தொடரும் தோழர்கள்

திங்கள், பிப்ரவரி 21, 2011

வரலாறு-5...ராஜியின் பள்ளி நாட்கள்

இன்று—


ராஜிக்குத் தள்ளாமை அதிகமாகி விட்டாலும் கூட இப்போதும் காலை 5.30க்கு எழுந்து விடுகிறாள்.குளியலில் ஒரு மாற்றம்.முன்பெல்லாம் முதலில் குளித்து விட்டுச் சமையல் வேலைகளைத் தொடங்கி விடுவாள்.இப்போது அவள் பையன் முதலில் குளித்துவிட்டு ராஜிக்குக் குளிக்க வென்னீர் போட்டுக் குளியலறையில் உட்கார்ந்து குளிப்பதற்காக நாற்காலியும் போட்டபின் குளிக்கப் போகிறாள்.குளித்து வந்த பின் ஸ்லோகங்களைச் சொல்லியபடி அமர்ந்திருக்கிறாள்.அந்த நேரத்தில் காலனியிலிருந்து பள்ளி செல்லும் பெண்களை பார்க்கும் போது ,அவர்களின் சீருடைகளை,அவர்கள் பேசிக்கொண்டு செல்வதையெல்லாம் காணும்போது அவள் மனம் தன் சென்னைப் பள்ளி நாட்களை நினைத்துப் பார்க்கிறது!

அன்று!

“டீ என்ன டீ”
அந்தப்பெண்ணின் கோபம் நிறைந்த சீறலில் ராஜி நடுங்கிப் போனாள்.
அந்த நடுக்கத்துடனே அப்பெண்ணை ஒரு கேள்விக்குறியுடன் பார்த்தாள்.
”வான்னா,போன்னா- இப்படித்தான் சொல்லணும்.அநாகரிகமா டீன்னெல்லாம்
சொல்லக்கூடாது”.
இது ராஜிக்குப் புதிதாய் இருந்தது.
அவள் முன்பு இருந்த சிற்றூரில் அவர்கள் ஒருவருக்கொருவர் வாடீ போடீ
என்றழைத்துதான் பழக்கம்.
இது புதுமையாகத்தோன்றியது.புதிய மக்கள்.அவர்களின் பழக்க வழக்கங்கள். இனி இங்கு எல்லாமே புதுமையாகத்தான் இருக்கும்,இந்தச்சூழலில் தான் எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்ற கவலையும் எழுந்தது.

அக்காலத்தில் இன்று போல் சீருடை எல்லாம் கிடையாது.சூரிதார் வகையறா எல்லாம் கிடையாது.இவள் வகுப்பில்,ஓரிரு பெண்கள் தவிர எல்லாரும் புடவைதான்.ராஜியிடம் நல்ல புடவைகள் கிடையாது.இருந்த ஒன்பது கஜம் புடவையையே ஒரு மாதிரிச் சுற்றி அணிந்து கொள்வாள்.மற்ற பெண்கள் நல்ல நல்ல புடைவகள் நகைகள் அணிந்து வருவதைப் பார்த்து அவள் நாணிப் போவாள். அதிலும் சில பெண்கள் பட்டுப் புடவையும் வைரத்தோடும்,மூக்குத்தியுமாக வருவார்கள். வகுப்பில் ஓரிரு மாணவிகளே அவளிடம் நெருங்கிப்பழகினார்கள்.அவள் படித்த நான்காம் படிவத்தில் ஒரே ஒரு பிரிவுதான்.மொத்தம் 36 மாணவிகள்.5ஆம் படிவத்தில் 12 பேர்;6ஆம் படிவத்தில் 8 பேர்தான்.

அக்காலத்திலும் முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் சிலர் இருந்திருக்கிறார்கள்.அவள் வகுப்பில் 26 வயது நிறைந்த ஒரு மாணவி இருந்தாள்.மணமானவள்;இரண்டு குழந்தைகள் வேறு. பையன் ஆறாம் வகுப்புப் படித்து வந்தான்.அவள் கணவனுக்குச் சொற்பச் சம்பளம். அவள் படித்து ஏதாவது வேலை பார்த்தால் நல்லது என்ற எண்ணத்தில் அவள் கணவனே அவளைப் படிக்க வைத்துக்கொண்டிருந்தான்.

ஆறாம் படிவத்தில் படித்து வந்த ஒரு பெண் கணவனை இழந்தவள்.அவளது எதிர்காலத்தை மனதில் கொண்டு அவள் பெற்றோர் அவளைப் படிக்க வைத்தனர்.(பின்னொரு காலத்தில் கல்லூரிப் பேராசிரியரான தன் கணவனின் கல்லூரிப் புகைப்படம் ஒன்றில் மாணவர்கள் வரிசையில் அவளை பார்த்த ராஜி மிகவும் ஆச்சரியப் பட்டுப் போனாள்)

அவள் வகுப்பில் இரு சகோதரிகள் படித்து வந்தனர்.அவர்களில் ஒருத்தி ராஜிக்கு நெருங்கிய தோழியாக இருந்தாள்.சகோதரிகள் பள்ளியில் பேசிக்கொண்டு அவள் பார்த்ததேயில்லை.ஒரு நாள் ராஜி அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தபோது அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதைப் பார்த்து ஆச்சரியப் பட்டுப் போனாள்.தோழியிடம் கேட்டாள்”ஏன்னா,நீங்க ரெண்டு பெரும் பேசுவீங்களா? வகுப்பில பேசவே மாட்டீங்களே,அதான் கேட்டேன்”
அந்தத்தோழி கேட்டாள்”என்னன்னா இப்படிக் கேக்குறே?அக்கா,தங்கை எங்காவது பேசிக்காம இருப்பாங்களா? அங்கே பேச வெட்கமாக இருக்கும்,அதுதான்”

அந்த அளவுக்கு ராஜி அப்பாவியாய்,ஏதுமறியாதவளாய் இருந்தாள்

இன்னொரு பெண்.பெயர் நீலா.அவள் அப்பாவுக்கு அந்தக் காலத்திலேயே 2000 ரூபாய் சம்பளமாம்.அவர்கள் மயிலாப்பூரில் வசித்து வந்த வீட்டு வாடகையே 100 ரூபாய் என்று அறிந்த போது ராஜி ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தாள்.ராஜியின் வீட்டு வாடகை 14 ரூபாய்தான்!

அவள் அப்பா ஒவ்வொரு மாதமும் அவள் பெயரில் வீட்டு விலாசத்துக்குத்தான் பணக்கட்டளை மூலம் பணம் அனுப்புவார்.ஆனால் தபால்காரர் வரும் நேரத்தில் ராஜி பள்ளியில் இருப்பதால் அவர் பள்ளிக்கே வந்து பணத்தைக் கொடுத்து விடுவார்!

படிப்பைப் பொறுத்தவரை சமஸ்கிருதம்,ஆங்கிலம் இரண்டிலும் ராஜி வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று விடுவாள்.ஆனால் கணிதம்---சுமார்தான்!சமஸ்கிருதத்தில் வீட்டுப்பாடம் நிறைய இருக்கும் வேறெதையும் படிக்க நேரமே இருக்காது. வீட்டுப் பாடம் எல்லாம் முடித்துக் களைப்படைந்து புத்தகத்தைக் கையில் எடுத்தால் கண்கள் செருகும். புத்தகம் நழுவிக் கீழே விழும்!

இன்று!

கையிலிருந்த ஜயமங்கள ஸ்தோத்திரம் புத்தகம் நழுவிக் கீழே விழுந்தது.ராஜி நிகழ்காலத்துக்கு வந்தாள்.விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தாள்”குண்டலீக்ருத குண்டலீச்வர குண்டலம் வ்ருஷ வாஹனம்…..”

(இன்னும் வரும்)

29 கருத்துகள்:

  1. அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
    வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  2. அருமை அருமை சென்னை பித்தன்...தொடருங்கள்....வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. அருமை..
    அடுத்த பதிவிலும் சந்திப்போம்...
    வாழ்த்துகளும் மற்றும் வாக்குகளும்...

    பதிலளிநீக்கு
  4. சீக்கிரம் வளரட்டும்.. வளரட்டும்.. அடுத்தது என்ன?

    பதிலளிநீக்கு
  5. கவிதை காதலன் சொன்னது…
    //சீக்கிரம் வளரட்டும்.. வளரட்டும்.. அடுத்தது என்ன?//
    வளரும் விரைவில்!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  6. FOOD கூறியது...

    //சுகமான நினைவுகள்.//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  7. சே.குமார் கூறியது...

    //அருமை... தொடருங்கள்.//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்!

    பதிலளிநீக்கு
  8. என்னதான் மூட்டி வைத்தாலும் தங்களின் அந்நாளைய சென்னையின் நினைவுகள் எப்படியும் வெளிவந்துவிடும்.
    நமக்கு நினைவுகள் தவிர வேறு ஒன்றுமில்லை என்பதே உண்மை. அதுவே நம்ம வேதனையும் கொள்ள செய்துவிடும்.
    இருந்தும் அவைகள் சுகமானைதான்.

    பதிலளிநீக்கு
  9. பதிவு தெளிவான நீரோட்டம்போல் இருப்பதால்,படிக்க ஒரு சுகம். தொடரட்டும் உங்களது எழுத்தாக்கம்.

    பதிலளிநீக்கு
  10. @கக்கு - மாணிக்கம்
    யாருக்குமே நினைவுகள் சுகமானவைதான்.இவை சொல்லக் கேட்ட நினைவுகள்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  11. @வே.நடனசபாபதி
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  12. அவள் வகுப்பில் 26 வயது நிறைந்த ஒரு மாணவி இருந்தாள்.மணமானவள்;இரண்டு குழந்தைகள் வேறு. பையன் ஆறாம் வகுப்புப் படித்து வந்தான்.அவள் கணவனுக்குச் சொற்பச் சம்பளம். அவள் படித்து ஏதாவது வேலை பார்த்தால் நல்லது என்ற எண்ணத்தில் அவள் கணவனே அவளைப் படிக்க வைத்துக்கொண்டிருந்தான்.

    ஆறாம் படிவத்தில் படித்து வந்த ஒரு பெண் கணவனை இழந்தவள்.அவளது எதிர்காலத்தை மனதில் கொண்டு அவள் பெற்றோர் அவளைப் படிக்க வைத்தனர்.//

    மிக ஆச்சர்யம்.. அப்பவே இத்தனை முற்போக்கா.?..

    பகிருங்கள்.. படிக்க காத்திருக்கோம்..

    ராஜியம்மாவுக்கும் எமது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. தொடர்ந்து அசத்துங்க... very nice.

    பதிலளிநீக்கு
  14. Chitra கூறியது...
    //தொடர்ந்து அசத்துங்க... very nice.//
    நன்றி சித்ரா!

    பதிலளிநீக்கு
  15. பிரியமுடன் பிரபு கூறியது...
    // ULLEN AYYA....//
    வருகைப் பதிவேட்டில் பதிவு செய்து விட்டேன்!நன்றி பிரபு!

    பதிலளிநீக்கு
  16. பயணமும் எண்ணங்களும் கூறியது....
    //மிக ஆச்சர்யம்.. அப்பவே இத்தனை முற்போக்கா.?..

    பகிருங்கள்.. படிக்க காத்திருக்கோம்..

    ராஜியம்மாவுக்கும் எமது வாழ்த்துகள்.//
    ஆம்! அந்தக் காலத்திலேயே இத்தனை முற்போக்கானவர்கள் இருந்தது வியப்புதான்!
    உங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து விட்டேன்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  17. தோழி பிரஷா கூறியது...
    //அருமை... தொடருங்கள் ஜயா..//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,தோழி பிரஷா!

    பதிலளிநீக்கு
  18. நான்காம் பாரத்தில் புடவை கட்டினார்களா?

    சம்ஸ்க்ருத வீட்டுப்பாடம்... யப்பாடி!

    பதிலளிநீக்கு
  19. அப்பாதுரை கூறியது...
    //நான்காம் பாரத்தில் புடவை கட்டினார்களா?
    சம்ஸ்க்ருத வீட்டுப்பாடம்... யப்பாடி!//
    அது அந்தக்காலம்!அப்போதும் கணவனை இழந்த பெண் படிக்க வந்ததும் உண்டு;பெரியவளான பின் பெண்ணின் படிப்பு நிறுத்தப் பட்டதும் உண்டு!
    நன்றி அப்பாதுரை!

    பதிலளிநீக்கு
  20. நல்ல பதிவு.கொஞ்சம் லேட் ஆயிட்டேன் சாரி.

    பதிலளிநீக்கு