தொடரும் தோழர்கள்

செவ்வாய், டிசம்பர் 13, 2011

எனக்குக் காய்ச்சல்!

சாதாரணமாக விடுப்பு வேண்டும் கடிதங்கள் இப்படித்தான் ஆரம்பமாகும்!

"ஆஸ் ஐ ஆம்  சஃபரிங்  ஃப்ரம் ஃபீவர்,......................................................................              ..............................................................”

 ஆம்,எனக்குக் காய்ச்சல் வந்து விட்டது!

ஒவ்வொரு ஆண்டும் இந்த நேரத்தில் வரும் காய்ச்சல்தான்.

நான் விரும்பும் காய்ச்சல்!

ஆம்! சங்கீதக் காய்ச்சல்.

சென்னையில் இசை விழாக்கள் தொடங்கி விட்டன!

ஒரு நண்பரின் தயவால் ஒவ்வோரு ஆண்டும் நாரதகானசபாவுக்கு ஒரு ஓசி சீசன் டிக்கட் வந்து விடுகிறது.

முக்கிய விழாவும் கச்சேரிகளும் 16ஆம் தேதி ஆரம்பம்.முதல் நாள் கதிரி, மறுநாள் உன்னி கிருஷ்ணன் என்று வரிசையாகக் கச்சேரிகள்.

ஆனால் இப்போதே பல இலவச நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்து கொண்டி ருக்கின்றன.

காய்ச்சலின் உக்கிரம் ஏறிக்கொண்டிருக்கும் நிலையில் ,தினமும் பதிவுலக உலா என்பது இயலாத செயல்.

அப்படி ஏதாவது பதிவிட வேண்டும் எனில் இருக்கவே இருக்கிறது ”மீள்பதிவு!”



இந்நிலை 2012,ஜனவரி 1ஆம் தேதி வரையே!

இடைப்பட்ட நாட்களில் தொடர்பில் இருக்க முயல்வேன்!

நன்றி!!

26 கருத்துகள்:

  1. வணக்கம்,ஐயா!இசை விழாவை ரசியுங்கள்.முடிந்தபின்,எழுதுவதற்கு நிறையவே விடயங்கள் கிட்டும்!

    பதிலளிநீக்கு
  2. அட, காலையில்தான் பதிவர்கள் விடுப்பு எடுக்கக் கூடாதுன்னு ஒரு பதிவுப் போட்டேன். அதுக்குள்ள இப்படியா?!

    அந்தப் பதிவு இதுதான்.

    விட வேண்டாம் இடைவெளி...!

    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அண்ணே பேஷா பாருங்கோ...என்சாய் பண்ணுங்கோ!

    பதிலளிநீக்கு
  4. மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும். சங்கீத மழையில் நீங்கள் நனைந்துவிட்டு வரும்போது காய்ச்சல் போய்விடும். நீங்கள் ரசித்த கச்சேரிகளையே வர்ணனையாகத் தாருங்களேன்... ரசிக்கிறோம்...

    பதிலளிநீக்கு
  5. கொடுத்துவைத்தவர் நீங்கள்! இசை விழாவை இரசித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

    நண்பர் திரு யோகா சொன்னதுபோல் இசை விழாவில் நிறைய சுவையான செய்திகள் கிடைக்கும். விழாவுக்கு செல்லமுடியாத எங்களுக்கு உங்கள் பதிவே, இசை மழைபோல் பொழியட்டும்.

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள்....
    காத்திருக்கிறோம்..
    எதிர்பார்த்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  7. சூப்பரா என்ஜாய் பண்ணுங்க தலை, இசை மழை இதயத்திற்கு ரொம்ப நல்லது...!!!

    பதிலளிநீக்கு
  8. இசை கேளுங்கள் காய்ச்சல் போய்விடும்...

    மார்கழி உற்சவம்....

    பதிலளிநீக்கு
  9. தொபுக்கடீர்னு விழுந்து எழுந்து வரப் போறீங்க... ஒகே ஒகே

    பதிலளிநீக்கு
  10. இசையை ரசிக்காதார் யார் உளர். ரசிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு போயிட்டு வாங்க ஐயா

    பதிலளிநீக்கு
  11. நீங்க கொடுத்துவச்சவரய்யா கச்சேரியெல்லாம் நேரிலையே பார்த்து ரசிக்கிறிங்க.

    பதிலளிநீக்கு
  12. இசை ரசனை எல்லோருக்கும் அமைந்துவிடாது...
    நன்கு விடுமுறை எடுத்து ..
    இசையை ஆழ்ந்து ரசியுங்கள்.
    உங்களின் பதிவுகளுக்காக எப்போதும் நாங்கள் காத்திருப்போம்.

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துக்கள் ஐயா சந்தோசமாய் இசையை அனுபவியுங்கள் .

    பதிலளிநீக்கு
  14. சங்கீத மழையில் நனைந்து விட்டு வந்து நல்ல பல சுவாரசியமான விஷயங்களை தாருங்கள்.

    பதிலளிநீக்கு
  15. வருகை தந்து கருத்துச் சொன்ன அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  16. இசை வெள்ளத்தில் நீந்தி இனிதே
    வருக!






    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  17. சங்கீதம் கிடக்கு... டிபன் காபியெல்லாம் ஒரு கை பிடிங்க. enjoy.

    பதிலளிநீக்கு
  18. இசையை ரசித்துவிட்டு வாருங்கள்.. இன்னும் சுவாரசிய தகவல்களுடன்.

    பதிலளிநீக்கு
  19. Battery சார்ஜ் செய்த பின் புது உத்வேகத்துடன் பதிவுகளை எதிர்பார்க்கலாம் என்று நம்புகிறேன் . தொடர்ந்து விளையாடியபின் cricket வீரர்கள் பலர் ஒய்வு எடுப்பது போல் தான் இது . நிரந்தர ஓய்வு அல்லவே வாசு

    பதிலளிநீக்கு