தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஜூலை 12, 2015

விடுமுறை,சிரிமுறை

மருத்துவர் திறந்த இதய அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து விட்டுத் தன் அறையில் வந்து அமர்ந்தார்

அந்த நோயாளியின் மனைவி அவர் எதிரே வந்து அமர்ந்தாள்.

“அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.கவலைப்பட வேண்டாம்” என்று சொன்னார் மருத்துவர்.

அந்தப் பெண்மணி சொன்னாள்”நன்றி ஐயா.உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்”

“கேளுங்கள்”

“அவர் இதயத்தில் வேறு ஏதாவது பெண் இருக்கிறாளா?!”





22 கருத்துகள்:

  1. ஐயா வணக்கம்.

    தனித்தமிழ் வலைப்பதிவு என்பதைத் தற்போது சேர்த்துள்ளீர்களா.......?

    காண இன்ப அதிர்ச்சியும் மகிழ்ச்சியும்.

    உங்கள் இதயத்தில் தமிழ்ப்பெண்ணைக் குடிவைத்துவிட்டீர்கள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”தமிழ்மணமும் எதிர்மறை வாக்கும்” என்ற பதிவை வெளியிட்ட அன்றே சேர்த்து விட்டேன்.
      கருத்துக்கு நன்றி ஐயா.

      நீக்கு
    2. மூச்சுக்கு முன்னூறு முறைகள் ‘எங்கள்
         முத்தமிழே! நித்திலமே!!’ என்பார் பேசும்
      பேச்சினிலோ எழுத்தினிலோ பெரிதாய் நல்ல
         பிழையற்ற தனித்தமிழைப் பேணக் காணேன்!
      கூச்சலிடும் ஒருகூட்டம் கொள்கை என்று
         கொள்வதுண்டு கடைபிடிக்கக் குறுகி நாணும்!
      ஏச்செனினும் எதிர்ப்பெனினும் என்னால் கூடும்
         ‘எழுத்தினிலே தனித்தமிழே’ என்பீர் வாழ்க!

      நீடு வாழ்க ஐயா.

      நன்றி.

      நீக்கு
  2. ஹாஹாஹா!! பொண்ணுங்க , பொண்ணுங்க தான்:)

    பதிலளிநீக்கு
  3. தனித் தமிழ் வலைப் பதிவு
    மனம் மகிழ்கிறது ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  4. அதானே! கேட்டாங்களே ஒரு கேள்வி! ஹாஹாஹா!

    பதிலளிநீக்கு
  5. இதயத்தில் கத்திரி,செல்போன் போன்ற எதையாவது வைத்து தை்த்துவிடவில்லையே அய்யா... என்று கேட்டு இருக்க வேண்டும் அய்யா.த.ம-5

    பதிலளிநீக்கு
  6. இதை முதலில் கேட்டிருக்கக் கூடாதா ,பார்த்து சொல்லி இருப்பேனே ...சரி ,பரவாயில்லை ,இன்னொரு ஐந்து லட்சம் கட்டுங்க ,மறுபடி திறந்து பார்த்திடலாம் என்று டாக்டர் சொன்னாலும் சரி என்பாரோ அந்த அம்மா ?

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    ஐயா

    ஹா..ஹா..ஹா... நல்ல கேள்வி ஐயா.த.ம 7

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. சரியான சந்தேகம் தான்... சிரிக்க வைத்த சந்தேகம்.

    பதிலளிநீக்கு
  9. ஹஹஹ்ஹ சந்தேகம் வலுத்து இன்னுரு முறை ஓபன் பண்ணுங்க நான் பார்க்கணும்னு சொல்லாம விட்டாங்களே!

    பதிலளிநீக்கு