தொடரும் தோழர்கள்

இயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மே 26, 2015

தூங்காவனம்!



வனம் என்றாவது தூங்குமோ?

அங்கு மனிதர் வசிப்பதில்லை

எனவே தூங்கும் தொல்லையில்லை

இரவின் இருளிலிலும்

மரங்களைக் கிழித்துச் செல்லும் காற்றால்

சலசலக்கும் மரங்கள்

அம்மரங்களுக்குத் தூக்கம் என்று ஒன்று உண்டோ?

தூங்காத மரங்கள்

தூங்குமூஞ்சி மரங்களாயினும்

வனத்தில் தூங்குவது சாத்தியமில்லை!

இரவில் விழித்திருக்கும் ஆந்தைகள்

இரைக்காகக் காத்திருக்கும் மிருகங்கள்

இவை தூங்குவதில்லை

காங்க்ரீட் வனத்தில் தூக்கம் நிச்சயம்

பசித்தால் தூக்கம்,உண்டால் தூக்கம்

சோம்பலில் தூக்கம்,உழைப்பால் தூக்கம்

இரவில் தூக்கம்,பகலில் தூக்கம்

ஆனால் மரங்கள் அடர்ந்த வனம் என்றும்

தூங்காவனம்தான்!

செவ்வாய், மார்ச் 01, 2011

சூரியாஸ்தமனம்!(கவிதை)

”அடிவானத் தேயங்கு பரிதிக் கோளம்
…………..
………….
பார்சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில்
என்னடீயிந்த வன்னத்தியல்புகள்!
எத்தனை வடிவம்!எத்தனை கலவை!
----------------------(பாஞ்சாலி சபதம்)

ஆம் அய்யா பாரதி அத்தனையும் சரி
மலை வாயில் சூரியன் விழும் நேரம் வந்தாச்சு!

மெல்ல மறைகின்றான் கதிரவன் அங்கே!!

படர் முகில் வடிவங்கள் என்ன என்ன அவற்றின்
சுடர் விடும் வண்ணங்கள் என்ன என்ன!
சிவந்த வானத்தில் கரு நிற முகில்கள்!

சிவப்பும் கருப்பும் என்னவொரு கலவை!

மஞ்சள் வண்ணத்தில் துண்டு துண்டாய்
பஞ்சுப் பொதி போன்ற மேகங்கள்

அதோ ஒரு மேகம்!மாம்பழம் போல் தோற்றம்!
சிறுத்தை பாய்வது போல் மற்றுமொரு மேகம்!

மறைகின்ற சூரியனை தடுக்கவா முடியும்
வெறும் கை கொண்டு நிலைமையை மாற்றவா முடியும்!

சுட்டெரிக்கும் சூரியன் மறைந்திடுவான்

கொட்டு முரசே! குளிர்ந்த நிலவொளியில்

பாலகர்கள் பம்பரம் விளையாட தீப்பந்த ஒளியினிலே

அம்மா பரிமாற

இரட்டை இலை போட்டு நிலாச் சோறு நடக்குதென்று!