தொடரும் தோழர்கள்

பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜனவரி 22, 2016

பயணங்கள் முடிவதில்லை...தொடரும் தொடர் பதிவு



என் தனியான பயணங்கள் எப்போதும் ஒரே மாதிரியாக அமைந்ததில்லை. தில்லி யிலிருந்து சென்னை வரும்போது ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு மாதிரி அமையும். ஒரு முறை சுற்றியிருப்பவர்களுடன் கலகல உரையாடலில் நேரம் கழிப்பேன்;ஒரு முறை யாருடனும் பேசாமல் புத்தகத்தில் மூழ்கி நாளைக் கழிப்பேன். ஒரு முறை சாப்பிடுவதும் தூங்குவதும் தவிர வேறெதுவும் நடக்காது. பயண நாளில் என் மன நிலையைப் பொறுத்தது என் விருப்பு வெறுப்புகள்.!என் கல்லூரி நாட்களில் பயணிக்கும்போது கையில் இயான் ஃப்ளெமிங்க் நிச்சயம்!


பயணத்தில்  முன்பெல்லாம் வாக்மேன் இப்போதெல்லாம் ஐபாட் இவற்றில் ஏதோ கேட்டபடிப் பலர் பயணிப்பதைக் கண்டிருக்கிறேன்.ஒரு முறை ஜெயகாந்தன் சொன்னார்”என்னுள் நானே ஓர் இசையை உருவாக்கி ரசித்துக் கொண்டிருக்கிறேன்” என்று.நீங்களும் கவனித்திருக்கலாம்,பயணத்தின்போது உங்களுக்குப் பிடித்த ஒரு பாட்டு எங்கிருந்தோ ஒலித்தபடியே உங்களுடன் கூட வருவதை.நான் கூட நினைப் பதுண்டு,வழியில் இருக்கும் இடம் ஒன்றிலிருந்து அப்பாட்டுக் கேட்கிறதோ என்று. ஆனால் அது எவ்வாறு தொடர்ந்து வர முடியும்?  அந்த இசை தவிர நான் வேறு எந்த இசையையும் கேட்பதில்லை.எனக்கு எரிச்சல் தரும் ஒன்று,பேருந்துகளில் அலற விடும் இசைதான்.இசையின் மென்மை தொலைந்து போய்,மனத்தை வருடிக்கொடுக்கும் தன்மை அங்கு காணாமல் போகிறது.பயணிக்கும்போது சில நேரங்களில்  வாய்க்குள் முணு முணுக்கும் இசை என்றால் அது பெரும்பாலும் ஏதாவது கர்நாடக  சங்கீதமாகவே இருக்கும்; தப்பித் தவறிச் சப்தம் வெளியே கேட்காமல் பார்த்துக் கொள்வேன்;பின் விளைவுகள் பற்றிய பயம்தான்!


பயண நேரம் என்று பார்த்தால்,சிறு பயணமாயின் வசதிப்படும் நேரம்;நீண்ட பயண மாயின் வசதியான வண்டியின் நேரம் அவ்வளவே.வாழ்க்கைப் பயணத் திலேயே சிறந்த துணை நமக்கு நாமே எனும்போது ,இப்பயணங்களில் யார் துணை?


எனக்கு வெளிநாடுகள் செல்ல ஆர்வம் இல்லை;ஆனால் நம் நாட்டிலேயே பார்க்க வேண்டிய இடங்கள் எத்தனையோ?இந்த வாழ்க்கைப் பயணத்தில் சிலவற்றையேனும் காண இயலுமா,அல்லது கனவாய்ப் போகுமா? 

அவன்தான் தீர்மானிப்பான் .

திங்கள், நவம்பர் 30, 2015

மாரி!



 நானும் ரௌடிதான் -5

மாரிக்கு அன்று நல்ல நாள். எல்லாமே அவனுக்கு சாதகமாக அமைந்தது.

ரயிலில் பயணம் செய்யும் போது கடைசியாக அடித்த அதிருஷ்டத்தை நினதை்து ஆச்சரியம் அடைந்தான் மாரி. 

சாந்தினி சவுக் விடுவதற்கு, முன், முதலாளியை மறுபடியும் சந்தித்தான். நான் மீண்டும் வரவில்லை என்றால் பரவாயில்லையேஎன்றான்.அங்கேயே இருப்பது உனக்கு நல்லது என்றால் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை யில்லை, என்றார். கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் என்னிடம் .வேலை பார்த்துள் ளாய். என்னிடம் இன்றுதான் ஆயிரம் ரூபாய் வாங்கியிருக்கிறாய் கொஞ்சம் பொறு உன் கணக்கைப் பார்த்து பணம் தருகிறேன்என்றார். ரூபாய் இருபத்தொரு ஆயிரத்தை காசோலையாகக் கொடுத்து பாங்கில் பணம் வாங்கிக் கொள் என்றார். ஐயா நீங்கள் எவ்வளவு உயர்ந்த மனிதர்என்று வாழ்த்தி வங்கியில் ரொக்கத்தை வாங்கிக் கொண்டான்”.

டீக்கடை முதலாளி செய்து கொண்டிருந்த வேலை பயங்கரமானது. பாகிஸ்தானில் இருந்து வரும் கன் பவுடரைடீ தூள் பாக்கெட்டில் பேக் செய்து தீவிரவாதி களுக்கு  சப்ளை செய்யும் அபாயகரமான வேலை அது. மாரி மாட்டிக் கொள்ளாமல் தன் முதலாளி மற்றும் கங்காராம் கூட்டத்திலிருந்து விலகி சொந்த ஊர் செல்கி றான்.

பாவம் அவனுக்கு அவர்கள் எவ்வளவு பயங்கரமானவர்கள் என்று தெரியாது. கங்காராம் குழுவினர்கள் கூட்டுக் கொள்ளையர்கள். வெகு விரைவில் போலிஸில் மாட்டக்கூடும். மாரி தப்பித்தான்.

சென்னையில் சனியன்று காலை இறங்கி பத்திரமாக ஞாயிறன்று திருச்சி அடைந் தான்.

வாழ்க்கையில் முதல் முதலாக தன் சொந்தச் செலவில் ஆடம்பரமில்லாத ஆனால் பத்திரமான லாட்ஜில் அறை எடுத்து தங்கினான். வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு அயர்ந்து தூங்கினான்.

மறுநாள் காலை அவன் பணிபுரிந்த வங்கிக்கு சென்றான். மேலாளரை சந்தித்து அவர் தந்துதவிய ஆயிரம் ரூபாயை கொடுத்து நமஸ்காரம் செய்தான். அவர் அதை அவனுக்கே கொடுத்துவிட்டார். உன் சம்பளப் பணத்தை கூட கொடுக்காமல் துரத்திவிட்டேன்என்று அங்கலாய்த்தார்.

சார், நான் ஒரு கணக்கு ஆரம்பிக்க வேண்டும்.நீங்கள் தான் உதவ வேண்டும் என்றான். சேமிப்புப் பிரிவு மேலாளரை கூப்பிட்டு ஆவன செய்யச் சொன்னார். விலாசத்தில் சமயபுரத்தில் உள்ள தன் பெற்றோர் வீட்டு விலாசத்தை கொடுத்தான். மாரியை அறிந்த பழைய கணக்கர்கள், கணக்கை அறிமுகப்படுத்தினார்கள். கையிலிருந்த 61 ஆயிரம் ரொக்கத்தில், 50 ஆயிரத்தை சேமிப்புக் கணக்கில் வரவு வைத்தான். செக்புக், பாஸ் புக் வாங்கிக் கொண்டான்.

அறைக்குச் சென்று, நன்றாக உடையணிந்து கொண்டு நீதிபதி வீட்டிற்குப் போனான். 2 உயர்ந்த இனிப்புப் பாக்கெட்டுகளை போகும் போது வாங்கிக் கொண்டான்.நீதிபதி சற்று இளைத்திருந்தார். ஸ்வெட்டர் அணிந்திருந்தார். 


முன்னிரவு பெய்த மழை அவரை வாட்டியது போல. மனைவி பொலிவுற்றிருந்தாள். சமையல் காரியை காபி கொண்டு வரச் சொன்னார்கள். சமையல் செய்ய தனியாக அவர்கள் வீட்டில் ஆள் உண்டு. நீதிபதியின் மகள் மாரியை பார்க்க வந்தாள். அவளைப் பார்த்தவுடன் மாரி ஒரு பெரிய அதிர்ச்சிக்கு ஆளானான்.

தொடரும்

டிஸ்கி:மாரி,ரயிலில் தில்லி செல்லும்போதும்,திரும்பி வரும்போதும் பயணத்தில் சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்திருக்கக் கூடும்; வித்தியாசமான மனிதர்களைச்  சந்தித் திருக்கக்கூடும்;ஏனெனில் பயணங்கள் எப்போதுமே அப்படிப்பட்டவைதாம்,அது போன்ற இரு பயண அனுபவங்கள் இதோ......

திங்கள், ஜூலை 06, 2015

மாயா!மாயா!தமிழ்மணம் ரேங்க் எனும் மாயா!!



வாங்கண்ணே!

ஏண்டா பனை மட்டைத் தலையா!என் வூட்டுக்கு வந்து என்னையே வாங்கன்னு கூப்பிடறே?

அது இருக்கட்டும்ணே! ஒரு சந்தோசமான சமாசாரம்.

என்னடா? ஒன் பொண்டாட்டி ராமசாமியோட ஒடிப்போயிட்டாளா?

அட சும்மா இருங்கண்ணே.நான் ஒரு வலைப்பதிவு ஆரம்பிசிட்டேண்ணே!

திங்கள், ஜூன் 08, 2015

வயிற்றுக்கான ஓர் ஆன்மீகப் பயணம்!



திருப்பூரில் இருந்த காலம்.

பலர் வாடிக்கையாளர் என்ற நிலை தாண்டி என் நண்பர்களாக இருந்தனர்-குறிப்பாக ராமதாஸ், கலந்தர்,நாகரத்தினம்,ராமசாமி(ரமேஷ்) இவர்கள் போல்.அங்கு செட்டியாரில் ஒரு பிரிவு உண்டு. பன்னிரெண்டாறு செட்டியார் என்று சொல்வார்கள்.அவர்களது கோவில் ஒன்று பாலக் காட்டுக்குப்  பக்கத்தில் உள்ள பாறை என்ற ஊரில் இருக்கிறது.அம்மன் பெயர் மாங்கரை யம்மன்..ஒவ்வோர் ஆண்டுமொரு நாளன்று அம்மனுக்கு விசேட பூசைகள் நடக்கும்.அநேகமாக அந்தப் பிரிவைச் சேர்ந்த அனைவரும் அங்கு கூடியிருப்பர்,

ஒரு முறை நாகரத்தினம் என்னையும் அவர்களுடன் வருமாறு அழைத்தார்.ஏற்றுக் கொண்டேன்.

ஒரு நாள் இரவு காரில் புறப்பட்டோம் நிதானமாக நள்ளிரவு அங்கு போய்ச் சேர்ந்தோம். மறுநாள் மாலைதான் பூசை.இரவு எங்களுக்கான அறையில் படுத்துறங்கினோம்.
காலை   எழுந்து குளித்து முடித்த பின் காலை உணவுக்கு அழைத்துச் சென்றார்.சுடச்சுட இட்லி, வடை,சட்னி,சாம்பார்.மிருதுவான இட்லிகள்,சுவையான சாம்பார்.இட்லிகள் (எத்தனை என்று கேட்கக்கூடாது) வேகமாக உள்ளே போயின.பின்னர் மணம் நிறைந்த காபி.

இனி என்ன செய்வது?


ஒரு பெரிய குழு சீட்டாட்த்தில் மும்முரமாகி விட்டது.நான் சிறிது நேரம் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.கொஞ்ச நேம் தெருக்களைச் சுற்றி வந்தேன்.சில மணித்துளிகள் தூங்கினேன்.ஒரு வழியாக மதிய உணவுக்கான நேரம் வந்து விட்து .”சார் நீங்க தூங்கிட்டீங்க.மதிய உணவில் பால் பாயசம் இருக்கு.நான் போய் டேஸ்ட் பாத்துட்டு வந்துட்டேன்,சூப்பர்”


அவர் சொன்னதைக் கேட்டதும் பசி வந்து விட்டது.வழக்கமான வடை பாயச விருந்துதான். அவர் சொன்னது போல் பால் பாயசம் பிரமாதம்.இலையில் இரண்டு மூன்று முறை ஊற்றிக் குடித்தேன் ..ஒரு முறை லட்டையும் அதோடு சேர்த்து….!ரத்தினம் கேட்டார்”சார்! டம்ளரில் தரச் சொல்லட் டுமா ?” விடுவானேன்.அதையும் வாங்கிக் குடித்தாயிற்று.இது செரிக்க ரெண்டு நாள் ஆகும் போல் இருக்கிறதே என எண்ணினேன்.


மாலை நானும் அவரும் ஒரு உள்ளூர்ச் சிற்றுலா சென்று வந்தோம்.


திரும்பி வரும்போது அவர் சொன்னார்.”சார்!சாயந்திரம் டிபனுக்குப் பஜ்ஜி போடறாங்க.நான் நமக்காக ஸ்பெசலா சேவை போடச் சொல்லியிருக்கேன்.”


அடக் கடவுளே! மதியம் சாப்பிட்டதே நெஞ்சு வரை இருக்கிறது.இப்போது இது வேறா?அவர் விடவில்லை அங்கு போய் அதையும் கொட்டிக் கொண்டேன் ….ஏவ்!சும்மா சொல்லக்கூடாது சுவை சூப்பர்!


மாலை ஆறு மணிக்குப் பூசை ஆரம்பமாயிற்று.சிறப்பான பூசை.முடியும்போது மணி 8.30.பூசை நடுவில் நண்பர் எழுந்து போய் வந்தார்.என் அருகில் அமர்ந்து சொன்னார்”சார்! ராத்திரிக்குக் கொழுக்கட்டை போடப்போறாங்க!”
நானும் இனிப்பு உப்புக் கொழுக்கட்டைகள் போலும் என நினைத்தேன்.


பூசை விமரிசையாக முடிந்த்து.எல்லோரும் சாப்பிடப் போனோம்.பரிமாறப்பட்டது பிடி கொழுக்கட்டை/உப்புமாக் கொழுக்கட்டை,சட்னியுடன். அங்கு சமைப்பவர்கள் உண்மையாகவே விற்பன்னர்கள்தான்.

இப்படியாக இரண்டு நாளுக்கான உணவை ஒரு நாளில் சாப்பிட்டாயிற்று.அவ்வை சொன்னது தப்பாகிப் போய் விட்டதோ…”ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்,இரு நாளைக்கேல் என்றால் ஏலாய்” 

அதுதான் இல்லை.
ஊர் திரும்பிய பின் வயிறு குழப்பமாகி மருத்துவரிடம் சென்று மருந்து வாங்கிச் சாப்பிட்டு…. …..! இரண்டு நாள்  பட்டினி!...”லங்கணம் பரம ஔஷதம்”

கோவிலுக்குப் போய் மாலை வரை பூசை பற்றி நினையாமல் சாப்பாடு பற்றியே நினைத்திருந்த இந்தப்பயணம்…............

.
வயிற்றுக்கான ஆன்மீகப் பயணம் அன்றி வேறென்ன?!

வியாழன், ஜனவரி 19, 2012

உலகச் சுற்றுப் பயணம்!


ஐந்து நிமிடங்களில் உலகைச் சுற்றிப் பார்க்கலாமா?!

வாருங்கள்.அழைத்துச் செல்கிறேன்.


   
                        என்ன? மகிழ்ச்சியாகச் சுற்றிப் பார்த்தீர்களா?  

ஒரு ஜோக்:

    ராமு ,நீ இந்த ஊர் சுத்தி பாத்திருக்கியா?
   சோமு:இல்லை.போகலாமா?
   ராமு:இதுக்கு எங்கயும் போக வேண்டாம் .இதோ பார் இதுதான் இந்த        ஊர்       சுத்தி!