வனம் என்றாவது தூங்குமோ?
அங்கு மனிதர் வசிப்பதில்லை
எனவே தூங்கும் தொல்லையில்லை
இரவின் இருளிலிலும்
மரங்களைக் கிழித்துச் செல்லும் காற்றால்
சலசலக்கும் மரங்கள்
அம்மரங்களுக்குத் தூக்கம் என்று ஒன்று
உண்டோ?
தூங்காத மரங்கள்
தூங்குமூஞ்சி மரங்களாயினும்
வனத்தில் தூங்குவது சாத்தியமில்லை!
இரவில் விழித்திருக்கும் ஆந்தைகள்
இரைக்காகக் காத்திருக்கும் மிருகங்கள்
இவை தூங்குவதில்லை
காங்க்ரீட் வனத்தில் தூக்கம் நிச்சயம்
பசித்தால் தூக்கம்,உண்டால் தூக்கம்
சோம்பலில் தூக்கம்,உழைப்பால் தூக்கம்
இரவில் தூக்கம்,பகலில் தூக்கம்
ஆனால் மரங்கள் அடர்ந்த வனம் என்றும்
தூங்காவனம்தான்!