தொடரும் தோழர்கள்

செவ்வாய், டிசம்பர் 06, 2011

பலவீனமே உங்கள் பலமாகலாம்!


ஒரு சிறுவன் இருந்தான்.அவனுக்குக் கராத்தே கற்றுக் கொள்ள வேண்டும் என மிகுந்த ஆசை.ஆனால் அவனுக்கு இடது கை இல்லை.முழுக்கையும் ஒரு விபத்தில் இழந்து விட்டிருந்தான். ஆயினும் அவன் ஆசைப் பட்டான்.

ஒரு கராத்தே மாஸ்டரிடம் சென்றான்.அவரும் கற்றுக் கொடுக்க இசைந்தார். பயிற்சி தொடங்கியது.சிறுவனும் மிக ஆர்வத்துடன் தீவிரமாகக்  கற்றுக் கொண்டான்.

ஆனால் ஓராண்டுக்குப் பின்னும் ஒரே ஒரு தாக்குதல் முறையையே   அவனுக்குச்  சொல்லிக் கொடுத்திருந்தார்.அவனுக்கு அது ஏன் என்றே தெரியவில்லை.அவன் மாஸ்டரிடம் கேட்டான் ”வேறு முறைகள் ஏதும் கறுத் தரவில்லயே?”

மாஸ்டர் சொன்னார்”இது ஒன்று போதும் உனக்கு.இதில் முழுத்தேர்ச்சி பெற்றால் போதும்.”

சில மாதங்களுக்குப் பின்  மாஸ்டர் அவனை ஒரு கராத்தே போட்டியில் கலந்து கொள்ளச் செய்தார்.அவனே ஆச்சரியப் படும் விதத்தில் அவன் முதல் இரண்டு சண்டைகளிலும் எளிதாக வெற்றி பெற்றான்.

மூன்றாவது போட்டி சிறிது கடினமாக இருந்தது.சிறிது நேரச் சண்டைக்குப் பின் எதிராளி பொறுமையிழந்த நேரத்தில் சிறுவன் அவனது ஒரே தாக்குதலைப் பயன் படுத்தி வென்றான்.

இறுதிப்போட்டிக்கு அவன் தகுதி பெற்று விட்டான். அப் போட்டியில்   அவன் எதிரி பெரியவனாக,பலம் வாய்ந்தவனாக இருந்தான்.அவனுடன் ஒப்பிடும்போது சிறுவன் சண்டைக்கே தகுதியற்றவன் போல் காணப்பட்டான்.

போட்டி ஆரம்பமானது.நீண்டநேரம் நடந்தது.ஒரு கட்டத்தில் எதிரி தனது பாதுகாப்பைச் சிறிது தளர விட்ட நேரத்தில் சிறுவன் அவனைத்தாக்கி வென்றான்!

போட்டி முடிந்து திரும்பும்போது மாஸ்டர் எல்லாச் சண்டையைப் பற்றியும் தன் கருத்துகளைச் சொன்னார்.அப்போது பையன் கேட்டான் ”மாஸ்டர்.ஒரே ஒரு தாக்குதலை  வைத்துக் கொண்டு என்னால் எப்படி வெற்றி பெற முடிந்தது?”

மாஸ்டர் சொன்னார்”நீ கற்றுக்கொண்டது கராத்தேயிலேயே மிகக் கடினமான ஒரு தாக்குதல்.அதோடு இந்தத் தாக்குதலி லிருந்து  எதிரி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள உன் இடது கையைப்  பிடித்தால்தான் முடியும்!”

ஆம்!அச்சிறுவனது பெரிய பலவீனமே அவனது பெரிய பலமாகி விட்டது!

உண்மைதான்.சரியான மனப்பாங்கும்,அணுகு முறையும் இருந்தால், நமது பலவீனத்தையே நமது பலமாக மாற்ற முடியும்!






56 கருத்துகள்:

  1. ஒருத்தரோட பலவீனம் இன்னொருவருக்கு பலம்.

    ஆனா தன்னோட பலவீனத்தையே பலமாக்குறது தான் உண்மையிலே பலம்.

    பதிலளிநீக்கு
  2. கோகுல் கூறியது...

    // ஒருத்தரோட பலவீனம் இன்னொருவருக்கு பலம்.

    ஆனா தன்னோட பலவீனத்தையே பலமாக்குறது தான் உண்மையிலே பலம்.//
    நன்றி கோகுல்.

    பதிலளிநீக்கு
  3. உண்மைதான்...


    தன்னுடைய பலவீனத்தை கூட் பலமாக மாற்றிக்கொள்பவர்க்கே இந்த உலகம் சிகப்பு கம்பளம் விரிக்கிறது..

    பதிலளிநீக்கு
  4. என் நண்பன் ஒருவனுக்கு இரண்டு கால்களும் போலியோ தாக்குதலில் போய்விட்டது, ஆனால் அவன்தான் எங்கள் ஊரில் நடக்கும் கல்யாணங்களுக்கு தாலி வாங்கிகொடுக்கும் வாய்ப்பை பெற்று, ஜெக ஜோதியாக வாழ்கிறான், ஆம் அவன் பலவீனமே அவனை பெரிய ஆளாக்கி விட்டது...!!!

    பதிலளிநீக்கு
  5. அருமையான ஆசான்,
    குறிப்பறிந்து யாருக்கு எதை செய்ய வேண்டும் என அறிந்து
    கற்றுக்கொடுத்த அந்த ஆசான் போற்றுதலுக்குரியவர்..

    பதிலளிநீக்கு
  6. உண்மைதான்.சரியான மனப்பாங்கும்,அணுகு முறையும் இருந்தால், நமது பலவீனத்தையே நமது பலமாக மாற்ற முடியும்!

    பலமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  7. ஆம்..அனைத்திற்கும் நம் மனமே காரணம்..

    பதிலளிநீக்கு
  8. //உண்மைதான்.சரியான மனப்பாங்கும்,அணுகு முறையும் இருந்தால், நமது பலவீனத்தையே நமது பலமாக மாற்ற முடியும்!//

    மிகச்சரியானது தான்....

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  9. அண்ணே...சரியா சொன்னீங்க...மற்றவர்களுக்கு எப்படி வேண்டுமானாலும் தெரியலாம்....ஆனால் நெஞ்சுரம் ஒவ்வொருவருடனும் இருக்க வேண்டியது அவசியம்!...நன்றி!

    பதிலளிநீக்கு
  10. அந்தச் சிறுவனுக்கு இருந்தது போல தன்னம்பிக்கை இருந்தால் பலவீனமே பலமாக மாறிவிடும்தான். அழகான பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. //அச்சிறுவனது பெரிய பலவீனமே அவனது பெரிய பலமாகி விட்டது!

    உண்மைதான்.சரியான மனப்பாங்கும்,அணுகு முறையும் இருந்தால், நமது பலவீனத்தையே நமது பலமாக மாற்ற முடியும்!//

    மிகவும் அருமையான கருத்தை அழகான கதையாக சொல்லியிருக்கீங்க
    நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  12. அருமையான கருத்தை தான் சொல்லி இருக்கீங்க ஐயா

    த.ம எட்டு

    பதிலளிநீக்கு
  13. கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

    // உண்மைதான்...


    தன்னுடைய பலவீனத்தை கூட் பலமாக மாற்றிக்கொள்பவர்க்கே இந்த உலகம் சிகப்பு கம்பளம் விரிக்கிறது..//
    நன்றி சௌந்தர்.

    பதிலளிநீக்கு
  14. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //என் நண்பன் ஒருவனுக்கு இரண்டு கால்களும் போலியோ தாக்குதலில் போய்விட்டது, ஆனால் அவன்தான் எங்கள் ஊரில் நடக்கும் கல்யாணங்களுக்கு தாலி வாங்கிகொடுக்கும் வாய்ப்பை பெற்று, ஜெக ஜோதியாக வாழ்கிறான், ஆம் அவன் பலவீனமே அவனை பெரிய ஆளாக்கி விட்டது...!!!//
    நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  15. மகேந்திரன் கூறியது...

