உணர்ச்சிகள் பலவும்
ஒன்றாய் வாழ்ந்த ஒரு தீவு!
வருத்தம் ,கோபம், வெறுப்பு
வீறு கொண்டெழும் போது
வந்தணைத்து ஆறச் செய்யும் அன்பு!
வசந்தம் நிலவிய அத்தீவுதனில்
வந்ததே ஒரு நாள்
பெரும் புயல்!
கடல்கோள் ஒன்று வந்து
காணாது போகும் நிலை
தீவுக்கு!
உணர்வுகள் எல்லாம் பயந்தன
உரைத்தது அன்பு உன்னத வழி
ஓடம் ஒன்று செய்து
ஓடிப்போகலாம்!
ஓடமும்
தயார்,ஓடிச்சென்று ஏறின உணர்வுகள்
ஒன்று மட்டும்
ஏறவில்லை!
திமிராய்
அமர்ந்திருந்தது தீவிலே
ஆணவம் என்ற அவ்வுணர்வு
அன்பு சென்று
அழைத்தது
அசையவில்லை ஆணவம்!
அனைத்தும் தப்பிச்செல்ல
அவை சொல்லியும் கேட்காமல்
ஆணவத்துடன் சேர்ந்து அழிந்தது அன்பும்!
ஆம் அன்பு வாழவேண்டுமெனில்
ஆணவத்தைக் கொல்ல வேண்டும்!
உறவுகளில் புரிதல் வேண்டும்
உன்னத நிலைக்கு விட்டுக் கொடுத்தல் வேண்டும்.
உணர்ந்து நடந்தால் அன்பு வெல்லும்
ஆணவம் தோற்கும்,
அன்பே சிவம்!
உறவுகளில் புரிதல் வேண்டும்
உன்னத நிலைக்கு விட்டுக் கொடுத்தல் வேண்டும்.
உணர்ந்து நடந்தால் அன்பு வெல்லும்
ஆணவம் தோற்கும்,
அன்பே சிவம்!