தொடரும் தோழர்கள்

சனி, ஜூலை 09, 2016

பத்ரா



“ரவி!வாழ்க்கையே ரொம்பப் போரடிக்கிறதுடா.ஒரு திரில்லே இல்லை.தினம் காலேஜ்,ரூம்,டீன் இப்படி எதுவுமே சுவாரஸ்யமில்லை.” என்றான் ரகு.

“ நாம் மருத்துவ மாணவர்கள்.படிக்கும்போது அப்படித்தான் இருக்கும்.படிப்பு முடிந்து டாக்டர் ஆகிச் சம்பாதிக்கும்போது திரில் தானா வரும்.” இது ரவி 

“இருந்தாலும் ஏதாவது பண்ணணும்டா” என்று ரகு சொல்லும்போதே அந்த நாய் அவன் அருகில் வந்து வாலை ஆட்டியபடி நின்றது.

அது ஒரு தெரு நாய்.தெருமுனை டீக்கடையில் டீ குடிக்கும்போது அதற்கு பிஸ்கட் வாங்கிப்போடுவான் ரகு.

ரகுவின் முகம் பிரகாசமானது.”ஐடியா!” என்று உரக்கச் சொன்னான்.நாயைக் கையில் தூக்கினான்.ரவியையும் உடன் வரச் சொல்லி மாடியேறினான். போகும்போதே தன் திட்டத்தையும் கூறினான்அவன் மொட்டை மாடியிலிருந்து நாயைக் கீழே போடும்போது ரவி அதை வீடியோ எடுக்க வேண்டும்.

மொட்டை மாடியை அடைந்தனர்.சுற்றுப்புறச்சுவரின் அருகில் சென்று நாயைத் தூக்கியவாறு நின்றான் ரகு”டேய்,சரியான கோணத்தைப் பார்த்துக்கோ.நான் நாயைக் கீழே போடுவதை அழகாகப் படம் பிடிக்க வேண்டும்”

ரவி காமிராவை சரியான கோணத்தில் வைக்க முயற்சி செய்தான்”முழுவதும்  வரவில்லையே” என்றான்.

ரகு இரு என்று சொல்லி யோசித்தான்.பின் சொன்னான்”நான் சுவற்றின் மீது ஏறி நின்று நாயை வீசுகிறேன் .பிரமாதமாக இருக்கும்.பார்ப்பவர்களும் ரசிப்பாங்க.நான் சுவர் மீது ஏறிய பின் நாயைக் கொடு”

நாய் கை மாறியது

ரகு சுவற்றின் மீதேறி நின்று  கொண்டான்

“கொடு”

ரவி நாயைக் கொடுத்தான்.அந்தநேரத்தில் ஆபத்தை உணர்ந்த நாய், ரகு பிடிக்கும்போது துள்ளியது.அதில் நில குலைந்த ரகு தலை குப்புறக் கீழே விழுந்தான்.

தப்பி ஓடிக் கீழே இறங்கிய நாய்  ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த ரகுவைச் சுற்றிச் சுற்றி வந்துச் சோகமாக ஊளையிட்டது














ர்

செவ்வாய், மார்ச் 01, 2016

கற்பூரம் நாறுமோ? இன்னும் ஒரு முன்னோட்டம்!



செல்வி!

என்னம்மா?

பக்கத்து வீட்டுல அந்தம்மா,அய்யா எல்லாம் வெளியூர் போயிருக்காங்க.அந்தத் தம்பி சீனு தனியா இருக்கு;அவனுக்குக் காலையில டிபன்,காபி நான் குடுக்கறேன்னு அந்தம்மா கிட்ட சொல்லியிருக்கேன்.போய் அவன்கிட்ட சொல்லிட்டு வா.

கதவு திறந்துதான் இருந்தது.மணி அடிக்கலாமா என யோசித்தாள்.அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்து உள்ளே சென்றாள்.கூடத்தில் யாருமில்லை.

”சீனு” கூப்பிட்டாள்

உள்ளிருந்து வெளியே வந்தான் சீனு

அப்போதுதான் உடற்பயிற்சியை முடித்திருந்தான் போலும்.பொங்கி வந்திருந்த வியர்வையைத் துடைத்தவாறு வந்தான்.