    //அருமையான ஆசான்,
    குறிப்பறிந்து யாருக்கு எதை செய்ய வேண்டும் என அறிந்து
    கற்றுக்கொடுத்த அந்த ஆசான் போற்றுதலுக்குரியவர்..//
    நன்றி மகேந்திரன்

    பதிலளிநீக்கு
  16. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...

    //அருமை.//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  17. இராஜராஜேஸ்வரி கூறியது...

    //உண்மைதான்.சரியான மனப்பாங்கும்,அணுகு முறையும் இருந்தால், நமது பலவீனத்தையே நமது பலமாக மாற்ற முடியும்!

    பலமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..//
    நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  18. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //ஆம்..அனைத்திற்கும் நம் மனமே காரணம்..//
    நன்றி கருன்.

    பதிலளிநீக்கு
  19. கோவை2தில்லி கூறியது...

    //உண்மைதான்.சரியான மனப்பாங்கும்,அணுகு முறையும் இருந்தால், நமது பலவீனத்தையே நமது பலமாக மாற்ற முடியும்!//

    // மிகச்சரியானது தான்....

    நல்ல பகிர்வு.//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  20. விக்கியுலகம் கூறியது...

    //அண்ணே...சரியா சொன்னீங்க...மற்றவர்களுக்கு எப்படி வேண்டுமானாலும் தெரியலாம்....ஆனால் நெஞ்சுரம் ஒவ்வொருவருடனும் இருக்க வேண்டியது அவசியம்!...நன்றி!//
    நன்றி விக்கி.

    பதிலளிநீக்கு
  21. கணேஷ் கூறியது...

    //அந்தச் சிறுவனுக்கு இருந்தது போல தன்னம்பிக்கை இருந்தால் பலவீனமே பலமாக மாறிவிடும்தான். அழகான பகிர்வுக்கு நன்றி.//
    நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  22. RAMVI கூறியது...

    //அச்சிறுவனது பெரிய பலவீனமே அவனது பெரிய பலமாகி விட்டது!

    உண்மைதான்.சரியான மனப்பாங்கும்,அணுகு முறையும் இருந்தால், நமது பலவீனத்தையே நமது பலமாக மாற்ற முடியும்!//

    // மிகவும் அருமையான கருத்தை அழகான கதையாக சொல்லியிருக்கீங்க
    நன்றி பகிர்வுக்கு.//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  23. M.R கூறியது...

    // அருமையான கருத்தை தான் சொல்லி இருக்கீங்க ஐயா

    த.ம எட்டு//
    நன்றி ரமேஷ்

    பதிலளிநீக்கு
  24. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    //அருமையான கருத்து .. நன்றி

    இன்று

    விஜய் ஏன் அதிகமாக எல்லா இடத்திலும் கலாய்க்கபடுகிறார்.//
    நன்றி ராஜா.

    பதிலளிநீக்கு
  25. //சரியான மனப்பாங்கும்,அணுகு முறையும் இருந்தால், நமது பலவீனத்தையே நமது பலமாக மாற்ற முடியும்!//

    உண்மைதான். அது இல்லாததால்தான் நம்மில் பலர் வெற்றிவாய்ப்பை இழந்துகொண்டு இருக்கிறோம். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  26. உண்மை தான் - பலம் பலவீனம் இரண்டுமே நம்மிடமே.. சரியாக புரிந்தால்...பலமான கருத்து. நன்றி பகிர்வுக்கு

    பதிலளிநீக்கு
  27. ஆமாம அய்யா! தவிர பலவீனம் பயிற்சியால் பலம் பெறுவதுண்டு,நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  28. அருமையான கருத்துக் கதை அய்யா
    மனிதனுக்கு பெரிய பலமே அவனின் பலவீனத்தை அறிந்திருப்பதுதான்.

    பதிலளிநீக்கு
  29. தன்னம்பிக்கை தரும் கதை.
    பகிர்வுக்கு நன்றி.

    என் கவிதைக்கு தவறுதலாக பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள் அய்யா.
    மறுபடி வருகை தரவும்.

    பதிலளிநீக்கு
  30. வே.நடனசபாபதி கூறியது...

    //சரியான மனப்பாங்கும்,அணுகு முறையும் இருந்தால், நமது பலவீனத்தையே நமது பலமாக மாற்ற முடியும்!//

    //உண்மைதான். அது இல்லாததால்தான் நம்மில் பலர் வெற்றிவாய்ப்பை இழந்துகொண்டு இருக்கிறோம். நல்ல பதிவு.//
    நன்றி சபாபதி அவர்களே.

    பதிலளிநீக்கு
  31. மனசாட்சி கூறியது...

    //உண்மை தான் - பலம் பலவீனம் இரண்டுமே நம்மிடமே.. சரியாக புரிந்தால்...பலமான கருத்து. நன்றி பகிர்வுக்கு//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  32. Yoga.S.FR கூறியது...

    // பலவீனமே பெரிய பலம்.//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  33. shanmugavel கூறியது...

    //ஆமாம அய்யா! தவிர பலவீனம் பயிற்சியால் பலம் பெறுவதுண்டு,நல்ல பதிவு.//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  34. A.R.ராஜகோபாலன் கூறியது...

    //அருமையான கருத்துக் கதை அய்யா
    மனிதனுக்கு பெரிய பலமே அவனின் பலவீனத்தை அறிந்திருப்பதுதான்.//
    நன்றி ஏஆர் ஆர்!

    பதிலளிநீக்கு
  35. சிவகுமாரன் கூறியது...

    // தன்னம்பிக்கை தரும் கதை.
    பகிர்வுக்கு நன்றி.

    என் கவிதைக்கு தவறுதலாக பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள் அய்யா.
    மறுபடி வருகை தரவும்.//
    இரட்டை நன்றி--கருத்துக்கும்,தவறை சுட்டிக்காட்டியதற்கும்!

    பதிலளிநீக்கு
  36. அருமையான பகிர்வு .நன்றி ஐயா பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  37. Romba arumai Sir!
    Very nice.
    Palaveenathai Palamaaga maatra mudiyum. Aha...
    TM 12.
    Tamil ten - 17
    Indli 10.

    பதிலளிநீக்கு
  38. அம்பாளடியாள் சொன்னது…

    //அருமையான பகிர்வு .நன்றி ஐயா பகிர்வுக்கு .//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  39. துரைடேனியல் கூறியது...

    Romba arumai Sir!
    Very nice.
    Palaveenathai Palamaaga maatra mudiyum. Aha...
    TM 12.
    Tamil ten - 17
    Indli 10.
    நன்றி துரைடேனியல்.

    பதிலளிநீக்கு
  40. உண்மை தான் . விபத்தில் காலை இழந்த சுதா சந்திரன் தனது விட முயற்சியால் செயற்கை கால் பூட்டி கொண்டு நடனத்தில் சாதனை புரிந்து பல திரை படங்களிலும் நடித்து பெயர் பெற்றார் சின்ன திரையுலம் அடிக்கடி தோன்றுகிறார் . இதே போல் இன்னும் பலர் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பினால் உடைந்து விடாமல் சாதனைகள் புரிந்த சம்பவங்கள் உண்டே. தன்னம்பிக்கைக்கு பலம் சேர்க்கும் வண்ணம் இது போல் பதிவினை அவ்வப்போது எதிர்பார்க்கலாமா. வாசு

    பதிலளிநீக்கு
  41. பலவீனத்தை பலமாக்கினால் இவ்வுலகை வெற்றிகொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  42. வணக்கம் ஐயா,
    நல்லா இருக்கீங்களா?

    ஓர் மாணவனின் பலவீனத்தைப் பலமாக மாற்றும் வண்ணம் ஆலோசனை சொல்லிக் கொடுத்த ஆசிரியரின் செயலினையும், மாணவனின் செயலினையும் விளக்கிக் கூறி பலவீனங்களைப் பலமாக நாம் அனைவரும் மாற்றிக் கொள்ள வேண்டும் எனும் நீதியினை நினைவுபடுத்தியிருக்கிறீங்க.

    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  43. நமக்குள் உள்ள திறமைகளை கண்டுப்பிடிக்க பெரும்பாலும் நாம் முயலுவதே இல்லை.
    பகிர்விற்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு