தொடரும் தோழர்கள்

பெண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், பிப்ரவரி 29, 2016

ஒரு நாவல்



என்னய்யா மோந்து பாக்கறே?

நீ என்ன சாதின்னு கண்டுபிடிக்கத்தான்.

அடச்சீ!மோந்து பாத்து சாதியைச் சொல்வியோ?சொல்லு!நான் என்ன சாதின்னு.

நீ நினைக்கிசாதி இல்ல இது.

பின்ன?

பெண்களை பத்மினி,சித்தினி,சங்கினி,அத்தினின்னு நாலு சாதியாப் பிரிச்சிருக்காங்க.
ஒவ்வொரு சாதிப் பெண்ணு கிட்டயும் ஒரு வாசனை.;நாற்றம்!


ஓகோ!நான் என்ன சாதிய்யா?

நிச்சயமா முதல் மூணு இல்ல!
.....................    

முதல் முத்தம்     
 
இதழ் தேடிக் குனிந்தான் 

அய்யோ!என்ன நாற்றம்?பல் தேய்க்க மாட்டாளா?

விலகினான்

அவள் ஏமாற்றத்துடன் கேட்டாள்,ஆங்கிலத்தில்தான்”என்ன ஆச்சு!”

ஒன்றுமில்லை.இன்று வேண்டாம்!       
....................       


இது வெளி வர இருக்கும் ஒரு நாவலின் முன்னோட்டம்!

நாவலின் தற்காலிகத் தலைப்பு”கற்பூரம் நாறுமோ?”

மேலும் அதிகத் தகவல்கள் ....தொடரும்!

................

என்ன ஆயிற்று உனக்கு?

இரவு சரியான உறக்கம் இல்லை.சரி

அதன் காரணமாக உடற்சோர்வு ஏற்படவே செய்யும்

அது மனச் சோர்வுக்கு வழி வகுக்கலாமா?

நம் கவலையால் எதுவும் மாறப் போவதில்லை.

இணையம் மனச்சோர்வுக்கு ஒரு மருந்து.

படைக்க இயலாவிடினும்  படிக்கலாம் அல்லவா?

அதையாவது செய். 

கருத்துச் சொல்.பாராட்டு.

செய்வாய் என நம்பு!


சனி, ஜனவரி 02, 2016

பெண்ணிடம் கேட்கலாமா?



இன்றும் கடையில் அந்தப் பெண்தான் இருந்தாள்.

இருபது நாட்களாகவே ,நான் கடைக்கு வரும்போதெல்லாம் அவள்தான் இருக்கிறாள்.

கடை முதலாளி,எனக்குப் பரிச்சயமானவர்;அவரை இப்போதெல்லாம் காண முடிவதில்லை.

ஒரு வேளை மற்ற நேரங்களில் இருப்பாரோ என்னவோ?

பெண் அழகாகத்தான் இருக்கிறாள்

முதலாளிக்கு உறவாக இருக்கலாம்

அல்லது வேலைக்கு வந்த பெண்ணாக இருக்கலாம்

ஆனால் அவளைப் பார்த்தால் வேலைக்கு வந்த பெண்ணாகத் தோன்றவில்லை.

பத்து நாட்களாகவே ஒரே யோசனை.

அவளிடம் எப்படிக் கேட்பது?

இந்த வயதில் இவர் ஏன் இப்படி அலைகிறார் என்று எண்ண மாட்டாளா?

அதற்காக விட்டு விட முடியுமா?

இன்று எப்படியும் கேட்டு விட வேண்டியதுதான்.

கடைக்குச் சென்றேன்

இன்னும் ஓரிரு வாடிக்கயாளர் இருந்தனர்.

அவளிடம் தாழ்ந்த குரலில் கேட்டே விட்டேன்!

அவள் என்னை ஒரு மாதிரிப் பார்த்தாள்

பின் சிரித்தாள்.

அப்புறம்   வாருங்கள் என்று கிசுகிசுப்பாசக் சொன்னாள்

நான் கொஞ்சம் நடந்து விட்டு அவ்வழியாகத் திரும்பினேன்.

கடையை நெருங்கினேன்.

அவள் இருந்தாள்

வேறு யாரும் இல்லை.

