பல மாதங்களுக்கு முன் படித்ததொரு செய்தி!
முப்பது வயதான ஒரு ஆண்,தன் மனைவியை உடலுறவுக்கு அழைத்து,அவள் மறுக்கவே,ஸ்கிப்பிங்க் கயிற்றால் அவள் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு,உயிரற்ற அந்த உடலுடன் உறவு கொண்டுள்ளான்.
என்ன ஒரு வக்கிரம்?
மன நல மருத்துவர்கள் சொல்கிறார்கள் இது ஒரு விதமான மன நோய் என்று.அதற்கான ஆங்கிலப் பெயர்-'necrophilia'.
ஆனால் வள்ளுவர் இது போன்ற ஒரு செயலை ஒரு உவமையாக உபயோகப்படுத்தி,வேறு ஒரு செயலை இதனுடன் ஒப்பிடுகிறார்--
“பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று.”
பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யான தழுவுதல்,இருட்டறையில், தொடர்பு இல்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.
வள்ளுவர் உபயோகிக்கும் சொற்களைப் பாருங்கள்-
பொருட்பெண்டிர்-பொருளுக்காக தங்களையே விலையாக்கும் பெண்கள்;விலை மாது என்று சொல்வதன் சரியான தமிழ்ப் பதம்
பொய்ம்மை முயக்கம்-ஆடவருடன் கூடும் போது அவள் கட்டித் தழுவும் தழுவலானது,செற்கையானது.
ஆடவரை மகிழச்செய்ய அவள் காட்டும் உணர்ச்சி வெளிப்பாடுகள்-உச்சத்தைதொடுவதாகக் காட்டும் உணர்ச்சிகள்,பொய்யானவை,நடிப்பு.
ஏதில் பிணம் –தொடர்பு இல்லாத, முன்பேஅறியாதபிணம்-
தெரிந்தவர்களாக,உறவினர்களாக இருந்தால் பிணத்தைக் கட்டிப் பிடித்து அழுவது நடக்கக் கூடியதே.;அந்த உணர்ச்சி வேறாக இருந்தாலும்.ஆனால் தொடர்பு இல்லாத ஒரு பிணத்தைக் கட்டிப் பிடிப்பது என்பது,அருவருப்பு ஏற்படுத்தும் ஒரு செயல். பொருட்பெண்டிர் முயக்கமும் அது போன்றதே.பிணத்துக்கும் உனர்ச்சிகள் இல்லை1
ரத்தினச் சுருக்கமாகப் பொட்டில் அறைந்தது போல் சொல்லி விட்டார் அல்லவா?