வரும்போது வாசல்ல பொங்கல் பிரசாதம் கொடுத்தாங்களா.சாப்பிட்டதுக்கப்புறம் அந்தத் தொன்னையை எத்தனை பேர் குப்பைத்தொட்டில போட்டீங்க? பெரும்பாலோர் அப்படிச் செய்யாம ரோடு ஓரத்தில போட்டுட்டு வந்திருப்பீங்க.அங்க ஒருத்தர் சொல்றார் சாமி மண்டபத்து உள்ள கொண்டு வந்து போடலையேன்னு சந்தோஷப்படுங்கன்னு!.(சிரிப்பு)
நம்ம சுற்றுப்புறததைச் சுத்தமா வச்சுக்கணும்கற உணர்வு நம்மகிட்ட இல்லை
இது போலததான் நம்ம மனத்தையும் குப்பையா வச்சிட்டிருக்கோம்.
நேற்றுக் காலையில சத்சங்கத்துக்கு
வந்த ஒரு கிரகஸ்தர்,நிறைய பழங்கள் எல்லாம் கொண்டு வந்து சாமிகிட்ட குடுத்தார்.
சாமி கேட்டார் என்னப்பா விசேஷம்னு.
அவர் சொன்னார்”சாமி!எங்க வீட்டுல மாடத்தில
பரம்பரையா அம்மன் இருக்கான்னு நாங்க வெள்ளிக்கிழமை தவறாம பூசை பண்ணிப்
பிரசாதமெல்லாம் படைச்சுக் கும்பிடறோம்.அந்தப் பிரசாதம்தான் இது”
சாமிகேட்டார்”ரொம்ப சந்தோஷம்பா.அம்மன்
கிட்ட நீ ஏதாவது வேண்டியிருப்பியே? என்ன கேட்டே?”
நல்லாருக்கணும்னு வேண்டினேன் சாமி.
உலகமே நல்லாருக்கணும்னு வேண்டினியா.இல்ல
உன் குடும்பம் மட்டும் நல்லாருக்க ணுன்ம்னு வேண்டினையா?
அவர்கிட்டிருந்து பதில் இல்லை.
தலையக் குனிஞ்சிட்டு நிக்கறார்.அவர்னு
இல்ல .எல்லாருமே இப்படித்தான்.எனக்கு அதைக் கொடு இதைக்கொடுன்னு ஆண்டவனை
வேண்டறோம்.அவனுக்குத் தெரியாதா,உனக்கு என்ன வேணும்னு.நமக்கு எது தகுதியோ,நமக்கு
எது நல்லதோ அதை அவன் தருவாங்கிற நம்பிக்கை நம்ம கிட்ட இருக்கா?
ஒருத்தர் கேட்டார்.
அவர் வீட்டு மாடத்தில அம்மன்
இருக்கான்னு சொன்னாரே;உண்மையா கடவுள் எங்கே இருக்கார்னு
சாமி பிரகலாதன் மாதிரி தூணிலும்
இருப்பான் துரும்பிலும் இருப்பான்னு சொல்வார்னு எதிர்பார்த்தாரோ என்னவோ(சிரிப்பு)
சாமி
சொன்னார்”
இறைவன் உன் வீட்டு மாடத்திலும் மண்டபத்திலும், கூடத்திலும் கோவிலிலும்,வேடம் அணிந்த ஆஷாடபூதிகளிடமும் இருக்கான்னா நினைக்கிறாய். இல்ல.அவன் இதயத்தில
இருக்கான்.யார் இதயத்திலன்னு கேள்வி வருதா.யார் ஆசையை விட்டாங்களோ அவங்க இதயத்தில.நெஞ்சம்
அளவில்லா அதீத ஆசைகளால நிரம்பியிருந்தா அதனாலே அந்த ஆசையின் காரணமா இன்னும் பல
இதயத்தில குடியேறிடும் ....கோபம்,பொறாமை,வெறுப்பு இப்படி.இதெல்லாம் குப்பைகள்.ஒரு
இடம் காலியாக சுத்தமாக இருந்தால்,அங்கு குடியேறலாம்.அங்கு குப்பைகள்
நிரம்பியிருந்தால்? அது போல குப்பைகள் நிரம்பிய இதயத்தில் கடவுள் எப்படி
குடியேறுவார்,அதனால் மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்,
திருமூலர்
சொல்றார்...
”மாடத் துளானலன் மண்டபத் துளானலன்
கூடத் துளானலன்
கோயி லுளானலன்
வேடத் துளானலன் வேட்கைவிட்
டார்நெஞ்சில்
மூடத் துளேநின்று முத்திதந் தானே”--
அதாவது
கடவுள் வீட்டு மாடத்திலோ,மண்டபத்திலோ,கூடத்திலோ,கோவிலிலோ,திரு வேடத்திலோ இருப்பவன்
இல்லை.ஆசையை விட்டவர் நெஞ்சில் மறைந்திருந்து முக்தி அளிக்கிறான்.
இதெல்லாம்
ஒரு ராத்திரில நடக்கிற காரியமில்ல.ஆனா முயற்சி செய்யணும்.இங்க பொழுது போக்கறத்துக்கு
வந்துட்டு,வீட்டுக்குப்போனது எல்லாத்தையும் மறந்திட க்கூடாது.முயற்சி
திருவினையாக்கும்,
உங்க வீட்டை யும் சுற்றுப்புறதையும் சுத்தமா வச்சுக்குங்க,
உங்க மனதையும்தான்
ஆசீர்வாதம்
(ஸ்வாமி பித்தானந்தாவின் உரையிலிருந்து)