அவள் அருகில் சென்றேன்

“அப்போது வேறு சில புதியவர்கள் இருந்தனர்;அதனால் தர முடியவில்லை இந்தாருங்கள்”

குனிந்தாள் 

கொடுத்தாள்

”பிள்ளையாரா? முருகன் இல்லையா? ”நான்

”இல்லை சார் இந்த ஆண்டு பிள்ளையார் மட்டும்தான்!”



வெள்ளி, டிசம்பர் 11, 2015

கேள்வி கேட்ட குஷ்பு!



இது குஷ்புவின் கதை!

கதை என்றால் முழுக் கதை அல்ல.

ஒரு நிகழ்வு;சுவாரஸ்யமான நிகழ்வு.

அவ்வளவே.

ஆனால் இது குஷ்பு என்னும் புதுமைப் பெண்ணை வெளிச்சம் போட்டுக் காட்டும் நிகழ்வு.

அவளது நண்பிகள் அவளிடம் வந்து சொன்னார்கள்,மாப்பிள்ளை ஓம்வீருக்கு புரோகிதர் சொன்ன மந்திரங்களையே சரியாகத் திருப்பிச் சொல்லத் தெரிய வில்லை என்று

ஆம்;குஷ்புவுக்குக் கல்யாணம்

மாப்பிள்ளை ஒரு பட்டதாரி என்றுதான் சொல்லியிருந்தான்.

அவனுக்கா மந்திரங்களைத் திருப்பிச் சொல்லத் தெரியவில்லை?

குஷ்பு யோசித்தாள்

அவனிடம் சென்றாள். 

சுற்றியிருந்த உறவினர்களிடம் சொன்னாள்,தான் மாப்பிள்ளையைச் சில கேள்விகள் கேட்க விரும்புவதாக.

அவனிடம் சில நாணயங்களைக்  கொடுத்துக் கூட்டுத்தொகை எவ்வளவு எனக் கேட்டாள். 

அவன் நாணயங்களைக் கையில் வைத்தபடி விழித்தான்.

அடுத்து அவனிடம் தனது சாமர்த்தியக் கைபேசியைக் கொடுத்து அதைப் பயன்படுத்தச் சொன்னாள்.

அவன் பரிதாபமாக விழித்தான்.

குஷ்பு தெரிந்து கொண்டாள்,அவன் படிப்பு பற்றிப் பொய் சொல்லியிருப்பதை.

கல்யாணம் நின்றது.

புதுமைப் பெண் குஷ்பு.

முழுப் பெயர் குஷ்பு சக்சேனா!

(டைம்ஸ் ஆஃப் இந்தியா,சென்னை,10-12-2015)

0

செவ்வாய், ஜூன் 16, 2015

சுமை சுமந்து சோர்ந்திருக்கும் பெண்ணே!




சுமக்கத் தொடங்கி விட்டாயா பெண்ணே?

உனக்குத்தான் எத்தனை சுமைகள் வாழ்க்கையில்!

இன்பமானவை சில;துன்பமானவை சில.

இந்த வயதில் பிற சிறுமிகள் சுமப்பர் புத்தகச் சுமை.

அதுவின்றி வந்ததோ உனக்கு இந்தக் குடச்சுமை?

காலிக்குடம் இப்போது ,கனமின்றி இருக்கும்

நிறை குடமானபின் எங்ஙனம் சுமப்பாய்?

ஒன்றல்ல மூன்று குடம் சுமப்பது எளிதோ?

பழ்கத்தான் வேண்டும்,சுமக்க

உடற்சுமை,உயிர்ச்சுமை

வயிற்றுச்சுமை,இடுப்புச்சுமை

கைச்சுமை,கால்சுமை யென

எல்லாச்சுமையும் சிறிதேனும் இறக்கலாம்

இறக்குவது எங்கே வாழ்நாளில் உன் மனச்சுமை?


(நிழற்படம் :டைம்ஸ் ஆஃப் இந்தியா)

சனி, அக்டோபர் 22, 2011

கற்புக் கற்பென்று............

கற்பென்பது என்ன?

அது உடல் சம்பந்தப் பட்டதா?உள்ளம் சம்பந்தப்பட்டதா?அல்லது இரண்டுமா?

