தொடரும் தோழர்கள்

படைப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படைப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மே 05, 2017

கொழு கொழு கன்னே......

சென்ற இடுகையின் முடிவில் கண்ணனைத் தவிர மற்ற ஆயர்கள் கையில் இருப்பது ஒரு கோலன்றிக் குழல் இல்லை என்று சொல்லியிருந்தேன்.

அது ஒருகதையை நினைவூட்டுகிறது.

குழந்தைகளுக்கான கதை.

படிக்கப் பொறுமை தேவை

கதை முடிவில் கதையின் முக்கியத்துவம் பற்றிச் சொல்வேன்

திங்கள், டிசம்பர் 21, 2015

வைகுண்ட ஏகாதசி.



ஏகாதசி என்பது அமாவாசை/பௌர்ணமிக்குப் பின் வரும் 11வது நாள்.(எல்லோருக்கும் தெரிந்த செய்தியைப் பெரிசா எழுத வந்துட்டியா?)மார்கழி மாதத்தில்,வளர் பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

எல்லா ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவது,வைகுண்ட பலன் தரும் என்பார்கள்(விரதம் என்றால் என்ன?-பட்டினிதான்.! மற்ற சில நியமங்களும் உண்டு.)ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும்.அக்காலத்தில் பெரியவர்கள் சொல்வார்கள்தினம் இரண்டு;வாரம் இரண்டு; மாதம் இரண்டு;வருஷம் இரண்டு என்று.மாதம் இரண்டு என்றால்,இரண்டு ஏகாதசிகளிலும் உண்ணா நோன்பை மேற்கொள்வது. (மற்றவை என்ன என்பது இப்பதிவுக்கு சம்பந்தமில்லாதது; எனவே தெரியாவிடில் நீங்களே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்)ஏகாதசிக்கு மறுநாள், துவாதசியன்று காலை சீக்கிரமே உணவு அருந்த வேண்டும்.(பின்னே ஒரு நாள் பட்டினி என்றால் சும்மாவா?)இதைப் பாரணை என்பார்கள்.பட்டினியை விட்டாலும் பாரணையை விடக் கூடாது என்பர்.இதை நான் தவறாமல் கடைப் பிடிக்கிறேன்.பட்டினியை விட்டு விடுகிறேன்;பாரணையை விடுவதில்லை!பாதிப் புண்ணியம் உண்டோ|? துவாதசி அன்று உணவில் அகத்திக் கீரையும், நெல்லிக்காயும்,,சுண்டைக்காயும் இருக்க வேண்டும்.!இதற்கு விஞ்ஞான ரீதியான காரணம் இருக்க வேண்டும்.


இப்போது வைகுண்ட ஏகாதசிக்கு வருவோம்.ஆண்டு முழுவதும் விரதம் இருக்க முடியா விட்டாலும், வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருந்தால் அது மூன்று கோடி ஏகாதசி விரதத்துக்கு சமம் என்று சொல்கிறார்கள்.அதனால் இது முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கப் படுகிறது.

இத்தினம் எல்லாப் பெருமாள் கோவில்களிலும் மிக விசேஷமாக் கொண்டாடப் படுகிறது. இந்நாளில் மிக முக்கியமான நிகழ்ச்சி சொர்க்க வாசல் திறப்புதான்.அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப் பட்டவுடன்,அவ்வழியாகச் செல்வதற்கு மக்கள் வரிசையில் காத்திருப்பர்.மது கைடவர்களின் வேண்டு கோளுக்கிணங்கி,அன்று அவ்வாசல் வழியாக வருபவர்களுக்கு, அவர்கள் எப்படிப்பட்ட பாவம் செய்தவர்களாயினும் முக்தி அளிப்பதாக பகவான் வாக்களித்தார். எனவேதான் இச்சொர்க்கவாசல் திறப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இன்று நான் கோவிலுக்குப் போகவில்லை.கூட்டமில்லாத சாதாரண நாட்களில்தான் நான் பெரும்பாலும் கோவிலுக்குச் சென்று அமைதியாக வழி பட்டு விட்டு வருவேன்.

வைகுண்டநாதன் அருளால் எல்லாரும் எல்லா நலமும் பெற்று வாழப் பிரார்த்திக்கிறேன்


(சிறிது மாற்றப்பட்ட மீள் பதிவு)

வெள்ளி, டிசம்பர் 18, 2015

எங்கே அந்த ஆடு?




இன்று ஒரு குட்டிக் கதையோடு தொடங்குகிறார் ஸ்வாமி

ஏன் இந்தக் கதை என்பதைக் கடைசியில் விளக்குவார்

ஒரு சிற்றூர்

ஒரு ஞாயிற்றுக் கிழமை.

இரண்டு சிறுவர்களுக்குச் செய்த குறும்பெல்லாம் அலுத்துப் போய்ப் புதிதாக ஏதாவது செய்யும் ஆசை பிறந்தது

அருகில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் அவர்கள் கண்ணில் பட்டன.

உதயமாயிற்று புதிய குறும்பு.

மூன்று ஆடுகளைப் பிடித்து அவற்றின் மேல் 1,2,4 என்று எண்கள் குறிப்பிட்டுப்  பள்ளிக்குள் விட்டுக் கதவை மூடிவிட்டனர்.

திங்கள் காலை பள்ளி திறந்ததும் வந்தவர்கள் அங்கு கிடக்கும் ஆட்டுப் புழுக்கைகளைக் கண்டனர்

ஏதோ ஆடுகள் பள்ளிக்குள் நுழைந்து விட்டன எனத் தெரிந்து கொண்டனர்

தேடுதல் ஆரம்பமாயிற்று

சிரிது நேரத்தில் மூன்று ஆடுகளும் பிடிபட்டன..

பிடிபட்ட ஆடுகளின் மேல் எண்கள் 1,2,4  எழுதப்பட்டிருப்பதைக் கண்டனர்.. 

அப்படியானால் 3வது எண்ணுள்ள ஆடு எங்கே ? 

பள்ளிக்குள் எங்கேயோதான் இருக்க வேண்டும்

அன்று பகல் முழுவதும் பள்ளியின் இண்டு இடுக்கெல்லாம் தேடியும் 3ஆம் எண்ணுள்ள ஆடு கிடைக்கவில்லை. 

அன்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

ஆசிரியர்கள்,எழுத்தர்கள் கடைநிலைப் பணியாளர்கள், தலைமை ஆசிரியரும் முழுவதும் தேடும் பணியில் இறங்கி 3ஆம் எண்ணுள்ள ஆடு கிடைக்காமல் வெறுத்துப்போயினர்.

இல்லாத ஒரு ஆடு எப்படிக் கிடைக்கும்?!

ஏன் இந்தக் கதை?

அவர்களைப் போலத்தான் நாமெல்லாம்.

நம்மிடம் இருக்கும் ஆடுகளை விட்டு விட்டு இல்லாத ஆடுகளைத் தேடிக் கொண்டி ருக்கிறோம்

நம்மிடம் இருக்கும் திறமைகள்,வாய்ப்புகள்,வலிமை இவற்றை விட்டு விட்டு இல்லாத வற்றைத் தேடி அலுப்படைகிறோம்.

இருப்பதை விட இல்லாததே எப்போதும் பூதாகரமாகி நம்மை அச்சுறுத்துகிறது.

அந்த நிலையிலிருந்து விடுபடுங்கள்.

முயலுங்கள்

முயன்றால் முடியாததுண்டோ?

(ஸ்வாமி பித்தானந்தாவின் உரையிலிருந்து)

செவ்வாய், செப்டம்பர் 29, 2015

’கிரேசி’ கரடி--முடிவு!

