தொடரும் தோழர்கள்

அறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜனவரி 06, 2012

வெற்றி! வெற்றி! வெற்றி நமதே!!

ஒரு அறிஞர் இருந்தார்.அவர் ஒரு நாள் நடந்து சென்று கொண்டி ருந்த  போது  அவர் எதிரே வந்த முரடன் ஒருவன் அவரைப் பார்த்து”நீ ஒரு முட்டாள்;போலி;உனக்கு எதுவும் தெரியாது.நீ யார் எல்லோருக்கும்  உபதேசம் செய்வதற்கு?” என்றெல்லாம் கடும் வார்த்தைகளால்  சாடினான்.

அனைத்தையும் புன்முறுவலுடன் கேட்டுக்கொண்ட அறிஞர்”நீ ஒருவருக்கு ஒரு பரிசு கொடுக்கிறாய்.ஆனால் அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் அது யாருக்குச் சொந்தம்.”எனக்கேட்டார்.

எதிர்பாராத கேள்வியால் அதிர்ச்சியடைந்த அவன் “நான் வாங்கிய பரிசுஅது. எனக்குத்தான் சொந்தம்”என்றான்.

“அது போல்தான் உன் கோபமும்.உன் கோபத்தினால் நான் காயப்பட வில்லையெனில் அந்தக்கோபம் உனக்கே திரும்பி வருகிறது.நீ காயப்படுகிறாய்.மகிழ்ச்சியற்றவனாகிறாய்.மற்றவரை நீ வெறுப்பதால் உனக்கு மகிழ்ச்சியில்லாமல் போகிறது.ஆனால் மற்றவர் மீது நீ அன்பு செலுத்தும்போது,அனைவரும்,நீ உட்பட, மகிழ்கிறார்கள்.” என்றார் அறிஞர்.

அவன் மனம் நெகிழ்ந்தான்.”எனக்கு அன்பு வழியைக் காட்டுங்கள்.  இன்று முதல் நான் உங்கள் சீடன்” என்றான்.

அறிஞர் சொன்னார்”விரும்புபவர்களுக்கு வழிகாட்டுவது என் கடமை.” என்று சொல்லி உபதேசம் செய்தார்----------

”நீ செய்வது சரியென்றால்,கோபப்பட அவசியமில்லை; தவறென்றால்  உனக்குக்  கோபப்பட  உரிமையில்லை”

உற்றாரிடம்  பொறுமை என்பது அன்பு.
மற்றாரிடம் பொறுமை என்பது   மரியாதை
தன்னிடமே பொறுமை என்பது  பற்றுறுதி
இறைவனிடம் பொறுமை என்பது விசுவாசம்.


கடந்தகாலத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்காதே;அது கண்ணீரைத்தரும்.
எதிர்காலம் பற்றி அதிகம் சிந்திக்காதே .அது பயம் தரும்.
இந்த விநாடியை மகிழ்ச்சியுடன் வாழுங்கள்:அது உற்சாகம் தரும்.


வாழ்க்கையில் வரும் ஒவ்வோரு சோதனையும் நம்மை செப்பனிடும் அல்லது சிதைத்து விடும்.
ஒவ்வொரு பிரச்சினையும்,நம்மை உருவாக்கும் அல்லது உடைக்கும்.
நாம் வெல்கிறோமா அல்லது வெல்லப் படுகிறோமா என்பது நம் கையில்தான் இருக்கிறது. 

டிஸ்கி:இதற்கு என்ன இப்படி ஒரு தலைப்பு என்றா கேட்கிறீர்கள். சும்மா ஒரு செண்டிமெண்ட்தான் --சினிமாக்காரங்க மாதிரி!!

திங்கள், செப்டம்பர் 05, 2011

கணவனின் தோழன்!

ஒரு நாள் ஒரு மனிதன் உணவு விடுதியில் குழம்பி யருந்திவிட்டு வெளியே வந்தான்.ஒரு வேறுபாடான சவ ஊர்வலம் அவன் கவனத்தைக் கவர்ந்தது.

ஒரு சவப்பெட்டியைப் பின் தொடர்ந்து ,50 அடி இடை வெளியில் மற்றோர் சவப் பெட்டியும்,அதன்பின் நாயுடன் செல்லும் ஒரு மனிதனையும் கண்டான்.அந்த மனிதனுக்குப் பின் சுமார் 200 ஆண்கள் ஒருவர் பின் ஒருவராகச் சென்று கொண்டிருந்தனர்.

அவனது ஆர்வத்தை அவனால் அடக்க இயலவில்லை.

நாயுடன் செல்லும் மனிதனை அணுகிக் கேட்டான்.”உங்கள் இழப்புக்கு வருந்துகிறேன். ஆனால் இது போல் ஒரு ஊர்வலத்தை நான் பார்த்தே இல்லை. இறந்தது யார்?”

மற்றவன் சொன்னான்” முதல் பெட்டியில் என் மனைவி”

“என்ன நடந்தது.?” எனக் கேட்டான்.

அவன் சொன்னான்” என் நாய் அவளைத் தாக்கிக் கடித்துக் கொன்று விட்டது”

இவன் அதிர்ச்சியடைந்தான்.கேட்டான்”அந்த இரண்டாவது பெட்டியில்….?”

“என் மாமியார்;தன் மகளைக் காப்பாற்ற முயன்றார். அவரையும் என் நாய் கடித்துக் கொன்று விட்டது”

இவன் சிறிது நேரம் யோசித்தான்.பின் கேட்டான் ”உங்கள் நாயை எனக்கு ஒரு நாள் கடனாகத் தர இயலுமா?”

அவன் சொன்னான் ”வரிசையில் வா!!”