தொடரும் தோழர்கள்

வெள்ளி, அக்டோபர் 28, 2011

நான்தான் சமையக்காரி அலமேலு!

நான்தான் அலமேலு.வெறும் அலமேலுன்னு சொல்றதை விட சமையக்காரி அலமேலுன்னு சொன்னா எல்லாருக்கும் நன்னாத் தெரியும்.இப்பக் கூட ஆடிட்டர் ஆத்துக்கு,தல தீபாவளிக்கு ஸ்வீட் பண்ணத்தான் போயிண்டிருக்கேன்.    

பொறக்கும் போதே நான் சமையக்காரியாப் பொறக்கலே!காலக் கோளாறு, சமையக்காரி ஆயிட்டேன்.வயத்துப்பொழப்புக்காகக் கரண்டியைக் கையிலெ எடுத்தேன்.முதல்ல ஆத்தில இருந்தவாளுக்குச் சமைச்சுப் போட்டுண்டி ருந்தேன். அப்பறமா ஊருக்கே சமைக்க ஆரம்பிச்சுட்டேன்.


நான்  பொறந்து  வளந்த கதையெல்லாம் இப்ப வேண்டாம்.எங்க அப்பா எனக்கு நல்ல மாப்பிள்ளையாப் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணி வச்சார்.ரொம்பப் பெரிய வேலையில இல்லாட்டாலும் ஏதோ சாப்பாட்டுக்கும் கட்டிக்கத் துணிக்கும் கஷ்டப்படாத வாழ்க்கை.ஆனா திடீர்னு ஒரு நாள் அவர் என்னையும் எங்க பிள்ளை நந்துவையும் நிர்க்கதியா விட்டுட்டுக் கண்ணை மூடிட்டார்.


நந்து அப்போ எட்டாங்கிளாஸ் படிச்சிண்டிருந்தான்.அவர் இருக்கும்போது சொல்வார்,”நீ ரொம்ப நன்னாச் சமைக்கறேடீ”ன்னு. அந்தச் சமையல்தான் கைகுடுத்துது.எல்லாராத்து விசேஷத்துக்கும் சமைக்க ஆரம்பிச்சேன். எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு. அலமேலுவை நம்பி ஒரு கல்யாணச் சமையலையே குடுக்கலாம்னு சொல்ல ஆரம்பிச்சா!கூடவே அப்பளாம், வடாம் எல்லாம் பண்ணி விக்க ஆரம்பிச்சேன்.ஒரு மாதிரி கஷ்டப்பட்டு நந்துவை பி.காம் படிக்க வச்சேன்.


அவனும் கெட்டிக்காரன்.கஷ்டம் தெரிஞ்சவன். நன்னாப் படிச்சு ஃபர்ஸ்ட் கிளாஸில பாஸ் பண்ணினான்.ஏதோ பரிட்சை எழுதி தில்லி செகரடே ரியட்ல வேலையும் கெடச்சது.நான் அவன்கிட்ட சொல்லிட்டேன் நான் தில்லிக்கெல்லாம் வரமாட்டேன்னு.பாவம் கொழந்த.தனியாய தானே பொங்கிச் சாப்பிட்டிண்டு 5 வருஷம் ஓட்டினான்.எனக்கும் மாசா மாசம் பணம் அனுப்பிசிண்டிருந்தான்.
அப்பறம்தான் எழுதினான் அவன்கூட வேலை பாக்கிற மாலதியை லவ் பண்றதா. நல்ல வேளை,அவா பிராமணாதான்னும் எழுதியிருந்தான்.
 

எதுக்குக் கதையப் பெரிசா வளக்கணும்? கல்யாணம் பண்ணிண்டான். கல்யாணத்துக்கப்புறமும் நான் இங்க,அவா டில்லியிலதான். கொஞ்ச நாள் போச்சு.நந்து என்னைக் கட்டாயப் படுத்திக் கூப்பிட ஆரம்பிச்சான்,அம்மா இங்கயே வந்து இரும்மான்னு.சரி,அவன் இவ்வளவு கூப்பிட்றானே, போய்ப் பாக்கலாமேன்னு போனேன்.


போய் ரெண்டுநாள் கழிச்சு நந்து சொன்னான் அம்மா இவளுக்கு உன் சமையல் எல்லாம் நன்னாச் சொல்லிக் கொடுன்னு.நானும் அவ சமைக்கும்போது கூடவே இருந்து பாத்துச் சொல்லிக் குடுக்க ஆரம்பிச்சென்.ஒரு வாரம் கழிச்சுப்பாத்தா,சமையல் பூரா நாந்தான் செய்யறேன்;அவ சமையலறைப் பக்கம் வரதையே விட்டுட்டா! ரெண்டு பேரும் கார்த்தால 8 மணிக்குப் புறப்பட்டுடுவா.அதுக்குள்ள டிஃபன் பண்ணிகுடுத்துச் சமையல் பண்ணி பாக்சில போட்டு, மத்தியானம் இட்லிக்கு அரைச்சு வச்சு,ராத்திரிக்கு டிஃபன் பண்ணி வக்கணும் ,அவா ராத்திரி வந்தா டி.வி முன்னால ஒக்காந்துடுவா!


மத்தியானம் அக்கம் பக்கத்தில நம்ம பாஷைல பேசவும் ஆளில்ல. எங்கேயும் வெளிலயும் போக முடியல.ஒரே ஜெயில்தான்.


ஒரு மாசம் ஆச்சு.ஒரு நாள் அவ சொன்னா,இந்த மாசம் எண்ணெய், பருப்பெல்லாம் நிறைய ஆயிருக்கே.ஏன் இப்படி.இனிமே  கொஞ்சம் பாத்துச் செலவழியுங்கோன்னு.அவன் அதைக் கேட்டுண்டு இடிச்ச புளியாட்டம் நிக்கறான்.



இன்னொரு நாள்,கை தவறிப் பாலைக் கொட்டிட்டேன்.அதுக்குக் கன்னா பின்னான்னு ராட்சசி மாதிரி சத்தம்போட்டா.எனக்குப் பொறுப்பே இல்லையாம்.அப்பவும் அவன் மலங்க மலங்க முழிச்சிண்டு நிக்கறான்.ஒரு வார்த்தை பேசலை.


அப்பத்தான் முடிவு பண்னினேன்.ஊருக்குப் போயிட வேண்டியது தான்னு.நல்ல வேளையா குளிர் ஆரம்பிக்கவே அதைச் சாக்கா வச்சு ஊருக்குப் போயிட்டு வரேன்னு சொல்லிப் புறப்பட்டுட்டேன்.


ஊருக்கு வந்து சேர்ந்ததுமே வக்கீலாத்து மாமி சொல்றா,என் வயத்தில பாலை வார்த்தேடி,பெண்ணு பிரசவத்துக்கு வரா, ஒண்டியா என்ன பண்றதுன்னு தவிச்சுண்டிருந்தேன்னு. அவ்வளோ சந்தோஷம் அவாளுக்கு!
ஆச்சு.இப்பத்தீபாவளி வந்துடுத்து ,வேலை சரியா இருக்கு,ஆனா சந்தோஷமா இருக்கு.


எங்கயோ பாஷை தெரியாத ஊர்ல,யாரிட்டயும் பேச முடியாம, வெளில வாசல்ல போக முடியாம வீட்டுக்குள்ளயே அடஞ்சு கிடந்து  சம்பளம் இல்லாத
சமையக்காரியா இருக்கறதை விட,மனுஷாளோட பேசிண்டு, கோவில் குளம்னு போயிண்டு, நாலு பேருக்கு ஒத்தாசையா இருந்து நாலு காசு சம்பாதிச்சுண்டு
சமையக்காரியா இருக்கறது மேல்தானே!

என்ன சொல்றேள்?

59 கருத்துகள்:

  1. சரியான முடிவாகத்தான் எடுதிருப்பதாகப் படுகிறது!

    அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஓரு சராசரி பெண்ணின் வாழ்க்கையை சொல்லி நிற்கும் பதிவு.....அருமை

    பதிலளிநீக்கு
  3. எல்லா அம்மாக்களின் கதியும் கதையும் இப்படி தான் சார் இருக்கு

    பதிலளிநீக்கு
  4. என்ன ஒரு கொடுமை! இப்படிப் பல பிள்ளைகள் இன்று இருப்பதும் நிதர்சனம்தான். கடைசிப் பாரா அட்சர லட்சம் பெறும். நன்று!

    பதிலளிநீக்கு
  5. அமைதியான கிராமத்து வாழ்க்கைக்கு ஈடு இணை இல்லை ....

    பதிலளிநீக்கு
  6. இராஜராஜேஸ்வரி கூறியது...

    //சரியான முடிவாகத்தான் எடுதிருப்பதாகப் படுகிறது!

    அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//
    நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  7. K.s.s.Rajh கூறியது...

    //ஓரு சராசரி பெண்ணின் வாழ்க்கையை சொல்லி நிற்கும் பதிவு.....அருமை//
    நன்றி ராஜ்.

    பதிலளிநீக்கு
  8. ஜ.ரா.ரமேஷ் பாபு கூறியது...

    //எல்லா அம்மாக்களின் கதியும் கதையும் இப்படி தான் சார் இருக்கு//
    நன்றி ரமேஷ் பாபு.

    பதிலளிநீக்கு
  9. கணேஷ் கூறியது...

    // என்ன ஒரு கொடுமை! இப்படிப் பல பிள்ளைகள் இன்று இருப்பதும் நிதர்சனம்தான். கடைசிப் பாரா அட்சர லட்சம் பெறும். நன்று!//
    நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  10. கக்கு - மாணிக்கம் கூறியது...

    //நன்னா இருக்கு கொழந்தே!//
    நன்றி கக்கு.
    உங்கள் பழையகாலப் புகைப் படத்தை எடுத்துவிட்டு இப்போதைய புகைப்படத்தைப் போடுங்களேன்!

    பதிலளிநீக்கு
  11. கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

    //ஒரு சமூக அவலத்தின் பிரிதிபலிப்பு...//
    நன்றி சௌந்தர்.

    பதிலளிநீக்கு
  12. koodal bala கூறியது...

    // அமைதியான கிராமத்து வாழ்க்கைக்கு ஈடு இணை இல்லை ....//
    ஹூம்...!
    நன்றி கூடல் பாலா.

    பதிலளிநீக்கு
  13. நச்!...அண்ணே கொன்னுட்டேள் போங்கோ!

    பதிலளிநீக்கு
  14. ஒவ்வொரு மனிதனும் சுயநலவாதிதான் என்பதை அழகாக படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள்.
    நல்ல வேளை! அம்மா அலமேலு ‘பெத்த மனம் பித்து’ என்று மகனோடு உழலாமல் திரும்பவும் சென்னை வந்து தனித்து நின்று சுதந்திரமாக வாழ முயற்சித்தது நல்ல முடிவு.

    பதிலளிநீக்கு
  15. ஓரு சராசரி பெண்ணின் வாழ்க்கை அவலம் ..

    பதிலளிநீக்கு
  16. விக்கியுலகம் கூறியது...

    // நச்!...அண்ணே கொன்னுட்டேள் போங்கோ!//
    நன்றி விக்கி.

    பதிலளிநீக்கு
  17. வே.நடனசபாபதி கூறியது...

    // ஒவ்வொரு மனிதனும் சுயநலவாதிதான் என்பதை அழகாக படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள்.
    நல்ல வேளை! அம்மா அலமேலு ‘பெத்த மனம் பித்து’ என்று மகனோடு உழலாமல் திரும்பவும் சென்னை வந்து தனித்து நின்று சுதந்திரமாக வாழ முயற்சித்தது நல்ல முடிவு.//

    நன்றி சபாபதி அவர்களே.

    பதிலளிநீக்கு
  18. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //ஓரு சராசரி பெண்ணின் வாழ்க்கை அவலம் ..//

    நன்றி கருன்.

    பதிலளிநீக்கு
  19. suryajeeva கூறியது...

    //நொறுக்கி தள்ளிட்டீங்க...//
    நன்றி சூரியஜீவா.

    பதிலளிநீக்கு
  20. பணம் என்பது ஒரு காரியமல்ல ..., மன திருப்தி தான் முக்கியம் என நச்சென சொல்லி உள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  21. எவ்வளவு பெரிய ஏமாற்றத்தை
    எவ்வளவு எளிதாக ஜீரணித்துக் கொள்கிறாள் அலமேலு
    அவள் சமயல்காறி அலமேலுவாகப் படவில்லை
    பிரஸ்டீஜ் அலமேலுவாகத்தான் படுகிறாள்
    அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 8

    பதிலளிநீக்கு
  22. சராசரிப்பெண்ணின் முடிவும் சரிதான்.. பகிர்வு உயிரோட்டம் உள்ளதாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  23. அருமையாயிருக்கு கதை..

    //எங்கயோ பாஷை தெரியாத ஊர்ல,யாரிட்டயும் பேச முடியாம, வெளில வாசல்ல போக முடியாம வீட்டுக்குள்ளயே அடஞ்சு கிடந்து சம்பளம் இல்லாத
    சமையக்காரியா இருக்கறதை விட,மனுஷாளோட பேசிண்டு, கோவில் குளம்னு போயிண்டு, நாலு பேருக்கு ஒத்தாசையா இருந்து நாலு காசு சம்பாதிச்சுண்டு
    சமையக்காரியா இருக்கறது மேல்தானே!//

    இந்த அலமேலு சுதாரிச்சுக்கிட்டா.. இன்னும் எத்தனை அலமேலுகள் வெளிய வரமுடியாம பாசவலையில் சிக்கித்தவிக்கிறாங்களோ..

    பதிலளிநீக்கு
  24. உங்கள் நண்பன் சொன்னது…

    // பணம் என்பது ஒரு காரியமல்ல ..., மன திருப்தி தான் முக்கியம் என நச்சென சொல்லி உள்ளீர்கள்//

    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  25. Ramani கூறியது...

    //எவ்வளவு பெரிய ஏமாற்றத்தை
    எவ்வளவு எளிதாக ஜீரணித்துக் கொள்கிறாள் அலமேலு
    அவள் சமயல்காறி அலமேலுவாகப் படவில்லை
    பிரஸ்டீஜ் அலமேலுவாகத்தான் படுகிறாள்
    அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 8//
    நன்றி ரமணி.

    பதிலளிநீக்கு
  26. விச்சு கூறியது...

    //சராசரிப்பெண்ணின் முடிவும் சரிதான்.. பகிர்வு உயிரோட்டம் உள்ளதாக இருந்தது.//
    நன்றி விச்சு.

    பதிலளிநீக்கு
  27. @துளசி கோபால்
    நன்றி துளசி கோபால் அவர்களே.

    பதிலளிநீக்கு
  28. @துளசி கோபால்
    நன்றி துளசி கோபால் அவர்களே.

    பதிலளிநீக்கு
  29. அமைதிச்சாரல் கூறியது

    அருமையாயிருக்கு கதை..

    //எங்கயோ பாஷை தெரியாத ஊர்ல,யாரிட்டயும் பேச முடியாம, வெளில வாசல்ல போக முடியாம வீட்டுக்குள்ளயே அடஞ்சு கிடந்து சம்பளம் இல்லாத
    சமையக்காரியா இருக்கறதை விட,மனுஷாளோட பேசிண்டு, கோவில் குளம்னு போயிண்டு, நாலு பேருக்கு ஒத்தாசையா இருந்து நாலு காசு சம்பாதிச்சுண்டு
    சமையக்காரியா இருக்கறது மேல்தானே!//

    //இந்த அலமேலு சுதாரிச்சுக்கிட்டா.. இன்னும் எத்தனை அலமேலுகள் வெளிய வரமுடியாம பாசவலையில் சிக்கித்தவிக்கிறாங்களோ..//

    நன்றி அமைதிச்சாரல்.

    பதிலளிநீக்கு
  30. பெண்ணின் பெருமை .. அழகிய முடிவு

    பதிலளிநீக்கு
  31. கதையின் முதல் வரியிலேயே கதையின் முழு சாராம்சத்தை சொல்லி விட்டு ஆரம்பித்தது மிக அருமை சார்.

    பதிலளிநீக்கு
  32. சரியான முடிவுதான் எடுத்துருக்காங்க...

    பதிலளிநீக்கு
  33. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    // பெண்ணின் பெருமை .. அழகிய முடிவு//
    நன்றி ராஜா.

    பதிலளிநீக்கு
  34. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    // இன்று என் வலையில்

    அரசியல்வாதி ஆவது அப்படி ?//
    படிச்சு ஓட்டும் கமெண்டும் போட்டாச்சு.

    பதிலளிநீக்கு
  35. பாலா கூறியது...

    // கதையின் முதல் வரியிலேயே கதையின் முழு சாராம்சத்தை சொல்லி விட்டு ஆரம்பித்தது மிக அருமை சார்.//
    நன்றி பாலா.

    பதிலளிநீக்கு
  36. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //சரியான முடிவுதான் எடுத்துருக்காங்க...//
    கையில் தொழில் இருக்கும்போது என்ன கவலை?

    பதிலளிநீக்கு
  37. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //பாவம் அம்மாக்கள்....!!!//
    நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  38. பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.

    பதிலளிநீக்கு
  39. அவங்க நல்ல முடிவைத்தான் எடுத்திருக்காங்க.

    பதிலளிநீக்கு
  40. அருமையான பகிர்வு
    பதார்த்தம் செய்பவளின் யதார்த்த வடிவு

    பதிலளிநீக்கு
  41. அலமேலுவின் நிலைமையில் பலரும் உள்ளனர் . காரணம் தாய்க்குபின் தான் தாரம் என்பதை மறந்ததினால் . வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  42. ஆமாம் அய்யா! சமையல்காரயாய் இருப்பது மேல்தான்!

    பதிலளிநீக்கு
  43. FOOD கூறியது...

    //பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.//

    உண்மை.நன்றி சங்கரலிங்கம்.

    பதிலளிநீக்கு
  44. ராஜி கூறியது...

    // தமிழ்மணம் 9//
    நன்றி ராஜி.

    பதிலளிநீக்கு
  45. ராஜி கூறியது...

    //அவங்க நல்ல முடிவைத்தான் எடுத்திருக்காங்க.//

    ஆம்!அவள் ஏன் எங்கோ போய்க் கஷ்டப்படவேண்டும்?

    பதிலளிநீக்கு
  46. A.R.ராஜகோபாலன் கூறியது...

    //அருமையான பகிர்வு
    பதார்த்தம் செய்பவளின் யதார்த்த வடிவு//
    நன்றி ஏ.ஆர்.ஆர்.

    பதிலளிநீக்கு
  47. Vasu கூறியது...

    //அலமேலுவின் நிலைமையில் பலரும் உள்ளனர் . காரணம் தாய்க்குபின் தான் தாரம் என்பதை மறந்ததினால் . வாசுதேவன்//
    உண்மை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  48. shanmugavel கூறியது...

    //ஆமாம் அய்யா! சமையல்காரயாய் இருப்பது மேல்தான்!//
    நன்றி சண்முகவேல்.

    பதிலளிநீக்கு
  49. மன்னிக்கவும் ஐயா நேற்று நெட் கொஞ்சம் பிரச்சனை ஆகி விட்டது ,அதனால் பதிவும் போடவில்லை நான்
    த.ம 11

    பதிலளிநீக்கு
  50. இல்லத்தரசிகளையும் எம் சமூகம் சமையற்காரி போன்றே நடத்துகிறது என்பதனை இப் பதிவின் மூலம் சொல்லியிருக்கிறீங்க.

    பதிலளிநீக்கு
  51. என்ன சொல்றது, நன்னா முடிவு எடுத்திருக்கேள், பேஷா இருங்கோ.

    பதிலளிநீக்கு
  52. எப்பவும், எந்த வயசிலும், பெண்கள் தைர்யத்தை இழக்கக்கூடாது என்பதற்கு இது வெளிப்படுத்துகின்றது. நல்ல செய்தி தான்.

    "மணியன்"

    பதிலளிநீக்கு