போகிறேன்?

கீழே............


 கணினித் தமிழ்ச் சங்கம்புதுக்கோட்டை

இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம் - 4 


இடம் – ஜெஜெ.கல்லூரி சிவபுரம், (மதுரைச்சாலை) புதுக்கோட்டை
நாள்- அக்டோபர்-12,13 சனி,ஞாயிறு காலை 9மணி – மாலை 5மணி
(அழைப்பிதழ் விரைவில், இது ஒரு முன்தெரிவிப்பே)

 பங்கேற்பாளர்கள் இணைய இணைப்புடன் கூடிய செல்பேசி / மடிக்கணினிகொண்டுவருதல் நல்லது. 
மற்றவர்க்கு செய்துதர முயற்சி செய்வோம்
இரண்டுநாள் மதியஉணவு, கையேடு, தேநீர்ச் செலவுக்காக 
ரூ.200 (மாணவர்க்கு ரூ.100) நன்கொடை வரவேற்கப்படுகிறது.

பங்கேற்பாளர் விவரம் தந்து முன்பதிவு செய்தல் அவசியம்

தலைமை
முனைவர் நா.அருள் முருகன் அவர்கள்
கணினித் தமிழ்ச்சங்க நிறுவுநர்
(இணைஇயக்குநர், பள்ளிக்கல்வித்துறை, சென்னை)

தொடக்கவுரை
முனைவர் .இராசேந்திரன் அவர்கள்
ஆசிரியர் - கணையாழி – இலக்கிய இதழ்
(மேனாள் துணை வேந்தர் –தமிழ்ப்பல்கலைக் கழகம்) 

முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்குவோர்
திருமிகு நா.சுப்பிரமணியன் அவர்கள்,
செயலர் ஜெ.ஜெ.கல்விக் குழுமம், புதுக்கோட்டை
முனைவர் ஜ.பரசுராமன் அவர்கள் 
      முதல்வர்ஜெ.ஜெ.கலைஅறிவியல் கல்லூரி       
முனைவர் கு.தயாநிதி அவர்கள்
       தமிழ்த்துறைத் தலைவர்

---------- பயிற்சியளிக்கும் கணித்தமிழ் வல்லுநர்கள் --------
முனைவர் மு.பழனியப்பன் காரைக்குடி,  திண்டுக்கல் தனபாலன்சிவ.தினகரன் காஞ்சி, தி.ந.முரளிதரன் சென்னை பிரின்சு என்னாரெசுப் பெரியார் சென்னை, நீச்சல்காரன்சென்னை, எஸ்.பி.செந்தில்குமார் மதுரை,  முனைவர் பா.ஜம்புலிங்கம் தஞ்சாவூர், கரந்தை ஜெயக்குமார், மற்றும் 
புதுக்கோட்டை நண்பர்கள் - 
யு.கே.கார்த்திகஸ்தூரிரெங்கன்எஸ்.இளங்கோ, புதுகை செல்வா,  த.ரேவதி,ஸ்ரீமலையப்பன்காயத்ரிஉதயகுமார், திவ்யபாரதி

-------------------ஒருங்கிணைப்பாளர்கள்-------------------
நா.முத்துநிலவன்ராசி.பன்னீர்செல்வன்மு.கீதா, இரா.ஜெயலட்சுமிகு.ம.திருப்பதி,எஸ்.டி.பஷீர்அலிமகா.சுந்தர்.மாலதி, கே.ஸ்டாலின் சரவணன்சு.மதியழகன்மைதிலி,தென்றல்பொன்.கருப்பையா மீரா.செல்வக்குமார், சோலச்சி. என்.கே.சூரியா
----------------------------------------------
ஒருங்கிணைப்பில் இணைந்து பணியாற்ற விரும்பும் புதுகை நண்பர்களோ, பயிற்சிமுகாமில் பயிற்சி தர விரும்பும் வல்லுநர்களோ விவரம்தெரிவித்தால் அவசியம் பயன்படுத்திக் கொள்வோம். 
வருக வருக!

