தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜூன் 07, 2013

பிறக்கப் போகும் குழந்தை ஆணா?பெண்ணா?--இது உங்கள் கையில்!



இது ஒரு சிறிய பதிவு!

நம் நாசியில் மூச்சு மாறி மாறி இயங்குவது உங்களுக்குத் தெரியும்.

வலது புறம் சிறிது நேரம்,இடது புறம் சிறிது நேரம் என மாறி மாறியே சுவாசம் வருகிறது.

இதை அடிப்படையாகக் கொண்டு திருமூலர்,  பிறக்கும் குழந்தையின்  பால் என்னவாக இருக்கும் எனத் தீர்மானிக்கிறார்,

புணர்ச்சியின்போது,ஆணின் மூச்சு வலப்பக்க நாசியில் (இதை சூரிய கலை என்று சொல்வார்கள்)இயங்குமானால் பிறக்கும் குழந்தை ஆணாகவும் இடப்பக்க நாசியில் இயங்கினால்(இதைச் சந்திர கலை என்று சொல்வார்கள்)  பெண் குழந்தையாகவும் இருக்கும்!

பிராண வாயுவுடன் அபான வாயு எதித்தால் சுக்கிலம் சிதைந்து இரட்டைக் குழந்தையாகும்!

அபூர்வமாக,இரு பக்கமும் மூச்சு இயங்கினால் குழந்தை ஆணுமின்றிப் பெண்ணுமின்றிப் போகும் .

இது திருமூலர் கூற்று,

அந்தப் பாடல்.........
”குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
 குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
 குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
 குழவி அலிஆகும்கொண்ட காலொக்கிலே” (திருமந்திரம்-482)

27 கருத்துகள்:

  1. பயனுள்ள பதிவு தேவைப்படுவோருக்கு .

    பதிலளிநீக்கு
  2. இது போன்ற பதிவுகளைத் திருமூலர் மேல் உள்ள நம்பிக்கையால் போட்டீர்களா? இல்லை .. இது உண்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் போட்டீர்களா?

    தலைப்பிலும் ‘அனுபவம்’ என்று வேறு போட்டிருக்கிறீர்கள் ...!

    “நல்ல” பதிவு !!

    இப்பின்னூட்டத்திற்காக மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தருமி ஐயா!இது திருமந்திரப்பாடலும் அதன் பொருளும் .என் கருத்து எதுவும் இல்லை;ஏற்றுக் கொள்வதோ ஒதுக்கித் தள்ளுவதோ,அவரவர் விருப்பம்;அனுபவம் என்றால் என் அனுபவம் அல்ல;திருமூலர் அனுபவம் எனக் கொள்ளலாம்!
      இது ஒரு திருமந்திரப்பதிவு; அவ்வளவே.
      நன்றி

      நீக்கு
    2. ஓ! உங்கள் கருத்து இது இல்லையா ...?!

      நல்லது.

      நன்றி, ஐயா.

      நீக்கு
    3. உறுதி படுத்தியவர் பவாானி சித்த வைத்தியர் ஒருவர்... அவரின் இரு மகனும் இதை முயற்ச்சித்து பெற்றாராம்
      இது உண்மை

      நீக்கு
  3. அட இப்பிடியும் இருக்கா ஆச்சர்யமா இருக்கே தல...!

    பதிலளிநீக்கு
  4. இந்தக் காலத்தில் எந்தக் குழந்தையும் சமம் தான் ஐயா...

    பதிலளிநீக்கு
  5. இது சரியா தவறா என மருத்துவ நிபுபுணர்கள் மட்டுமே சொல்லமுடியும். ஆனால் திருமூலர் இந்த காலத்து Scan / X Ray காட்டுவதை அந்த காலத்திலேயே பாடல் மூலம் சொல்லிவிட்டார் என்பது உண்மை!

    பதிலளிநீக்கு
  6. இனி நமக்கு தேவைப்படாது பித்தரே...விரும்பிய படி பெண் பிள்ளை கிடைத்தது...I am blessed...

    பதிலளிநீக்கு
  7. திருமூலருக்குத் திரும்பிட்டீங்களா.. வாங்க.

    பதிலளிநீக்கு
  8. இப்படில்லாம் ‘அந்த’ நேரத்தல ய‌ோசிச்சு செயல்பட்டுட்டிருக்க முடியுமா என்ன? உணர்ச்சிகள் பொங்கி வழியற அந்த நேரத்தைப் பத்தி திருமூலருக்கு அனுபவம் இல்லாம எழுதிட்டாருன்னு தோணுது. இந்தக் காலத்துல ஃபீமேல் சைல்டே மேல்! (திருமூலர்னு பாத்ததும் மதுரை சொக்கர் கிளம்பிட்டாருன்னு தெரியுது. வெல்கம்...!)

    பதிலளிநீக்கு
  9. ஐயா, தலைப்பில் சொல் குற்றம் உள்ளது. “இது உங்கள் கையில்” அல்ல, “இது உங்கள் மூக்கில்!!!” என்று வரவேண்டும் என்பது அடியேனின் அவதானிப்பு......மன்னித்தருள்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் முதலில் நினைத்த தலைப்பு அதுதான்(அறிஞர்கள் சிந்தனை ஒன்றுபடும்!).

      உங்கள் அவதானம் சரியே!

      நன்றி ஜூ....னியர்!

      நீக்கு
  10. உங்க பதிவை படிச்சுட்டு, ஒரு பக்கம் முக்கை யாராவது அடைத்துக் கொண்டு குறிப்பிட்ட குழந்தைக்கு முயற்சிக்கப் போகிறார்கள்.:))

    எனக்கு எப்போதும் ஒரு பக்கம் மூக்கு கிட்டதட்ட அடைப்பாகத் தான் இருக்கும், முதலில் பிறந்தது பெண், அடுத்தது ஆண்.
    :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்க பதிவை படிச்சுட்டு, ஒரு பக்கம் முக்கை யாராவது அடைத்துக் கொண்டு குறிப்பிட்ட குழந்தைக்கு முயற்சிக்கப் போகிறார்கள்.:))//

      ஹா ஹா ஹா!
      நன்றி கோவி கண்ணன்

      நீக்கு
  11. மூக்கில் இருக்கிறதா விஷயம்! :)

    திருமூலர் பாடல் நன்றாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  12. நன்று ஐயா இது ஆண்களுக்கு மட்டும் தான் பொறுந்துமா பெண்களுக்கு பொறுந்தாதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உரையாசிரியர்கள் ஆண் என்றே கொண்டுள்ளனர்;விந்து ஆணிடமிருந்து வருவதால் இருக்கலாம்!
      வருகைக்கும் ,ஐயத்துக்கும் நன்றி மோகன்

      நீக்கு