அவனுக்கு முன் அந்த வியர்வையின் மணம் அவள் நாசியைத் தாக்கியது

ஹப்பா!அவளுக்கு மிகவும் பிடித்த மணம்.

அவள் அப்பாவிடமும் இதே மணம்தான் வீசும்.

அவளுக்கு மிகவும் பிடிக்கும்

ஆனால் அவள் அம்மாவுக்குப் பிடிக்காது

எந்த சோப்புப் போட்டுக் குளிச்சாலும் இந்தக் கத்தாழை நாத்தம் உங்களை விட்டுப் போகாது என்று சலித்துக் கொள்வாள்

இப்போது சீனுவிடம் அதே மணம்

இத்தனை நாள் பார்க்காத ஒரு புதிய கோணத்தில் சீனுவைப் பார்த்தாள்

அவளுக்கு அவள் அப்பாவின் சாயல்.அப்பாவின் மேனரிசம்,அப்பாவின்நடை உடை உள்ள எல்லாரையும் பிடிக்கும் 

இப்போது சீனு.

அவள் தோழி சுமதி கூட ஒரு  சொல்லியிருக்கிறாள்,அவளுக்கு எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் இருப்பதாக!

இருந்து விட்டுப் போகட்டும்

அது அவளுக்குப் பிடித்திருக்கிறது

டிஸ்கி:இந்நாவலை எழுதி முடிக்க ஆண்டொன்று கூட ஆகலாம் எனத் தோன்றுகிறது.
ஹேவலாக் எல்லிஸின்  ”சைக்காலஜி ஆஃப் செக்ஸ்” மீண்டும் படிக்க வேண்டும். சிக்மண்ட் ஃப்ராயிடின் சில படைப்புகள் பார்க்க வேண்டும். அநேகமாக “பப்பாளி மர உச்சியிலாடும் பச்சைத் தேவாங்கு “ வெளி வரும்போதுதான் இதுவும் வெளிி வருமோ!

திங்கள், பிப்ரவரி 29, 2016

ஒரு நாவல்



என்னய்யா மோந்து பாக்கறே?

நீ என்ன சாதின்னு கண்டுபிடிக்கத்தான்.

அடச்சீ!மோந்து பாத்து சாதியைச் சொல்வியோ?சொல்லு!நான் என்ன சாதின்னு.

நீ நினைக்கிசாதி இல்ல இது.

பின்ன?

பெண்களை பத்மினி,சித்தினி,சங்கினி,அத்தினின்னு நாலு சாதியாப் பிரிச்சிருக்காங்க.
ஒவ்வொரு சாதிப் பெண்ணு கிட்டயும் ஒரு வாசனை.;நாற்றம்!


ஓகோ!நான் என்ன சாதிய்யா?

நிச்சயமா முதல் மூணு இல்ல!
.....................    

முதல் முத்தம்     
 
இதழ் தேடிக் குனிந்தான் 

அய்யோ!என்ன நாற்றம்?பல் தேய்க்க மாட்டாளா?

விலகினான்

அவள் ஏமாற்றத்துடன் கேட்டாள்,ஆங்கிலத்தில்தான்”என்ன ஆச்சு!”

ஒன்றுமில்லை.இன்று வேண்டாம்!       
....................       


இது வெளி வர இருக்கும் ஒரு நாவலின் முன்னோட்டம்!

நாவலின் தற்காலிகத் தலைப்பு”கற்பூரம் நாறுமோ?”

மேலும் அதிகத் தகவல்கள் ....தொடரும்!

................

என்ன ஆயிற்று உனக்கு?

இரவு சரியான உறக்கம் இல்லை.சரி

அதன் காரணமாக உடற்சோர்வு ஏற்படவே செய்யும்

அது மனச் சோர்வுக்கு வழி வகுக்கலாமா?

நம் கவலையால் எதுவும் மாறப் போவதில்லை.

இணையம் மனச்சோர்வுக்கு ஒரு மருந்து.

படைக்க இயலாவிடினும்  படிக்கலாம் அல்லவா?

