தொடரும் தோழர்கள்

வியாழன், அக்டோபர் 06, 2011

ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார்!

ஸ்டீவ் ஜாப்ஸ்-1955-2011
.........................................

சிலர் பெருமையோடு பிறக்கிறார்கள்.

சிலர் மீது பெருமை வலிந்து திணிக்கப்படுகிறது.

சிலர் பெருமையைச் சம்பாதிக்கிறார்கள்.----தங்கள் புத்தியால்,உழைப்பால்.

இந்தக் கடைசிப் பிரிவைச் சேர்ந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

ஆப்பிள் நிறுவனத்தின் கூட்டு நிறுவனரான ஜாப்ஸ்,கணைய புற்றுநோயினால்
மரணமடைந்தார்.

ஜாப்ஸ்,வாஸ்னியாக் இருவரும் சேர்ந்து முதல் ஆப்பிள் கணினியை,ஜாப்ஸின்,வீட்டுக் கேரேஜில் உருவாக்கினர்.

1984--முதல் மக்கிண்டாஷ் அறிமுகம்
2001- ஐ-பாட் அறி முகம்
2007 ஐ ஃபோன் அறிமுகம்
2010 ஐ பேட்(i pad) அறிமுகம்.

ஆகஸ்ட் மாதத்தில் தலமை செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகினார்.

தொழில் நுட்பவியலில் புதிய சிகரங்களைத் தொட்ட இந்தச் சாதனையாளருக்கு அஞ்சலி.

இவரது மறைவுச் செய்தி அட்லாண்டாவில் இருக்கும் என் அண்ணன் மகளால் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது-----அவளது ஐ பேட் வழியாக.

what a fitting tribute!







44 கருத்துகள்:

  1. மிகவும் வருந்ததக்க செய்தி, நானும் கேள்விப்பட்டேன் ஆனால் நம்ப இயலவில்லை. இச்செய்தி பொய்யாக இருக்கவேண்டுமென்றே என் ஆசை...

    சகாப்தம் முடிவடைந்தது...

    பதிலளிநீக்கு
  2. இறந்தாலும் வாழக்கூடிய மனிதர்கள் இவர்கள்...

    பதிலளிநீக்கு
  3. அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் .

    பதிலளிநீக்கு
  4. வருத்தமான செய்தி ஐயா ,எனது அஞ்சலி

    பதிலளிநீக்கு
  5. சில மனிதர்கள் மரித்தாலும் உயிரோடு இருக்கிறார்கள், அந்த வரிசையில் இவரும் ஒருவர்....!!!!!!!

    பதிலளிநீக்கு
  6. மிகத் திறமையான மனிதர்.... :( அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்....

    பதிலளிநீக்கு
  7. சிலர் பெருமையோடு பிறக்கிறார்கள்.

    சிலர் மீது பெருமை வலிந்து திணிக்கப்படுகிறது.

    சிலர் பெருமையைச் சம்பாதிக்கிறார்கள்.----தங்கள் புத்தியால்,உழைப்பால்.

    இந்தக் கடைசிப் பிரிவைச் சேர்ந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.//அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் .

    பதிலளிநீக்கு
  8. ////
    இவரது மறைவுச் செய்தி அட்லாண்டாவில் இருக்கும் என் அண்ணன் மகளால் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது-----அவளது ஐ பேட் வழியாக/////

    ஆகா அவர் அறிமுகப்படுத்தியது அவர் மரணச்செய்தியை உலகெங்கும் சொல்கின்றது......

    இவருக்கு அஞ்சலிகள்

    பதிலளிநீக்கு
  9. சாதித்தவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் அஞ்சலி!

    பதிலளிநீக்கு
  10. அவர் இறந்தாலும் வாழ்வார்

    பதிலளிநீக்கு
  11. இறந்தும் வாழும்
    இறவா மாமனிதர்





    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  12. இந்த நூற்றாண்டின் எடிசன்...

    பதிலளிநீக்கு
  13. அவர் உலகில் இருந்தார் என்பதற்கு சரியான தடங்களை பதிவு செய்திருக்கிறார்.வாழ்தலின் அடையாளம் அது.

    பதிலளிநீக்கு
  14. தன் வாழ்வை அர்த்தப்படுத்திய மனிதர்
    அவர் ஆன்மா சாந்தியடையட்டும்

    பதிலளிநீக்கு
  15. ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
    இவர்போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்’
    என்பார் கவிஞர் வாலி அவர்கள்.
    மாமேதைகள் மறைவதில்லை.
    திரு ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களும் அப்படித்தான்.
    அவரது ஆன்மா சாந்தியடைய இறைவன பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. வரலாற்றில் இடம் பிடித்த தொழில்நுட்ப மகானின் மரணம் மனதை வருத்துகிறது!

    பதிலளிநீக்கு
  17. இப்பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா! ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு வாடிக்கையாளர் என்ற அடிப்படையில் அவரது மரணம் எனக்கும் அதிர்ச்சிதான்!

    பதிலளிநீக்கு
  18. பெறுமதிமிகுந்த உயிர் ஒன்று இப்
    பூமியை விட்டு அகன்றதென்று
    அனைவரும் வருந்தும் வேளையிலே
    அந்த ஆன்மா என்றும் சாந்திபெற
    என் அஞ்சலியையும் தெரிவிக்கின்றேன் .
    மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு ....................

    பதிலளிநீக்கு