தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜூலை 10, 2015

எட்டாம் வீட்டில் குரு என்ன செய்வான்?




அவர் எங்கள் குடும்ப நண்பர்.

சிறு வயது முதல் என்ன அறிந்தவர்.

சிறிது சோதிடமும் அறிந்தவர்.

அன்று என்னிடம் வந்தார்.

ஏதோ கவலையாக இருப்பது போல் காணப்பட்டார்.

”ஏன் ஐயா ,ஒரு மாதிரி இருக்கிறீர்கள்?”கேட்டேன்.

”தம்பி!உன்னிடம் ஒரு முக்கியமான செய்தி சொல்லவே வந்தேன்.எட்டாம் வீட்டுக்குக் குரு வந்து விட்டான்;இது ராசிக்கு நல்லதல்ல.ஏதாவது கேடு நேரலாம், உனக்குத் தெரியாததல்ல. அவனால் பல சங்கடங்கள் வந்து சேரும்.எச்சரிக்கையாக இருப்பது நல்லது” 
அவர் சொன்னர்.

நான் யோசிக்கலானேன்.குருவின் இந்தப் பெயர்ச்சி நிச்சயமாக ராசிக்கு நல்லதல்ல. இதற்கு என்ன செய்வது?

நண்பன் மணியைக் கலந்து ஆலோசிக்கலாம் என அவன் வீட்டுக்குப் போனேன்

மணி கோவிலுக்குப் போயிருப்பதாக வன் அம்மா சொன்னார்கள்

அவன்தான் தவறாமல் வெள்ளியன்று கோவில் செல்பவனாயிற்றே!

நானும் சென்றேன்

வணங்கி முடித்து வெளிச் சுற்றில் அமர்ந்தோம்.

அவனிடம் செய்தியைச் சொன்னேன்.

அவனும் அதிர்ந்தான்

இருவரும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தோம்,

மேலோட்டமா எந்த் தீர்வும்  பலன் தராது.

வீட்டுச் சொந்தக்கார் ரவியினால் ஏதாவது தீர்வு இருக்குமா?

நிச்சயம் தெரியாது

சிக்கலின் அடி வேருக்குப் போய்த்தான் அதை அறுக்க வேண்டும்.

அங்கிருந்து புறப்பட்டோம்

அந்த வீட்டை அடைந்தோம்”ஐயா!”

அவர் வெளியே வந்தார்-ராகவேந்திரன்

”வாங்க.பார்த்து பல நாட்களாகி விட்டன!””

ஒரு முக்கிய செய்தி.உங்களிடம் தெரிவித்து விட்டால் நலம் எனத் தோன்றியது. அதனால்தான் வந்தோம்

தகவலைச் சொன்னோம்.

அவ்வளவுதானே..நான் பார்த்துக் கொள்கிறேன்.கவலைப்பட வேண்டாம் என அவர்களுக்கும் சொல்லி விடுங்கள்.”

மனதின் சுமை இறங்கியதாக உணர்ந்தேன்.

இனி குருவைப் பற்றிக் கவலை இல்லை!

சில விளக்கங்கள்

இராசி….எங்கள் தெருவில் ஒன்றாம் இலக்க வீட்டில் வசிக்கும் கல்லூரி தேவதை.

குரு…..ஒரு பொறுக்கி.சில மாதங்கள் முன் இராசியிடம் தவறாக நடந்து கொண்டு  அவள் புகாரின் காரணமாகக் காவல் துறையால் கைது செய்யப்பட்டவன்.இப்போது அந்த் தெருவில் எட்டாம் இலக்க வீட்டுக்குக் குடி வந்திருக்கிறான்/எதற்கும் துணிந்தவன்

இராகவேந்திரன்…...காவல் துறை ஆய்வாளர் எங்கள் நலம் விரும்பி.நேர்மை தவறாதவர் 

23 கருத்துகள்:

  1. வணக்கம்,
    ஒஒஒ அந்த குருவா????
    அருமை,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அட ... உடனே ‘பரிகாரம்’ செஞ்சாச்சா ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடனே செஞ்சாத்தான் பரிகாரம் பலன் தரும்!
      நன்றி ஐயா!

      நீக்கு
  3. உங்க அசோதிடமும் நல்லாத்தான் இருக்கு.

    ஆமாம் ஒழுக்கத்துக்கும் அறிவுக்கும், கல்விக்கும் சோதிடத்தில் குறிப்பிடும் குருவை ஒரு ரவுடிக்கு ஒப்பிட்டிருக்கிறீர்களே.. சோதிட அன்பர்கள் கோபித்துக் கொள்ளப்போகிறார்கள்.

    எல்லோரும் ஏதோ சோதிடப் பதிவு போட்டிருக்கிறீர்கள் (உம்மைப் பற்றி தெரியாதவர்கள்தான்) வந்து போகப் பேகிறார்கள்.

    எட்டாம் குரு உங்களுக்கு ஹிட்டைக் கொடுக்கும் குருதான்.

    God bless You

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் பதிவிட்ட நேரம் 4:23.இப்போது நேரம் 5.10. அதாவது 47 மணித்துளிகளில்,81 வருகைகள்.
      நானும் சோதிடம் படித்தவன்தான்!. இங்கு குரு என்பது வெறும் பெயர்தானே!
      நன்றி

      நீக்கு
    2. //47 மணித்துளிகளில்,81 வருகைகள்.//

      என்னைப் போலவே இது ஒரு ஜோதிடப் பதிவு என்று ஆவலாக வந்திருப்பார்களோ...?

      நீக்கு
    3. அதே அதே!நான் எதிர்பார்த்ததும் அதே!
      உங்களுக்கு சோதிடத்தின் மீது நம்பிக்கை இருக்காது என்றே எண்ணியிருந்தேன்!

      நீக்கு
    4. இல்லை ... அதனால் தான் பார்க்க வந்தேன்.

      நீக்கு
  4. தலைப்பு வைப்பதில் நீங்கள் கை தேர்ந்த குரு ஐயா...பகிர்ந்த விதம் அதை விட... வணக்கம்...

    பதிலளிநீக்கு
  5. எட்டாம் இடத்தில் குரு! :))) இது நிச்சயம் ஜோதிடம் பற்றிய பதிவாக இருக்காது என்ற நினைவுடனே படித்தேன்! - அதே தான்!

    நல்ல பகிர்வு.

    த.ம. 4

    பதிலளிநீக்கு
  6. ம்..ம் நானும் ஜோதிடம் பற்றி முக்கிய செய்தி சொல்லப் போகிறீர்கள் இனி நமக்கு கஷ்ட காலம் இல்லையென்று நம்பி வந்தால் .....அப்போ இனி கஷ்டகாலம் தொடரும். விதி அதுவென்றிருந்தால் யார் என்ன செய்ய முடியும். ஹா ஹா .....நன்றி! இதுவும் நல்லாவே இருக்கு.

    பதிலளிநீக்கு
  7. நீங்கள் சோதிடத்தில் பட்டயம் பெற்றவர் என்பதால் ஏதோ குரு பெயர்ச்சி பற்றிதான் சொல்லப்போகிறீர்கள் என நினைத்தால் வழக்கம்போல் ஏமாற்றிவிட்டீர்கள்! பதிவை இரசித்தேன்.வாழ்த்துக்கள்!.

    பதிலளிநீக்கு
  8. எனக்குத் தெரியும் இது உங்கள் குறும்புதான் என்று!

    பதிலளிநீக்கு
  9. எட்டாம் இடத்தில் இருந்த குருவை காலி செய்ய வைத்து விட்டீர்கள் ,இல்லாத குருவின் பெயரால் காசு பார்க்கும் சோதிடத்தை எப்படி காலி பண்ணுவது :)

    பதிலளிநீக்கு
  10. விறுவிறுப்பாக படித்துக்கொண்டு வந்தபோது இறுதியாக தாங்கள் குருவையும் ராசியையும் அறிமுகப்படுத்தி வேகத்தைக் குறைத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  11. பாதி படிக்கையில் உங்கள் சோதிடம் புரிந்தது! அருமையான புனைவு! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  12. தளிர் சுரேஷ் சொன்னது போல் பாதியிலேயே குரு என்பது ஆள் என்று தெரிந்தாலும் சுவராஸ்யம்.

    பதிலளிநீக்கு
  13. தலைப்பு அருமை! ஆனால் தலைப்பு வாசித்த உடனேயே தெரிந்து விட்டது கன்டென்ட் வேறு...அது போல குரு 8 ஆம் வீடு என்றதும் குரு என்பவர் 8 ஆம் இலக்கம் வீட்டிற்கு குடியேறி....ராசி பெண் என்பதும் தெரிந்து விட்டது...மற்றவை னேரில் என்பது போல் உங்கள் பதிவு முழுவதும் படித்து தெரிந்தாயிற்று...சுவாரஸ்யம் தான் ..

    பதிலளிநீக்கு