தொடரும் தோழர்கள்

திரைக்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைக்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், டிசம்பர் 29, 2014

கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்



மூன்று பதிவுகளாகமரண வேட்டைஎன்ற தலைப்பில் ஒரு சிறுகதை வெளியிட்டிருந்தேன்.  

பதிவில் கருத்துச் சொன்னவர்கள் தவிர, நண்பர்கள் பலரும் தொலைபேசி மூலம் பாராட்டைத் தெரிவித்தார்கள்

சிலர் ஒரு கருத்துச் சொன்னார்கள்,இக்கதை குறும்படமாக/முழுநீளத் திரைப்படமாக ஆக்க ஏற்றது என்று.

ஒரு  கதையைப் படிக்கும்போது ஏற்படும் தாக்கம் என்பது வேறு. அதே தாக்கம் அக்கதை படமாகும்போது ஏற்படுமா என்பதே கேள்வி.

கதையின் மையமாகச் சொல்லப்பட்ட செய்தி வெறும் கருத்தாக இன்றி,காட்சி மூலம் வெளிப் படுத்தப் படக்கூடியதாக இருத்தல் அவசியம். 

சினிமா என்பது ஒரு காட்சி ஊடகம்;ஒரு பக்க வசனத்தில் சொல்லமுடியாத செய்தியை ஒரு சிறு காட்சி மூலம் சொல்லி விடமுடியும்.அவ்வாறு காட்சிப்படுத்த இயலாதென்றால் அதன் தாக்கம் மிக்குறைவாகவே இருக்கும்.

இந்தமரண வாடைஎன்ற கதையில் முக்கியமான,மையக் கருத்து என்ன? 

நாயகனின் அபூர்வத் திறமை;
 
இறக்க இருப்பவரின் அண்மையில் அவன் உணரும் ஒரு வாடை;அதுவே மரண வாடை.   

இந்த வாடையை திரையில் எப்படிச் சொல்வது.வாடையைக் காட்சிப்படுத்த முடியாது.வெறும் வசனத்தின் மூலமே வெளிப்படுத்த முடியும்.அவ்வாறு செய்கையில் அதன் தாக்கம் நீர்த்துப் போகிறது.

இது போன்ற ஒரு பிரச்சினைதான் திரு.கோவி மணிசேகரனுக்கும் ஏற்பட்தாக் கேள்விப் பட்டிருக்கிறேன்.அவரதுதென்னங்கீற்று” நாவலைத் திரைப்படமாக்க வேண்டும் என அவர் விரும்பியபோது ,ஒரு தயாரிப்பாளர்”வயதுக்கு வராத நாயகி என்று திரும்பத் திரும்பச் சொல்கிறீர்களே,அதைத் திரையில் எப்படிக் காட்டுவது ”என்று கேட்டாராம்.(பின்னாளில் அது படமாக்கப்பட்டது,திரு கோவி அவர்களின் இயக்கத்திலேயே)

எனவே மரண வாடைக்கான திரைக்கதை எழுத வேண்டும் என்றால் ஒரு மாற்றம் செய்ய வேண்டும்.இறக்க இருப்போரின் அண்மையில் வாடையை உணராமல்,நாயகனுக்கு ஏதோ  பயங்கர உருவம் தெரிவதாக(மற்றவர்க்குத் தெரியா) மாற்றி அமைக்கலாம்.”டம்” என்ற ஒலியுடன் அந்த உருவம் தோன்றும்போதெல்லாம்,பார்ப்பவர்கள் அதிர்வார்கள்தானே!!

இதைத் தவிர இன்னும் சிறிது சரக்குச் சேர்க்க வேண்டும்.

முறைப்பெண்ணின் மீது கொண்ட நேசம்.அவள் வீட்டில் ஏற்காதது இவற்றை விரிவு படுத்த வேண்டும்.

இந்த அனுபவம் அவனுக்கு ஏன் ஏற்படுகிறது என்பதற்கு ஏதாவது ஒரு இறப்புடன் அவனுக்கு ஏற்பட்ட பயங்கர நிகழ்வைக் காரனமாகக் காட்டலாம்.

இப்படி எத்தனையோ செய்யலாம்!

என்ன செய்தாலும் படம் பப்படம்தான்!