தொடரும் தோழர்கள்

வியாழன், மே 31, 2012

இழுக்க இழுக்க இன்பம்,இறுதிவரை!


புகை யி(ல்)லை என்றார்கள்; ஆனால்
சுருட்டிப் பற்ற வைத்தால்
புகைதான்  வருகிறதே!

இழுக்க  இழுக்க  இன்பம்
இறுதி வரை என்பர்
இறுதியே மிக அருகில்தானே?

பன்னீர் புகையிலை, பான் பராக்
வாயிலிட்டுச் சுவைக்கலாம்
சுருட்டு, பீடி, வெண்சுருட்டு
புகை விட்டு ரசிக்கலாம்
எத்தனை வழிகள்
எமனை விரைந்தழைக்க!

புகையை நீங்கள் விட்டீர்கள்,
ஆனால் அப்புகை உங்களை விடாது
உங்கள் புகையைக் காணாமல்!

புண்பட்டநெஞ்சத்தை
புகைவிட்டு ஆற்றுவாராம்

புகை பட்ட நெஞ்சமே
புண்ணாகிப் போகாதோ?i

ஒரு நாள் மட்டுமேன்?
ஆண்டு முழுவதும்
எதிர்ப்பு தினமாகட்டும்
இப்பொல்லாத புகையிலைக்கு.


சில ஆண்டுகளுக்கு முன்’ பான் பராக்’ பழக்கத்தில் இருந்த ஒரு இளைஞனை அடையார் புற்றுநோய் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றேன்,மதிவளத்துணைக்காக (அறிவுரை,ஆலோசனை,counseling) அங்கு காட்டப்பட்டநோயால்பாதிக்கப்பட்டவர்களின் படங்களைப் பார்த்தபின்,புகையிலையைக் கையால் தொடுவதற்கே அச்சம் வரும்.)


31 கருத்துகள்:

  1. //ஒரு நாள் மட்டுமேன்?
    ஆண்டு முழுவதும்
    எதிர்ப்பு தினமாகட்டும்
    இப்பொல்லாத புகையிலைக்கு.//

    ஆமோதிக்கிறேன். நல்ல கருத்துக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. நல்ல விழிப்புணர்வுப் பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
  3. கருத்துமிக்க கவிதை....:))

    பதிலளிநீக்கு
  4. நல்ல விழிப்புணர்வுப் பகிர்வு.

    /ஒரு நாள் மட்டுமேன்?
    ஆண்டு முழுவதும்
    எதிர்ப்பு தினமாகட்டும்
    இப்பொல்லாத புகையிலைக்கு./

    பழகி விட்டவர்கள், அவர்களாகப் பார்த்து திருந்தினால் தான் உண்டு. பலரும் இவற்றிற்கு அடிமையாகிப் போய் இருக்கிறார்களே!!

    அவர்களாக உணர்ந்து வைராக்யமாக விட்டால் தான் உண்டு. மிகவும் கஷ்டமான ஒரு விஷயம் தான்.

    இந்த நாளுக்கு ஏற்ற நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  5. யோசிக்க வைக்கும் கவிதை ...!

    பதிலளிநீக்கு
  6. முடியலை.......ஹிஹி! விட முடியலை...!

    பதிலளிநீக்கு
  7. //சில ஆண்டுகளுக்கு முன்’ பான் பராக்’ பழக்கத்தில் இருந்த ஒரு இளைஞனை அடையார் புற்றுநோய் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றேன்,மதிவளத்துணைக்காக //
    தலைவரே , மிக நல்ல பதிவு. இந்த மாதிரியான சமுக நல தொண்டுகளும் செய்கிறீர்களா? . ஆச்சரியமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. ஒரு நாள் மட்டுமேன்?
    ஆண்டு முழுவதும்
    எதிர்ப்பு தினமாகட்டும்
    இப்பொல்லாத புகையிலைக்கு

    நல்ல கருத்துக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  9. சொன்னா எங்க கேக்குரானுங்க ?

    பதிலளிநீக்கு
  10. புகையிலை பொருட்கள் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் தடை செய்வது, புகையிலை பொருட்கள் மீதான வரிகளையும் அதிகரிப்பது என்று கடந்த சில வருடங்களாகச் செய்வதைப் போலல்லாமல் புகையிலைப் பொருட்களை தயாரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்பு தனிமனிதருக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் அது தீமை பயக்கும் என்பதை நாம் உணர வேண்டும். அப்பொழுதான் அதற்கு எதிராக நாம் அனைவரும் இணைந்து போராட முடியும்.

    பதிலளிநீக்கு
  11. //புகையை நீங்கள் விட்டீர்கள்,
    ஆனால் அப்புகை உங்களை விடாது
    உங்கள் புகையைக் காணாமல்!//

    எத்தகை உண்மை பித்தரும் வரிகளில்!?
    சிந்தனைச் செய்திட செப்பினீர் நன்று!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  12. @வீடு சுரேஸ்குமார்
    ’ பிடிச்சா’ எப்படி விட முடியும்.இனிமே ’பிடிக்க’க்கூடாது!
    நன்றி

    பதிலளிநீக்கு
  13. @Tamilan
    சுயநலத்தில்தான் பொதுநலம் தொடங்குகிறது!அந்த இளைஞன் எனக்கு உறவு!
    வருகைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  14. பாலா சொன்னது…

    //சொன்னா எங்க கேக்குரானுங்க ?//
    அவங்களாப் புரிஞ்சிக்கிட்டு நிறுத்தணும்!
    நன்றி

    பதிலளிநீக்கு
  15. @வெங்கட ஸ்ரீநிவாசன்
    உண்மைதான்
    நன்றி

    பதிலளிநீக்கு