ஒரு பெண் கற்பிழந்தவள் என்று கூறும் நாம் ஆண் கற்பிழந்து விட்டான் என எப்போதாவது சொல்கிறோமா? ஏன்?

ஆணுக்குக் கற்பு என்பது கிடையாதா?

ஆண் எத்தனை பெண்களுடன் உறவு கொண்டாலும் தன் மனைவி மட்டும் கற்புடையவளாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது ஏன்?

அவள் கற்புடையவள் என்பதை அவன் எப்படித்தீர்மானிக்கிறான்? கன்னித்திரையின் (hymen) தன்மையை வைத்தா?அது மட்டுமே சரியான நிரூபணம் ஆகுமா?

அவனுடன் உடலுறவு கொள்ளும் போதெல்லாம் மனதில் வேறெவனையோ நினைத்துக் கொண்டு அவள் இருப்பாளாகில் அது கற்பாகுமா?

உடலுறவின் விளைவை உடல்ரீதியாகச் சுமந்து வெளிக்காட்டுபவள் அவள் என்பதால்,அத்தகைய இடர்ப்பாடுகள் ஏதும் ஆணுக்கில்லை யென்பதால், கற்பென்பது பெண்ணுக்கு மட்டுமே உரியதாக்கப் பட்டதா?

ஒரு வன்புணர்வில் ஒரு பெண் தன் பெண்மையை இழந்திருந்தால் அவள் கற்பிழந்தவள் ஆவாளா?

வன்புணர்வென்பது என்ன?

இந்தியக் குற்றவியல் சட்டம் செக்சன் 375 சொல்கிறது—

ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் எதிலாவது உடலுறவு கொண்டால் அது வன்புணர்வு.

1)அவளது விருப்பமில்லாமல்

2) அவளது சம்மதமின்றி

3)அவளுக்கு அவள் விரும்பும் யாருக்கோ இடர் விளைவிப்பதாகச் சொல்லிச் சம்மதம் பெற்று

4)அவள் அவனைத் தன் கணவன் என்ற தவறான நம்பிக்கையில்,,அது அவனுக்குத்தெரிந்தும்,சம்மதம் அளிக்கும்போது

5)அவளது சம்மதம் அவள் மனநிலை சரியில்லாத நேரத்திலோ அல்லது அவளுக்கு ஏதாவது போதை மருந்து கொடுத்து அதன் காரணமாகவோ அவள்நடக்கப்போகும் நிகழ்வின் விளைவுகளை புரிந்து கொள்ளாத நிலையில் பெறப்பட்டால்

6)சம்மதத்துடனோ சம்மதமில்லாமலோ-அவள் பதினாறு வயதுக்கு உட்பட்டவளாக இருந்தால்.

எனவே நிச்சயமாக அப்படி ஒரு நிகழ்வு அவளது கற்பென்று கதைக்கப்படும் விஷயத்துக்குக் களங்கமாகாதுதானே?

பாரதி சொல்வான் ----

ஆண்க ளெல்லாம்
களவின்பம் விரும்புகின்றார்; கற்பே மேலென்று
ஈரமின்றி யெப்போதும் உபதே சங்கள்
எடுத்தெடுத்துப் பெண்களிடம் இயம்பு வாரே!

ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,
அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?

………..

……..

காணுகின்ற காட்சியெல்லாம் மறைத்து வைத்துக்
கற்புக்கற் பென்றுலகோர் கதைக்கின் றாரே?

நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்,கற்பு என்பது நமது கலாசாரத்துக்கு மட்டும் உரியது என்று.

இல்லை!

ஷேக்ஸ்பியரின் ”தி ரேப் ஆஃப் லுக்ரீஸ்” என்ற கவிதையில் .ஒரு பெண் கற்பிழந்ததைப் பற்றிக் கூறுகிறார்—

//she hath lost a dearer thing than life,//

”உயிரை விட மதிப்பு வாய்ந்த ஒன்றை அவள் இழந்து விட்டாள்”

ஆக எங்குமே கற்புக்கு ஒரே அளவுகோல்தான்.

அதைப் பெண்களுக்கு மட்டுமே உரியதாகி விட்டது இந்தச் சமூகம்!