தொடரும் தோழர்கள்

புதன், செப்டம்பர் 17, 2008

ஒரு பாடல்,ஒரு நினைவு

திரைப் படங்களிலெல்லாம் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க ஒரு பாடல் வரும்.அது போல ஒரு பாடலை கீழே தருகிறேன்.யாருக்காவது அது பற்றித் தெரியுமென்றால்,உங்கள் நினைவொன்றை இப்பாடல் தட்டியெழுப்பினால், தெரிவியுங்கள்.

"கன்னித் தமிழ் மொழியே!கலையுலகம் அதிர
முரசெழும் ஒலியே-(கன்னி---)
குறுமுனி அருள்தமிழ்க் குமரி என் தாயே
குறள் மறையால் உலகாள்பவள் நீயே!
கொடுமையாவும் நீங்க,சாந்த குணமும் யாவும் ஓங்க,வா,வா-(கன்னி--)
பண்ணியல் நாடகப் பரவசமருளே,
பலகலையிலுமுயர் நவரசப் பொருளே
பரத கதக்களி மணிப்புரியும் பாராளுமோர் வகை செய்யும்-

கன்னித் தமிழ் மொழியே!கன்னித் தமிழ் மொழியே!கன்னித் தமிழ் மொழியே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக