தொடரும் தோழர்கள்

குட்டிக்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குட்டிக்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஆகஸ்ட் 08, 2012

வாழ்க்கை வாழ்வதற்கே!


அது ஒரு சிறிய கடற்கரைக் கிராமம்.

அமைதி தவழும் இடம்.

அம் மக்களின் முக்கிய தொழிலே மீன் பிடிப்பதுதான்.ஆண்கள் கடலுக்குச் செல்வார்கள். தேவையான அளவு மீன் பிடிப்பார்கள்.தங்கள் உணவுக்கு வேண்டியதை வைத்துக்கொண்டு மீதியை விற்பார்கள்.அப்பணத்தில் தேவையான பொருட்கள் வாங்குவார்கள்.

வாழ்க்கையை மகிழ்ச்சியாகக்  கழித்து வந்தனர்.

ஒரு நாள் நகரத்திலிருந்து ஒருவர் அங்கு வந்தார்.

அங்கு கிடைக்கும் மீன்களின் தரம் கண்டு மகிழ்ந்தார்.

மீனவர்களிடம் கேட்டார்”மிக நல்ல மீன்கள் பெருமளவில் கிடைக்கிறதே! நீங்கள் என்ன செய்கிறீர்கள்?”

”எங்களுக்குத் தேவையான மீன்களைப் பிடிப்போம்.சமைப்போம்; சாப்பிடுவோம்.மனைவி மக்களுடன் இனிமையாகப் பொழுதைக் கழிப்போம்.  நண்பர்கள் கூடி அளவளாவுவோம்.நன்கு உறங்குவோம்.”

வந்தவர் கேட்டார்.”இங்கு அதிக அளவில் நல்ல நல்ல மீன்கள் இருக்கின்றன. இன்னும் அதிக நேரம் உழைத்து அதிக மீன்களைப் பிடிக்கலாமே?”

“பிடித்து?”மக்கள்

”உங்கள் நல்ல நேரம்.மேலாண்மைக் கல்வி பயின்ற நான் இங்கு வந்தது.நல்ல வழி நான் கூறுகிறேன்.
அதிக மீன்களை வெளிச் சந்தையில் நல்ல விலைக்கு விற்கலாம்.பணத்தைச் சேமிக்கலாம்.நல்ல எந்திரப் படகும்,கருவிகளும் வாங்கி இன்னும் அதிக மீன் பிடிக்கலாம்.இடைத் தரகர்கள் இன்றி மொத்த வியாபாரம் செய்து நீங்களே அதிக பொருள் ஈட்டலாம்”

“பிறகு?”

“பதப்படுத்தும் தொழிற்சாலை.மீன் எண்ணை தயாரிப்பு என்று தொழில் அபிவிருத்தி செய்து பெரிய பணக்காரர்களாக ஆகலாம்.”

“அதன்பின்?”

”பெரிய நகரத்தில் குடியேறி எல்லா வசதிகளுடனும் வசிக்கலாம்.மேலும் பொருள் ஈட்டலாம்”

“இதற்கெல்லாம் எத்தனை வருடம் ஆகும்?”

”இருபது முப்பது ஆண்டுகள் ஆகலாம்.’

“பிறகு?”

ஓய்வெடுக்க வேண்டியதுதான். சமுத்திரக்கரையில் ஒரு அழகிய இடத்தை வாங்கி,பெரிய மாளிகை கட்டி, உண்டு,உறங்கி,மனைவி மக்களுடன் இனிமையாகப் பொழுதைக் கழிக்கலாம்”

“அதைத்தானே நாங்கள் இப்போதே செய்து கொண்டிருக்கிறோம்!” என்றனர் அவர்கள்.

ஆம்! வாழ்க்கையில் எதை நோக்கிப்போக நினைக்கிறீர்களோ,அது இப்போதே உங்களிடம் இருக்கலாம்.

பணம் மட்டுமே வாழ்க்கையாகாது.

வாழ்க்கை உப்பு சப்பற்றுப் போகுமுன் உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விடுங்கள்!

(ணைய வரவு)

வியாழன், மார்ச் 29, 2012

ஓடிப்போன மகன்!

அன்புள்ள அப்பா,

இக்கடிதம் உங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும்.என்ன செய்வது ?வேறு வழியின்றி நான் இந்த முடிவுக்கு வந்தேன்.இதை நீங்கள் படிக்கும்போது நான் என் காதலியுடன் ஊரை விட்டுச் சென்றிருப்பேன். அவள் அழகானவள்.நல்ல குணங்களின் இருப்பிடம். எல்லோருக்கும் அவளைப் பிடிக்கும்.ஆனால் அவள் நம் சாதி அல்ல.


எனவே உங்களிடமும் அம்மாவிடமும் பேசினால் வீண் வாக்குவாதம்தான் வளரும் ;ஒரு முடிவு கிடைக்காது .நீங்கள் ஒருபோதும் இந்தத் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்பதால் இந்த முடிவை எடுத்தேன். எங்களை வாழ்த்தா விட்டாலும் ,தயவு செய்து வசை படாதீர்கள்.நாங்கள் நிச்சயம் சிறப்பாக வாழ்வோம்.எனக்கு வயது 21.அவளை வைத்துக் காப்பாறி  நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும்.என்றாவது உங்களை உங்கள் பேரக் குழந்தைகளுடன் வந்து பார்க்கிறோம்.


அப்பா,இது வரை நான் எழுதியது எல்லாம் பொய்!நான் என் நண்பன் குமார் வீட்டில்தான் இருக்கிறேன்.தேர்வு முடிவுகள் வந்து விட்டன.வாழ்க்கையில் தேர்வில் தோற்பதை விட மோசமான,அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயங்கள் இருக்கின்றன என்பதை உங்களுக்குச் உணர்த்தவேஅவ்வாறு எழுதினேன். தேர்வு இன்னொரு முறை கூட எழுதிக்கொள்ளலாம்.


நீங்கள் இருவரும் இதைப் புரிந்து கொண்டு,என் மீது கோபம் இல்லை என்ற உறுதி அளித்தவுடன் நான் திரும்பி வருகிறேன்.

உங்கள் அன்பு மகன்

(ஒரு மின்னஞ்சல் அடிப்படையில் எழுதியது)

வெள்ளி, டிசம்பர் 23, 2011

யார் புத்திசாலி!


ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார்.அவர் ஒரு பொருளாதார மேதையா 

யிருந்தார்.பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச்  சீர் படுத்த   

அவர் ஆலோசனையை நாடினர்.


ஒருநாள் ஊர்த்தலைவர்  அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் 

சொன்னார்”ஐயா! அறிஞரே!நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே 

பாராட்டுகிறது.ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக 

இருக்கிறானே!தங்கம்,வெள்ளி இவற்றுள்  அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று 

அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான்.வெட்கக்கேடு!”


அறிஞர் மிக வருத்தமடைந்தார்.பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், 

வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”


பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார்”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று 

சொன்னாய்?”
 
பையன் சொன்னான்”தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் 

தங்க நாணயமும்,மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டுஎன்னை

அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு 

வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.


”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி 

இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் 

போய் விடுவேன்.இது ஓராண்டாக நடக்கிறது.தினம் எனக்கு ஒரு வெள்ளி 

நாணயம் கிடைக்கிறது.நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் 

அன்றோடு இந்த  விளையாட்டு நின்று விடும்.எனக்கு நாணயம் கிடைப்பதும் 

நின்று போகும்.எனவேதான்…”


அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக  வேடம் அணிகிறோம்,மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு.ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!