பயிற்சிக் கட்டணம் செலுத்த இயலாதவர்களுக்காக உதவிசெய்ய, பங்களிக்க விரும்பி நன்கொடை தர விரும்புவோர் நமது ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.கீதா அவர்களை தொடர்பு கொண்டு நன்கொடை தந்தால் மிகவும் மகிழ்வோம். வழக்கம் போல முகாம் முடிந்து, வரவு செலவு விவரம் இங்குத்தரப்படும்

இணையத் தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் விவரம்
(1)  கணினியில் தமிழ் எளிய அறிமுகம் –
(2)  இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் வாய்ப்பும் – உரை –
(3)  வலைத்தளங்களில் செய்யவேண்டியதும், செய்யக் கூடாததும்
(4)  தமிழில் வலைப்பக்கம் (Blog) உருவாக்கம் விரிவாக்கம் –
(5)  தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல்
(6)  தமிழில் புலனம் (whatsaap) செயல்பாட்டுப் பயிற்சி -
(7)  தமிழில் முகநூல் (FaceBook) செயல்பாட்டுப் பயிற்சி –
(8)  தமிழில் இன்ஸ்டாகிராம் செயல்பாட்டுப் பயிற்சி –
(9)  தமிழில் சுட்டுரை(Twitter)செயல்பாட்டுப் பயிற்சி –
(10)          ,இணைய (Online) வணிக வாய்ப்புகளும் ஏய்ப்புகளும் –
(11)          தட்டச்சு செய்யாமலே குரல்வழிப் பதிவேற்றுதல் -
(12)          மின்னூல் (E.Book) / இலவசப் பதிவிறக்கம் பற்றிய தகவல்கள் 
(13)          கிண்டில் (Kindle) படித்தல்பதிவிறக்கிச் சேமித்தல்
(14)          படைப்புகளை You-Tubeஇல் ஏற்றுதல் செயல்பாட்டுப் பயிற்சி-
(15)          மின்-சுவரொட்டி (Flex) தயாரித்தல்செயல்பாட்டுப் பயிற்சி -  
(16)          பார்க்க வேண்டிய குறும்படங்கள் (மாலை,இரவு) 

இவைபற்றிய கையேடுகள்  இலவசமாக வழங்கப்படும்
(இந்த முயற்சியை நமது வலைச்சித்தர்
திண்டுக்கல் தனபாலன் மேற்கொண்டு வருகிறார்.)
---------------------------------------------------------------------------------------------------------------------------------
பதிவு பார்த்து, புதுக்கோட்டையின் புகழ்வாய்ந்த ”எம்.எஸ்.ஸ்க்ரீன்ஸ்” ஆசிரியர் எம்.எஸ்.ரவி அவர்கள் தொடர்பு கொண்டு, “நான் ஃபோட்டோ ஷாப் வழியாக எப்படி போஸ்டர்கள் வடிவமைப்பது என்பது பற்றிச் சொல்கிறேன்” என்று சொன்னார். நமது அமைப்புகளில் எப்படியும் மாதம் 4,5கூட்டங்கள் நடக்கின்றன. அவற்றுக்கு அழைப்பிதழ், போஸ்டர்கள் வடிவமைக்க நாமே தெரிந்து கொண்டால் எவ்வளவு நல்லது என்று தோன்றியது! எனவே அவரது யோசனையைப் 
பயிற்சி முகாமில் செயல்படுத்தலாம் என்பதுஎன்கருத்து 
– நா.மு., 01-09-2019 இரவு 10.20

--------------------------------------------------------------------------------------------------------------

ஒரு வேண்டுகோள்...
இதைப் படிக்கும் நண்பர்கள். 
தமக்குத் தொடர்புள்ள சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து
இணையத்தமிழ் வளர்ச்சிக்கு
 உதவிடவேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இணையத்தால் இணைவோம்!
---------------------------------------
மேற்காணும் தலைப்புகளே அன்றி வேறு தலைப்புகளும் அவசியம் கற்பிக்கப்படவேண்டும் என்று கருதுவோர், அதுபற்றிய தகவல்களோடு, வணிகநோக்கிலன்றி வந்து கற்பிக்கத் தக்க வல்லுநர் விவரங்களையும் தந்துதவ அன்புடன் வேண்டுகிறேன், வணக்கம்.
----------------------------------------------------------
நமது முந்திய பயிற்சி முகாம்களைப் பற்றி அறிய -
--------------------------------- 
பயிற்சி முகாம் தொடர்பான மேல்விவரம் அறிய 

        மின்னஞ்சல் – muthunilavanpdk@gmail.com,
        செல்பேசி எண்கள்-
நா.முத்துநிலவன் 9443193293,    கவிஞர் மு.கீதா-9659247363