தொடரும் தோழர்கள்

அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, அக்டோபர் 03, 2015

உண்டென்றால் அது உண்டு!



//வாழ்க்கையின் சூறாவளிகளில் நமக்கு உதவ அவன் இருக்கிறான் என்ற  நம்பிக்கை நமக்கும் வேண்டும்.// ...சென்னை பித்தனின் அந்த மானைப் பாருங்கள் பதிவிலிருந்து.

//அற்புதம் - கடைசி வரியைத் தவிர.

இல்லை. அப்படி இருந்தால் அவளாகவும் இருக்கலாம். இல்லையா?// 
....அப்பதிவில் திரு அப்பாதுரை அவர்களின் கருத்து.

இல்லை-இல்லையா ஆகி விட்டது.
அவனும் அவளும்தானே அர்த்தநாரி? 
இப்படி என் எண்ணச் சிறகுகள் விரிந்தன.அவன்-  அவள்-அது...!அதுவாகக் கூட இருக்கலாம் தானே! நிலம்,நீர்,நெருப்பு,காற்று,அண்டம்-பஞ்சபூதங்கள்!

ஒவ்வொன்றுக்கும் ஒரு தலம் . அதை வர்ணித்து தீக்ஷிதர் கீர்த்தனைகள் பாடியுள்ளார்
                                  ஊர்                      கீர்த்தனை                                         ராகம்
நிலம்           காஞ்சிபுரம்                   ஏகாம்பரநாதம்                               ஆனந்தபைரவி
நீர்               திருவானைக்கா            ஜம்புபதே                          யமுனாகல்யாணி            
நெருப்பு       திருவண்ணாமலை        அருணாசலநாதம்                           சாரங்கா
காற்று          காளஹஸ்தி                  காளஹஸ்தீசம்                               உசேனி
அண்டம்       சிதம்பரம்                     ஆனந்தநடன                                  கேதாரம்

மகாகவி காளிதாசர் சாகுந்தலத்தில் இறை வணக்கத்தை இயற்கைத் தேவதைகளுக்கு அர்ப்பணித்துள்ளர்.

இறைவனைப் போற்றுவதும்,தூற்றுவதும் அவரவர் இன்பதுன்பங்களைப் பொறுத்தே அமையும்

450க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை(நமக்குக் கிடைத்தது வரை) சுந்தரத் தெலுங்கினில் இயற்றிய தியாக ராஜர்.இராமனைக் கண்டித்தும் உள்ளார்போலி பக்தர்களையும், மெய்ய டியார்களையும் சமமாக்குவது உனக்கு மரியாதை அல்ல.என்னை இன்னும் ரட்சிக்காமல் இருப்பது சரிஅல்லஎன்று!

நமது தமிழ்த் தியாகராசர் சிவனும் நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா? நீ இரங்காயெனில்  புகலேது என்றெல்லாம் அவளைக் கேட்டிருக்கிறார்.

நம் கவியரசு அவர்கள் ராமன் எத்தனை ராமனடி என்று நாமாவளி பாடி விட்டு “கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்” அவனுக்கென்ன தூங்கி விட்டான்,  அகப்பட்டவன் நானல்லவா”,காலம் செய்த கோலமடி,கடவுள் செய்த குற்றமடி” என்றெல்லாம் பாடியிருக்கிறார்

ஆனால் நோபல் பரிசு பெற்ற பௌதிக விஞ்ஞானி லியான் மேக்ஸ் லெடெர்மேன் தமது புத்தகத்தில்  ஹிக்ஸ் போசனின் கண்டு பிடிப்பைக் ”கடவுளின் அணு”(god’s particle) என்று பெயரிட்டு போசனைக் கௌரவிப்பது மட்டுமல்லாமல் கடவுளையும் ஆராதித்துள்ளார்.


இல்லையென்றால் அது இல்லையென்றாலும், அவன் ,அவள்,அது உண்டென்றால் அது உண்டுதான் என்றே நினைக்கத் தோன்றுகிறது

......பார்த்தசாரதி  

 டிஸ்கி:உண்டென்று ஏற்றுக் கொண்டால்தானே போற்றுதலும்,தூற்றுதலும்! 

இல்லையென்று சொன்னாலும்,இருந்தா நல்லாருக்கும் என்று சொன்னாலும்,போற்றுதலும் இல்லை தூற்றுதலும் இல்லை அல்லவா? 

ஞாயிறு, நவம்பர் 09, 2014

சண்டே-ஃபன் டே!

சார்பியல் கோட்பாடு என்பதை எப்படி எளிதாக விளக்குவது?

ஐன்ஸ்டீன் விளக்குகிறார்.........

நீங்கள் ஒரு சூடான அடுப்பின் மீது ஒரு விநாடியே கை வைத்தாலும் அது ஒரு மணி நேரம்போல் தோன்றும்.

ஆனால் நீங்கள் ஒரு அழகான பெண்ணுடன் பொழுது போக்கும்போது.ஒரு மணி நேரம் என்பது ஒரு விநாடியாகத்தோன்றும்.

இதுதான் சார்பியல்! 

எப்புடி?!

வெள்ளி, மார்ச் 29, 2013

விஷக்கிருமிகள் பரவி விட்டன!



”நாட்டில் விஷக் கிருமிகள் பரவி விட்டன”(virus has spread)

இது முன்னொரு காலத்தில் மிகப் பிரபலமான வாக்கியம்.

ஆண்டு 1967.

அது வரை தமிழ்நாட்டை ஆண்டு வந்தது காங்கிரஸ் கட்சி,இப்போதுள்ள காங்கிரஸ் அல்ல.முதல் காங்கிரஸ்

நல்லாட்சியைத் தூக்கி எறிந்து விட்டு,நாப்பறை கொட்டியவர்களை நாடாள அழைத்து விட்டார்கள்  மக்கள் .

பெருந்தலைவர் காமராசரே தேர்தலில் தோற்றுப்போனார்.

அப்போது முதலமைச்சராக இருந்த திரு பக்தவத்சலம் அவர்கள் தோல்வி பற்றித் தெரிவித்த கருத்து இது.

இப்போது இந்த வாக்கியத்தைச் சொல்ல வேண்டிய நிலைமை எற்படுமோ என ஓர் அச்சம் !

உலகில்  புதிய விஷக்கிருமிகள் ,அதி நுண்ணுயிர்கள்(virus) பரவி விட்டன” என்று சொல்ல வேண்டிய நிலை ஏற்படுமோ?

விஷக் கிருமி பரவி விட்டால் அது விளைவிக்கும் நாசம் அதிகம் .

அரிதான ஆனால் மிகக்கொடிய ”குவனாரிடோ” என்ற விஷக்கிருமிகள் அடங்கிய ஒரு குப்பி,,அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் மிகப் பாதுகாப்பான ஆய்வுக் கூடத்திலிருந்து காணாமல் போயிருக்கிறது .

வெனிசுலாவில் பிறந்த இந்த நுண்ணியிர் எலி,பெருச்சாளிகளின் மூலம் பரவக்கூடியது. மனிதர்களின் உள்ளுறுப்புகளில் குருதி வடியச் செய்யும். முப்பது விழுக்காடு மரணம் ஏற்படுத்தக்கூடியது.

யாராவது திட்டமிட்டு எடுத்துச் சென்றிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.பயங்கரவாதிகள் கையில் அது சிக்கியிருந்தால் உலகில் எத்தகைய அழிவை விளைவிக்கும் ஆயுதமாகும்! 

நினைக்கவே அச்சமாக இருக்கிறது.

விஞ்ஞானிகளிலேயே பலர் இந்த நுண்ணுயிர் பற்றி அறிய மாட்டார்களாம்,அத்தகைய அரிய
வகை.

என்ன நடக்கப் போகிறதோ!

இந்த ஆய்வுக்கூடத்தில் மேலும் பல நுண்ணுயிர்கள்எபோலா,ஆந்த்ராக்ஸ்,பிளேக்— இருக்கின்றனவாம்!

அவைகள் பாதுகாப்பாக இருக்கப் பிரார்த்திப்போம்!
......................................................

எத்தனையோ பறவைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

யானைப் பறவை தெரியுமா?

அழிந்து விட்ட உயிரினங்களில் ஒன்று.

உலகிலேயே மிகப் பெரிய பறவையாக இருந்தது.

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இதன் புதை படிவமாகிய ஒரு முட்டையை ஏலம் போடப் போகிறார்கள்!

இது கோழி முட்டையைப் போல் 100 மடங்கு பெரியதாம்.

ஏலத்தில் எதிர்பார்க்கப்படும் தொகை என்ன தெரியுமா?

20000—30000!

ரூபாய் அல்ல!

பவுண்ட் ஸ்டெர்லிங்!

இன்றைய நிலவரப்படி 16.52 இலட்சத்திலிருந்து,24.79 இலட்சம் வரை!

அம்மாடியோ!

.................................................................