
ஒரு வாரமாகக் கழுத்து வலி.
எனவே பதிவேதும் எழுதவில்லை.
திருவிழாவுக்கு இன்னும் ஒரு நாள்
மட்டுமே இடையில் இருக்கும் நிலையில் எல்லோரையும் போல் என் எதிர்பார்ப்பும் கூடிக்
கொண்டே போகிறது.
அனைத்துப் பதிவர்களின்
ஈடுபாடும்,பங்களிப்பும் பிரமிக்க வைக்கிறது.
பதிவர்கள் அனைவரும் ஒரு குடும்பம்
என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது
நிகழ்ச்சி நிரலை காணும்போது ’ஒரு நாள்
போதுமா’ என்று பாடத் தோன்றுகிறது.
சென்ற ஆண்டு ஒரு புத்தக வெளியீடு.
இந்த ஆண்டு நான்கு புத்தகங்கள்!
அடுத்த ஆண்டு?
இப்போதே பல பதிவர்கள் தங்கள் படைப்புகளை
அடுத்த திருவிழாவில் வெளியிடும் திட்டங்களில் இறங்கியிருப்பார்கள்.
புத்தக வெளியீட்டுக்கே ஒரு நாள் ஒதுக்க
வேண்டிய நிலை ஏற்பட்டு,திருவிழா இரண்டு நாள் நிகழ்ச்சியாகக் கூட மாறலாம்!
நினைக்கும்போதே மிக மகிழ்ச்சியாக
இருக்கிறது
இப்போது வரவிருக்கும் விழாவில் கடைப்பிடிக்க
வேண்டிய சில நாகரிகங்கள்......
1.அரங்கத்தில்
புகைபிடித்தலை தவிர்த்துக் கொள்ளவும்.
2.மது அருந்திவிட்டு அரங்கிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளவும்.
3.பெண் பதிவர்களின் அனுமதியின்றி அவர்களை புகைப்படம் எடுப்பதை தயவுகூர்ந்து தவிர்த்துக் கொள்ளவும்.அனுமதியோடு புகைப்படம் எடுக்கும் பட்சத்தில் அவர்கள் அனுமதியில்லாமல் வலையில் பதிவதை தவிர்த்துக் கொள்ளவும்.
4.ஒவ்வொரு பதிவரும் சபை நாகரீகத்தை கடைபிடிக்கவும்.
2.மது அருந்திவிட்டு அரங்கிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளவும்.
3.பெண் பதிவர்களின் அனுமதியின்றி அவர்களை புகைப்படம் எடுப்பதை தயவுகூர்ந்து தவிர்த்துக் கொள்ளவும்.அனுமதியோடு புகைப்படம் எடுக்கும் பட்சத்தில் அவர்கள் அனுமதியில்லாமல் வலையில் பதிவதை தவிர்த்துக் கொள்ளவும்.
4.ஒவ்வொரு பதிவரும் சபை நாகரீகத்தை கடைபிடிக்கவும்.
ஞாயிறன்று சந்திப்போம்!