“ரவி!வாழ்க்கையே ரொம்பப் போரடிக்கிறதுடா.ஒரு திரில்லே
இல்லை.தினம் காலேஜ்,ரூம்,டீன் இப்படி எதுவுமே சுவாரஸ்யமில்லை.” என்றான் ரகு.
“ நாம் மருத்துவ மாணவர்கள்.படிக்கும்போது அப்படித்தான்
இருக்கும்.படிப்பு முடிந்து டாக்டர் ஆகிச் சம்பாதிக்கும்போது திரில் தானா வரும்.” இது
ரவி
“இருந்தாலும் ஏதாவது பண்ணணும்டா” என்று ரகு சொல்லும்போதே
அந்த நாய் அவன் அருகில் வந்து வாலை ஆட்டியபடி நின்றது.
அது ஒரு தெரு நாய்.தெருமுனை டீக்கடையில் டீ குடிக்கும்போது
அதற்கு பிஸ்கட் வாங்கிப்போடுவான் ரகு.
ரகுவின் முகம் பிரகாசமானது.”ஐடியா!” என்று உரக்கச்
சொன்னான்.நாயைக் கையில் தூக்கினான்.ரவியையும் உடன் வரச் சொல்லி மாடியேறினான். போகும்போதே
தன் திட்டத்தையும் கூறினான்அவன் மொட்டை மாடியிலிருந்து நாயைக் கீழே போடும்போது ரவி
அதை வீடியோ எடுக்க வேண்டும்.
மொட்டை மாடியை அடைந்தனர்.சுற்றுப்புறச்சுவரின் அருகில்
சென்று நாயைத் தூக்கியவாறு நின்றான் ரகு”டேய்,சரியான கோணத்தைப் பார்த்துக்கோ.நான் நாயைக்
கீழே போடுவதை அழகாகப் படம் பிடிக்க வேண்டும்”
ரவி காமிராவை சரியான கோணத்தில் வைக்க முயற்சி செய்தான்”முழுவதும் வரவில்லையே” என்றான்.
ரகு இரு என்று சொல்லி யோசித்தான்.பின் சொன்னான்”நான்
சுவற்றின் மீது ஏறி நின்று நாயை வீசுகிறேன் .பிரமாதமாக இருக்கும்.பார்ப்பவர்களும் ரசிப்பாங்க.நான்
சுவர் மீது ஏறிய பின் நாயைக் கொடு”
நாய் கை மாறியது
ரகு சுவற்றின் மீதேறி நின்று கொண்டான்
“கொடு”
ரவி நாயைக் கொடுத்தான்.அந்தநேரத்தில் ஆபத்தை உணர்ந்த
நாய், ரகு பிடிக்கும்போது துள்ளியது.அதில் நில குலைந்த ரகு தலை குப்புறக் கீழே விழுந்தான்.
தப்பி ஓடிக் கீழே இறங்கிய நாய் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த ரகுவைச் சுற்றிச்
சுற்றி வந்துச் சோகமாக ஊளையிட்டது
ர்
“