தொடரும் தோழர்கள்

வெள்ளி, டிசம்பர் 16, 2011

மார்கழிப் பொங்கல்!

       நாளை மார்கழி மாதம் பிறக்கிறது.தட்சிணாயத்தின் கடைசி மாதம். மாதங்களில் நான் மார்கழி(மாஸானாம் மார்கசீர்ஷ:) என்று கீதையில் கண்ணன் சொல்கிறான்.நாளை முதல் கோவில்கள் அதிகாலையில் களை கட்டி விடும்.தனுர்மாத பூசைகள் ஆராதனைகள் நடைபெறும். திருப்பாவை,திருவெம்பாவை ஒலி எங்கும் நிறைந்திருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக அதிகாலை குளிருக்கு இதமாகச் சுடசுடப் பொங்கல் கிடைக்கும்!

எங்கள் குடியிருப்பின் நுழை வாயிலிலேயே ஒரு பிள்ளையார் கோவில் அமைத்திருக்கிறோம்.




ஒவ்வொரு கோவிலிலும் பிள்ளயாருக்கு ஒரு பெயர் உண்டல்லவா?எங்கள் குடியிருப்புப் பிள்ளையார் “லட்சுமி கணபதி” என்றழைக்கப் படுகிறார். உண்மையிலேயே குடியிருப்பு வாசிகளுக்கு,லட்சுமி கடாட்சத்தை நல்கி வருபவர்.ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தினம் அதிகாலை எங்கள் பிள்ளையாருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

மார்கழி பிறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே காலனி அறிவிப்புப் பலகையில் அறிவிப்புச் செய்யப்படும்.தினமும் நைவேத்தியப் ப்ரசாதம் செய்பவர்கள்,பெயர்களைப் பதிவு செய்து கொள்வர்.மாதம் முழுவதும், காலையில் சர்க்கரைப் பொங்கல்,வெண்பொங்கல்,கேசரி,சுண்டல் என்று
தினம்   ஒரு  பிரசாதம் கிடைக்கும்.(சர்க்கரைப் பொங்கலில் இனிப்புக் கூடும், குறையும்;வெண்பொங்கலில் உப்புக் கூடும் குறையும் –அதெல்லாம் அவரவர் திறமையைப் பொறுத்தது!,பக்தியைப் பொறுத்ததல்ல!)

இந்த ஆண்டும் பலகையில் அறிவிப்பு செய்யப்பட்டு ,நான்கு நாட்களுக்குப் பதிவாகிவிட்டது.பொங்கலுக்காகக் காத்திருக்கும் இவ்வேளையில்,(!),
திருமந்திரத்தின் பாயிரப்பாடலில் பிள்ளையார் பற்றிச் சொல்லப் பட்டிருப் பதை பார்ப்போமா?
“ஐந்து கரத்தனை யானை முகத்தனை
  இந்து இளம்பிறை போலும் எயிற்றனை
  நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
  புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே”

பொருள்:ஐந்து கரங்களையுடையவரும்,யானை முகத்தை யுடையவரும், இளம்பிறைச்சந்திரனையொத்த ஒற்றைத் தந்தத்தை உடையவரும், சிவனுடைய குமாரரும்,ஞானச்சிகரமாக விளங்குபவரும் ஆகிய விநாயக் கடவுளது திருவடிகளைச் சித்தத்துள் வைத்து வணங்குகிறேன்.
இப்பாடலின் விளக்கத்தை நாளை,மார்கழி முதல் நாள், பொங்கல் சாப்பிட்டு விட்டுப் பிறகு பார்ப்போம்!! 
(இது ஒரு மீள் பதிவு!)
இந்த ஆண்டு  இப்போதே பத்து நாட்களுக்குப் பெயர் பதிவாகி விட்டது!

22 கருத்துகள்:

  1. ஒரு தொன்னை சக்கரைப்பொங்கல் ப்ளீஸ்......

    பதிலளிநீக்கு
  2. நல்ல பகிர்வு.

    நாங்களும் பொங்கல் ,சுண்டல் சாப்பிட வந்து விடுகிறோம்.

    பதிலளிநீக்கு
  3. அண்ணே பனி பின்னி எடுக்குது இங்க...நடத்துங்க ஒரே ஜாலியா!

    பதிலளிநீக்கு
  4. “லட்சுமி கணபதி” படங்கள் வெகு அருமை

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்,ஐயா!மார்கழிப் பொங்கலெல்லாம் ஓ.கே.சங்கீதக் காச்சல் என்னாச்சு?பதி(லே)வே வரலையே?

    பதிலளிநீக்கு
  6. //எல்லாவற்றுக்கும் மேலாக அதிகாலை குளிருக்கு இதமாகச் சுடசுடப் பொங்கல் கிடைக்கும்!//

    இசை விழாவை இரசித்துக் கொண்டே, மார்கழிப் பொங்கலையும் ருசிக்கத் தயாராக இருக்கிறீர்கள் போலும்.மீள் பதிவு ஆனாலும் மீண்டு படிக்கத் தூண்டும் பதிவு இது.

    பதிலளிநீக்கு
  7. நல்லா சாப்பிடுங்கோ தல, நான் பொங்கலை சொன்னேன்...

    பதிலளிநீக்கு
  8. மாதங்களில் அவள் மார்கழின்னு சும்மாவா பாடுனாங்க...!!!

    பதிலளிநீக்கு
  9. முதல்ல பொங்கல்,அப்பறமா விளக்கமா? சரி..காத்திருக்கிறோம் இரண்டுக்கும்...

    பதிலளிநீக்கு
  10. பொங்கலோ பொங்கல்......... மார்கழி என்றாலே கடும் பனி, வாசலில் கோலம், காலை நேரம் விநாயர் குளிபாட்டல் , பெருமாள் கோவில் பொங்கல்...... இதெல்லாம் தான்......


    உங்க கருத்த சொல்லுங்க

    காதல் - காதல் - காதல்

    பதிலளிநீக்கு
  11. மார்கழித் திங்கள் அல்லவா....இது பொங்கல் வரும் நாளல்லவா....!!

    மார்கழியைப் பற்றி நினைக்கையில் 'மார்கழிப் பனியில்' என்ற எஸ் பி பியின் பழைய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
  12. அருமை விசயம் ஐயா ,பிள்ளையார் அழகாக இருக்கிறார்

    த.ம 5

    பதிலளிநீக்கு
  13. கிராமத்தில் கோலம் போட்டு அதன் மீது சாணிப்பிள்ளையார் வைத்து பூசணி பூ வைப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  14. சார்! எனக்கொரு பொங்கல் பார்சல்!
    பகிர்விற்கு நன்றி!
    என் வலையில் :
    "நீங்க மரமாக போறீங்க..."

    பதிலளிநீக்கு
  15. வணக்கம்! மார்கழி என்றாலே மாதம் முழுக்க இசைப் பாடல்களோடு விடியும்
    மாதம்.
    //அதிகாலை குளிருக்கு இதமாகச் சுடசுடப் பொங்கல் கிடைக்கும்!// இசையோடு சுவையுங்கள்.

    பதிலளிநீக்கு
  16. மார்கழி மாதமும் அதிகாலை பனியில் பஜனையும், முக்கியமாக சர்க்கரைப் பொங்கலும் ரொம்பவே உசத்தியானதுதான். மீள் பதிவானாலும் மீண்டும் போட வேண்டிய பதிவுதான். அருமை.

    பதிலளிநீக்கு
  17. பின்னூட்டமிட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி. தனித்தனியாகச் சொல்ல இயலாமைக்கு நேரமின்மையே காரணம்.

    பதிலளிநீக்கு