அதையாவது செய். 

கருத்துச் சொல்.பாராட்டு.

செய்வாய் என நம்பு!


புதன், பிப்ரவரி 03, 2016

இறுதிச்சுற்று-ஒரு பார்வை!



ஒரு சராசரித் தமிழ்ப் பட இயக்குனரும்,தயாரிப்பாளரும் உரையாடுகின்றனர்

என்ன டைரக்டர் சார்,”இறுதிச்சுற்றுபார்த்தீங்களா?”

என் உதவிப் பசங்க பார்த்துட்டு வந்து புகழ்ந்தாங்களேன்னு போனேன்.தியேட்டர்ல கூட்டமே இல்லை!வசூலே இல்லை போல

படம் எப்படி இருந்தது

ஏதோ இருக்கு!என்ன சார் இது,ஒரு காமெடி இல்ல,லவ்  டூயட் இல்ல,கவர்ச்சி இல்ல. படம் எப்படி ஓடும்?

இந்தக்கதையில அதுக்கெல்லாம் இடம் இல்லையே சார்

ஏன் இல்ல?ஒரு நல்ல வாய்ப்பு கதையிலயே இருக்கு.மாதவன் மனைவி இன்னொருத் தனோட ஓடிப் போயிட்டான்னு ஒரு வசனத்தோட முடிச்சுடறாங்க.அதை நல்லா பெரிசாக்கி இருக்கலாமே!

எப்படி

மாதவன் மனைவி வேடத்தில ஒரு கவர்ச்சி நடிகையைப் போடணும்.அவங்க முதல்ல ஒரு நீச்சல் குளத்துல சந்திக்கணும்.அவ நீந்தும்போது ஒரு பாட்டு!ரெண்டு பேரும் நீச்சல் உடையில!லவ் மலருது.அப்புறம் ஆஸ்திரேலியாவில ஒரு டூயட்.அப்புறம் கல்யாணம்.
புது குத்துச் சண்டை வீரன் அறிமுகம்.அவன் பக்கம் அவ சாயிறா.மாதவன் தோத்ததும் அவ புதியவனோட ஓடிப் போயிடறா. தாடியோட மாதவன்.இந்த இடத்துல இடை வேளை விடறோம்.

இதில குத்துச் சண்டை ,பயிற்சி அதெல்லாம் வரல்லையே

காட்டாம விடுவமா?இப்போ சொன்னது பூரா ஃப்ளேஷ்பேக்தானே!நடுவில் நடுவில அதையும் காட்டுவோம்.நாயகியோட அக்காவுக்கும் கோச் மேல லவ் வருது அதனால் வரும் சிக்கல், அதையும் சேர்த்துப்போம்

சரி,காமெடி?

பயிற்சிக்கு வரும் இளைஞர்களில் சந்தானம் ஒருவர்!இது போதாதா?

சண்டைக் காட்சி?

மாதவனை அது யாரவரு,ஜாகிர் ஹுசேனா அவரு ஆள் வச்சு அடிக்க முயற்சி செய்யறார், அப்பொ அவங்களை மாதவன் போட்டுப் பொரட்டியெடுக்கறார்!


கடைசியில மாதவனுக்கும் ரித்திகாவுக்கும் கல்யாணம் ஆகி குழந்தை பிறக்க அது கையில கிளவுஸோட பிறக்கிற மாதிரி சிம்பாலிக்கா காட்டித் தொடரும்னு கார்டு போடுவோம்!

இதெல்லா செஞ்சா வசூல் அள்ளிடுமே!


படம் பற்றி பல விமர்சனங்கள் வந்து விட்டன.எனவே நான் புதிதாக என்ன சொல்ல இருக்கிறது?

எனக்கு மிகவும் பிடித்திருந்தது   

டிஸ்கி:இந்தாளுக்கு இதே வேலை ! படப் பெயரைத் தலைப்பா வச்சிட்டு வேறா ஏதாவது எழுதி ஏமாத்துவது;இந்த வாட்டி பல்பு வாங்க மாட்டோம்னு வந்தீங்களா?

உங்களுக்கு ஒரு நூறு வாட் பல்பு!