சென்னை பித்தனை தொலைபேசியில் அணுகி, "நீங்கள் அடையாறில்தானே இருக்கிறீர்  கள்?என்னைச் சந்திப்பதற்காக, ஐஐடி பக்கத்தில் கீரிடம்போல தோற்றம் உள்ள மண்டபம், யாரும் வராத இடம் என்றுசொல்கிறார்களே? அங்கே வர முடியுமா? ”என்று பணிவாகக் கேட்டது.

உன்னால அந்த ’மூதறிஞரி ‘ன் நினைவு மண்டபத்திற்கு போகும் இன்னொரு சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கிறதே என்று மனமகிழ்ந்து அங்கே வருவதாக அவர் ஒப்புக் கொண்டார். 

“ஆமா? என்னை எப்படிக் கண்டுபிடிக்கப் போற.?”
 
”உங்க போட்டோவை உங்க வலைப்பூல என்னைப் பற்றி என்றபகுதில நிறைய வாட்டி
பார்த்திருக்கேனே என்று சொல்லி லேட்டஸ்டா வராட்டாலும் லேட்டா மட்டும் வராதீங்க”  
என்று குறும்புத் தனமாக கேட்டுக் கொண்டது. 

”என்னை அடையார் அஜீத் என்றுதான் அழைக்கிறார்கள்;சூப்பர்ஸ்டார் என்றழைப் பதில்லை” என்றார் செபி

வெறிச்சோடிக்கிடக்கும் ராஜாஜி நினைவு மண்டபத்தில் சென்னை பித்தன் நுழைந்தவுடன், புதரில் மறைந்து நின்ற கரடி அவரை வரவேற்றது. ஐயா,எனக்கு  மகிழ்ச்சியானமுடிவைக் கொடுங்கஎன்று வேண்டிக் கொண்டது.

சரி நீ ஆணா, பெண்ணா?

நான் கல்யாணத்திற்காக காத்திருக்கும் யுவதி.

அப்படியானா உன் மனசுல இருக்கிற கரடியோட உன்ன ஒண்ணு சேர்த்துர்றேன் என்று முடிவை ஆரம்பித்தார்.

அன்று பெளர்ணமி. முழு நிலவு பொழிந்து கொண்டிருந்தது. மனதை வருடம் மலைய மாருதம். கிணற்றில் விழுந்த கரடி, “இப்படி யாரும்இல்லாம தனியொருவளா போயிட் டோமே”. என்று மனம் நெகிழ்ந்தது.

போன முழு நிலவன்று அருவியில் தன் காதலனுடன் நடத்திய சரசங்கள் இப்பொதைய சோகத்தை அதிகமாக்கியது. அப்போது ”திக்கு தெரியாத காட்டில் உன்னைத் தேடித் தேடி அலைந்தேனே”. என்ற பாட்டு அவன்குரலில் ஒலித்தது போன்ற பிரமை. பிறகு பாட்டு மிக அருகில் கேட்டது.

பாட்டுக்கு பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்கலையோஎன்று எசப்பாட்டுதொண்டை கிழிய பாடியது பெண் கரடி. சரசரவென்று பெரிய சத்தம் கேட்டது. நிலவை மறைத்து காதலனின் முகம் கிணற்றுக்கு வெளியே தெரிந்தது. ஆண் கரடி கிணற்றுக்குள் பாய்ந்து தன் காதலியை முதுகு மேல் ஏற்றிக் கொண்டு வெளியில் வந்து ராக் அன் ரோல் ஆடிவிட்டு பின் 
அவர்களுக்கு பிடித்த அருவிக்கு போய் சந்தோஷமடைந்து கானகம் திரும்பின.


முடிவை கேட்ட ஆண் கரடி புதரில் இருந்து வெளியேறி ராக் அன் ரோல் அடிகளை எடுத்து வைத்து நடனமாடி சென்னைப் பித்தனை மகிழ்வித்தது. 


பிறகு ஒரு அழகிய சந்தன பேழையில் ஒரு பென்டிரைவ் ஒன்றை வைத்து  அவரிடம் அளித்து இதற்குள் எங்கள் தாரக மந்திரம் பதிவாகி இருக்கிறது. எங்கள் லிபியில் மறைக்குறி யீடாக்கம் (Encrypt) செய்யப் பட்டுள்ள அந்த வாசகங்களை முடிந்தால்  மறையீடு நீக்கி  (Decrypt) செய்து பார்த்து மகிழுங்கள் என்று மனமகிழ்ச்சியுடன் விடை பெற்றன கரடி தம்பதி..

சென்னை பித்தனுடைய லேப்டாப்பால் அந்த டிரைவை  படிக்க  முடியவில்லை. ஐபிஎம் நிறுவனத்தில் பணிபுரியும் தன் நண்பரிடம் அந்த பென்டிரைவைக் கொடுத்தார். அவர் யுஎஸ்ஸில் உள்ள தங்கள் தலைமையகத்துக்கு அனுப்பி அந்த லிபியை மறையீடு நீக்கம் (Decrypt)  செய்து சென்னை பித்தனுக்கு மின்னஞ்சலில் அனுப்பினார். சென்னை பித்தன் அதை பார்த்து நம்மையே கிரேசியாக்கிவிட்டதே இந்த கரடிகள்என்றுஅகமகிழ்ந்தார். கரடிகளின் தாரக மந்திரம் இதோ.

    டி

ர யி ல்

டி ல் லி

!!!!!!!!!!!!!!!!

டிஸ்கி:கரடி பூடகமாக ஏதோ சொல்கிறதோ!ரயிலில் ஏறி டில்லி போகப் போகிறதோ?!  எதற்கு?ஏதாவது கட்சி ,கரடிச் சின்னம் கேட்டிருக்குமோ?!அல்லது ஏதாவது உரிமை கேட்டுப் போராடப் போகிறதோ?

சனி, ஜனவரி 03, 2015

காதலிக்க நேரமில்லை!

நேற்று மாலை என் நண்பர் ஒருவர் தொலை பேசினார்

வருத்தமும் கவலையும் தோய்ந்த குரலில் சொன்னார்”விக்னேஷ்(அவர் மகன்) மண வாழ்க்கையே சரியில்லை.உனக்குத்தான் தெரியுமே அவன் காதலிச்ச பொண்ணையேதான் கல்யாணம் பண்னிக்கிட்டான்னு.ஆனா இப்ப என்னவோ ரெண்டு பேருக்கும் ஒத்துப் போறதே இல்ல.மண விலக்கு வரைக்குக்கும் போய் விடுமோன்னு பயமா இருக்கு.. ”

புதன், டிசம்பர் 31, 2014

அவள் பறந்து போனாளே!



நீயாய் வந்தாய்
சுகம் துக்கம்
இன்பம் துன்பம்
வரவு செலவு
கவலை தெளிவு
எல்லாம் தந்தாய்.
எதிர்பார்த்தது நடக்காத நேரங்கள்
எதிர்பாராதது நிகழ்ந்த தருணங்கள்
ஆச்சரியங்கள்
ஆனந்தங்கள்
அமைதி
எல்லாமுமே!
இப்போது போகிறாய்
போய் வா என்று சொல்ல இயலாது
போனால் வரமாட்டாய்
ஏனென்றால் நாளை வேறொருத்தி
மீண்டும் ஒரு தொடக்கம்
அனுபவங்கள் புதிதாய்
பலவாய்
ஒரே ஒரு வருத்தம்
ஒவ்வொருத்தி வரும்போதும்
என் வயது கூடுகிறதே?!

நண்பர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும்  இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 

புதன், டிசம்பர் 17, 2014

நீங்களே சொல்லுங்கள்!




குற்றவாளிக் கூண்டில் அந்தப் பெண்.

சர்க்கார் வக்கீல் இந்தப் பெண் தன் ஒரு வயதுக் குழந்தையை விற்க முயன்ற போது கைது செய்யப்பட்டாள்

நீதிபதி அவளைப் பார்த்தார்.

நீ உன் குழந்தையை விற்க முயன்றது உண்மையா?”