தொடரும் தோழர்கள்

வெள்ளி, பிப்ரவரி 25, 2011

சாந்தோம் சந்திப்புகள்--கவிதை!

காத்திருந்து காத்திருந்து உள்ளம் வாடுதடி-வழி
பார்த்திருந்து பார்த்திருந்து கன்களும் நோகுதடி.
எத்தனை நேரம்தான் நீர் அலைகளை எண்ணுவது?
எத்தனை தடவைதான் கடல் மணலைக் கிளறுவது?
சுண்டல்காரச் சிறுவனும் சுற்றிச் சுற்றி வருகின்றான்;
கிண்டலாய்க் கேட்பானோ”அக்கா வரல்லையா?”
நேற்றும் நீ வரவில்லை இன்றும் வரவில்லை இன்னும்;
தேற்றுவாரின்றித் தேம்பியழுகிறதென் உள்ளம்.
அம்மா,தங்கையு டன் அனுமார் கோவில் போனாயோ?
(தண்ணித்துறை ஆஞ்சநேயர் மிகப் பிரசித்தம்-என் விளக்கம்)
சிநேகிதிகள் பலர் சூழ சினிமாவுக்குப் போனாயோ?
மாமிகள் பட்டாளத்துடன் மாம்பலம் போனாயோ ?
என்ன செய்தாயோ,என்னை மறந்து போனாய்.
உனக்காகத் தவிக்கும் உள்ளத்தை மறந்து போனாய்.
அடியே!
நாளையேனும் வந்தென்னைப்பார்-இல்லையேல் எனக்கு
நாளைகளே இல்லாமல் போய்விடும் போ!

29 கருத்துகள்:

  1. எனக்கு ஒரு பழமொழிதான் ஞாபகம் வருது. அது என்னன்னு நீங்க தா சொல்லணும்.
    சரி ஒரு க்ளு, முதலில் வரும் எழுத்து ' கி ' முடிவில் வரும் எழுது 'வை'
    joot............

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப வருத்தப்பட வெச்சிட்டாங்களோ.. கவலைப்படாதீங்க.. வீடு பூந்து தூக்கிடுவோமா?

    பதிலளிநீக்கு
  3. கக்கு - மாணிக்கம் கூறியது...

    //எனக்கு ஒரு பழமொழிதான் ஞாபகம் வருது. அது என்னன்னு நீங்க தா சொல்லணும்.
    சரி ஒரு க்ளு, முதலில் வரும் எழுத்து ' கி ' முடிவில் வரும் எழுது 'வை'
    joot............//
    எனக்குப் பழமொழியெல்லாம் அதிகம் தெரியாது!பழைய நினைவுகளுக்கு வயதேது! ஏதோ கிண்டல் செய்கிறீர்கள் என்று தெரிகிறது! எனக்கு மட்டும் ரகசியமாகச் சொல்லுங்கள்!
    இந்தப் பதிவே உங்களுக்குத்தான் சமர்ப்பணம்!
    நன்றி கக்கு-மானிக்கம்!

    பதிலளிநீக்கு
  4. வேடந்தாங்கல் - கருன் கூறியது...

    nice.,
    நன்றி கருன்!

    பதிலளிநீக்கு
  5. VELU.G கூறியது...

    //ஊட்ல சொல்லிட்டீங்களா?//
    இதெல்லாம் எந்தக்காலத்து சம்பவம்!இப்ப என்ன கவலை?
    நன்றி வேலு!

    பதிலளிநீக்கு
  6. பாட்டு ரசிகன் கூறியது...

    //கவிதைக்கு வாழ்த்துக்கள்...//
    நன்றி பாட்டு ரசிகன்!

    பதிலளிநீக்கு
  7. கவிதை காதலன் கூறியது...

    //ரொம்ப வருத்தப்பட வெச்சிட்டாங்களோ.. கவலைப்படாதீங்க.. வீடு பூந்து தூக்கிடுவோமா?//
    ஹா ஹா!இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னா?
    நன்றி கவிதை காதலன்!

    பதிலளிநீக்கு
  8. நாளையேனும் வந்தென்னைப்பார்-இல்லையேல் எனக்கு
    நாளைகளே இல்லாமல் போய்விடும் போ!


    ....எதார்த்தம்! அருமையாக, சிறிது காமெடி கலந்து நல்லா எழுதி இருக்கீங்க... :-)

    பதிலளிநீக்கு
  9. எனக்கு ஒரு பழமொழிதான் ஞாபகம் வருது. அது என்னன்னு நீங்க தா சொல்லணும்.
    சரி ஒரு க்ளு, முதலில் வரும் எழுத்து ' கி ' முடிவில் வரும் எழுது 'வை'//

    அண்ணே சொல்லிருங்க சஸ்பென்ஸ் தாங்க முடியல.

    பதிலளிநீக்கு
  10. Chitra சொன்னது…
    //....எதார்த்தம்! அருமையாக, சிறிது காமெடி கலந்து நல்லா எழுதி இருக்கீங்க... :-)//
    மிக்க நன்றி சித்ரா!

    பதிலளிநீக்கு
  11. கே. ஆர்.விஜயன் கூறியது...

    //அண்ணே சொல்லிருங்க சஸ்பென்ஸ் தாங்க முடியல.//
    இனிய விஜயன் கேட்கிறாரே, சொல்லி விடுங்கள் மாணிக்கம்! மாடரேஷன் இல் பார்த்துக் கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
  12. Philosophy Prabhakaran கூறியது...

    //சூப்பர் சாரே...//
    நன்றி பிரபாகரன்!

    பதிலளிநீக்கு
  13. FOOD கூறியது...

    // நல்லா ரசனை! ரசித்தேன்.//
    நன்றி FOOD அவர்களே!

    பதிலளிநீக்கு
  14. ரஹீம் கஸாலி கூறியது...

    //நல்லா யூத்புல்லா யோசிச்சிருக்கீங்க//
    சிந்தனை எப்பவுமே யூத்ஃபுல்லா இருந்தால்தான் ஆரோக்கியமாக இருக்கலாம்!
    நன்றி கஸாலி!

    பதிலளிநீக்கு
  15. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //அருமை அருமை சென்னை பாஸ்....//
    நன்றி நன்றி நாஞ்சில் மனோ!

    பதிலளிநீக்கு
  16. கவிதையை படித்த உடனே கருத்தை பதிவு செய்ய நினைத்தேன்.அதற்கு முன்பு கக்கு-மாணிக்கம் அவர்களின் விடுகதைப்புதிர் தெரிந்து எழுதலாம் என நினைத்து தள்ளிப்போட்டேன். ஆனால் விடுகதை புதிரின் விடை, தெரியாததால் திரு கக்கு-மாணிக்கம் அவர்களே அதை சொல்லட்டும் என நினைத்து சொல்கிறேன்.நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. வே.நடனசபாபதி கூறியது...

    //நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.//
    நன்றி சபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  18. அன்பின் பித்தன் - க.மா கூறுவது இதுவா ... கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும் - கிழவனைத் தூக்கி மனையில வை ..... - மாட்ரேஷன்லே க்ட பண்ணீனிங்கன்னா அவ்வVஅல்வு தான் ..... ஹா ஹா ஹா ஹா - சாந்தோ பீச்சின் கரையோரத்தில் சென்னை பித்தனின் அரசாங்கம் ...... நடத்துக காதல் ராஜ்ஜ்யம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா ( கவிதை நன்று )

    பதிலளிநீக்கு
  19. அன்பு சீனா.அதுவேதான் .நானும் அப்போதே தெரிந்து கொண்டு விட்டேன்!ஒரு இளைஞனைப் பார்த்துக் கிழவன் என்று சொல்கிறார் கக்கு!என்ன கொழுப்பு?!

    பதிலளிநீக்கு
  20. அதானே - கககு மாணிக்கம் - கொல்ஸ்ட்ரால் அதிகமாமே ! பாத்துக்கங்க - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு