தொடரும் தோழர்கள்

திங்கள், செப்டம்பர் 29, 2008

காமம் இல்லாக் கதை-4

வழக்கத்தை விடச் சீக்கிரமாக வீடு திரும்பிய மனைவி,தன் கணவன் ஒரு அழகிய இளம்பெண்ணுடன் சல்லாபமாக இருப்பதைப் பார்த்தாள்.

"என்ன இது? உங்களுக்கு உண்மையாக இருக்கும் நல்ல மனைவியான எனக்குத் துரோகம் செய்கிறீர்களா?நீங்கள் எல்லாம் ஒரு மனுஷனா?இந்த நிமிஷமே நான் வெளியே போகிறேன்.விவாக ரத்து நோட்டிஸ் உங்களை வந்து சேரும்"

"லில்லி,லில்லி,நான் சொல்வதைக் கொஞ்சம் கேளேன்.உனக்கு எல்லாவற்றையும் விளக்குகிறேன்."

"நீங்கள் ஒரு ஏமாற்றுக்காரரென்பது புரிந்து விட்டது.இருந்தாலும்போகுமுன் என்னதான் புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறீர்கள் என்று பார்க்கிறேன்."

"தாங்க்ஸ் லில்லி.நான் சாலையில் போய்க் கொண்டிருந்தபோது,இந்தப் பெண் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தாள்.நல்ல உடையணியாமல், சோர்வாகக் காணப்பட்டாள்.பார்க்கப் பரிதாபமாக இருந்தது.அருகில் சென்று விசாரித்தேன்.இரண்டு நாட்களாகச் சாப்பிடவில்லை என்று சொன்னாள். வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன்,ஏதாவது உணவு கொடுக்கலாம் என்று.வீட்டுக்கு வந்து பார்த்தேன்.நேற்று நான் தயார் செய்து உனக்குப் பிடிக்காது வைத்துவிட்ட பிரியாணி இருந்தது.அதை அவளுக்குக் கொடுத்தேன்.ருசித்துச் சாப்பிட்டாள்.அதன் பின் அழுக்காக இருக்கிறாளே என்று 'குளிக்கிறாயா' என்று கேட்டேன். சரி என்று குளிக்கப் போனாள். அவளது உடைகள் கிழிந்திருப்பதைக் கண்டு,போன தீபாவளிக்கு நான் வாங்கிக் கொடுத்த,உனக்குப் பிடிக்காததால்,அணியாமலே இருந்த புடவையை கொடுத்தேன்.கடைசியாகப் புறப்படும் முன்,கதவருகே நின்று,கண்களில் கண்ணீர் ததும்பக் கேட்டாள்-

"ஸார்,உங்கள் மனைவி உபயோகிக்காத இன்னும் ஏதாவது உங்களிடம் இருக்கிறதா?"

"அதனால்தான் -----------------!!"

(இது எப்படிக் காமம் இல்லாக்கதை என்கிறீர்களா?.கடைசி வரியில் பதில்!!)

2 கருத்துகள்: