தொடரும் தோழர்கள்

சனி, ஜூலை 25, 2015

இப்படித்தான் சொத்து சேர்ந்ததா?!


இந்த வாரம் கதை வாரமாகி விட்டது.

திங்கள் முதல் வெள்ளி  வரை இரு கதைகளை வைத்து ஓட்டி விட்டேன்!

சனியன்றும் ஒரு கதை எழுதி விடலாம் எனப் பார்த்தால் ஒரு முடிச்சும் கிடைக்கவில்லை.

என்ன செய்வது?

எனவே 2011 இல் வெளியிட்ட ஒரு கதையை மீள்பதிவாகத் தரலாம் என முடிவு செய்து விட்டேன்.

அப்போது நல்ல வரவேற்புப் பெற்ற கதை.

பலர் எதிர்பார்க்கும் திருப்பம் உள்ள கதை

படிக்காதவர்கள் படித்துப் பாருங்கள்

படித்தவர்கள் மீண்டும் படியுங்கள்;அல்லது தாண்டிச் சென்று விடுங்கள் 

இதோ.............

சோதிடர் சொல்லி விட்டார்சார்,தசாநாதன் சாதகமாக இல்லை.உங்கள் எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் அதுதான்

ஏதாவது பரிகாரம் செய்யலாமா?” 

செய்யலாம்.இடர் கொஞ்சம் குறையும்.அதற்கு முன்னால்,உங்கள் குல தெய்வத்தை வழிபட்டு விடுங்கள்.அப்போதுதான் பரிகாரம் பலன் தரும்

யோசித்தேன்கடைசியாக ஊர்ப்பக்கம் போய் பதினைந்து வருடம் இருக்குமா?” இத்தனை ஆண்டுகளாக ஊர்ப்பக்கமே போகாமல் இருந்தது உறுத்தியது.போய் விட வேண்டியதுதான் போய்க் குல தெய்வமான அய்யனாருக்கு எல்லாப் பூசையும் செய்து விட்டு வர வேண்டியதுதான்.

அடுத்த வாரமே புறப்பட்டேன். ரயில் நிலையத்துக்கு என் நண்பன் வந்திருந்தான். 

அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் எங்கள் கிராமம்.

அவனது இரு சக்கர வண்டியிலேயே சென்றோம்.அவன் மனைவி குழந்தைகள் அன்பாக வரவேற்றனர்.

அன்று கிராமத்தில் பெரிசுகளையெல்லாம் பார்த்து விட்டு வந்தேன். கோவில் பூசாரியிடமும் மறுநாள் பூசைக்கு எல்லாம் தயாரா என்று கேட்டு விட்டு வந்தேன்.

தோப்புப் பக்கம் போனேன்.எத்தனை நாட்கள் விளயாடிய இடம்? அங்குதான் தூங்கண் ணனைப் பார்த்தேன்.எல்லார் வீட்டிலும் என்ன வேலை சொன்னாலும் செய்வான்;யார் வீட்டிலாவது சாப்பிடுவான். தனியாள்.

என்ன ,தூங்கண்ணே! எப்படியிருக்கே? ”

என்னை உற்றுப் பார்த்தான்.யாரு ?கோடி வீட்டுத் தம்பியா?என்ன ஊரையே மறந்துட் டீங்களா?”

அதான் வந்துட்டேனே.என்ன செஞ்சிட்டுருக்கே ?”

சொன்னான்நாந்தான் இந்தத் தோப்புக்குக் காவல்.இதை பாண்டித்தேவர் வாங்கிட்டாரு. அவர்தான் ஒரு பக்கமா உக்காருடான்னு சொல்லி இங்கேயே இருக்கச் சொல்லிட்டாருபேசிக் கொண்டிருக்கும் போதே சிறிது தூரத்தில் ஒரு பெரிய நல்ல பாம்பு வேகமாகச் சென்று மறைந்தது.நான் பயந்து போய் அவனைப் பார்த்தேன். 

தம்பி!நான் சொல்றதை யாரிட்டயும்சொல்லிடாதீங்க. அது ரொம்ப வயசான பாம்பு. அதுங்கிட்ட நாகரத்தினம் இருக்கு.அதை எடுக்கணும்னு காத்துக்கிட்டிருக்கேன். அமாவாசை அன்னிக்கு ராத்திரி இரைதேடப் போகும்போது அந்த ரத்தினத்தைக் கக்கிட்டு அந்த வெளிச்சத்திலதான் போகும்.அப்ப,அந்த ரத்தினத்தைச் சாணியால மூடிட்டு அந்தப்பாம்பை லேசாக் கொன்னுடலாம்.

நான் சிரித்தேன்.

என்ன சிரிக்கிறீங்க?நெசம் தம்பி.இது நடக்கத்தான் போகுது பாருங்க.பாண்டி த் தேவருக் கே இம்புட்டுப் பணம் எப்புடி வந்தது.ஒரு ரத்தினம் கெடச்சப்பறம்தான்

அத்தோடு வந்து விட்டேன். மறுநாள் ,பூசை,படையல் என்று பொழுது போயிற்று. மாலை நண்பனுடன் டவுனுக்குப் போய் வந்தேன்.

மறு நாள் புறப்பட வேண்டும் .அன்று காலை யாரோ சொன்னார்கள், தூங்கண்ணன் இறந்து கிடக்கிறான்,அவனைப் பாம்பு தீண்டி விட்டது என்று.நானும் போய்ப் பார்த்தேன்.தோப்பில் அவன் கிடந்தான் .உடல்    நஞ்சால் நிறம் மாறியிருந்தது.இடது கையில் வேல்கம்பு.வேலில் ரத்தம்.அருகில் அந்த நாகம் தலையில் காயத்துடன் செத்துக் கிடந்தது.

அவனுக்கு என்று யாரும் இல்லாததால், வெட்டியானையே எல்லா வற்றையும் செய்யச் சொல்லி விட்டார்கள்.ஆகும் செலவெல்லாம் பாண்டித்தேவர் பொறுப்பு.

உடலை எடுத்துச் செல்லும்போதுதான் கவனித்தேன்,அவன் வலது கை மூடியிருந்தது,... இறுக்கமாக. அதைப் பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை.

எனக்கு ஒரு நெருடல் .கையில் என்ன இருக்கும்?

நேற்று அமாவாசை!

ஒரு வேளை,ஒரு வேளை,அப்படியிருக்குமோ?”
……………………………………………….
கதை இதோடு முடிவதே சிறப்பு.

ஆனால் சிலர் ஏதாவது  திருப்பம் வேண்டும் என்பார்கள்

. அவர்களுக்காக,இதோ----
……………….
இது நடந்து இரண்டு ஆண்டுகள்கழிந்த பின்,ஒரு நாள்.அந்தப் பெரிய கடைத் தொகுதி யிலிருந்து  வெளியேவந்தேன்.சாலைக்கு வந்ததும் என்னருகில் ஒரு  ம்கிழ்வுந்து வந்து நின்றது.அதிலிருந்து பட்டு வேட்டி,சட்டையுடன் ஒருவர் இறங்கினார்.

என்னைப் பார்த்துக் கேட்டார்தம்பி,நல்லாருக்கீங்களா?”

பார்த்தமுகம்,ஆனால் யாரென்று தெரியவில்லை.

”என்ன தம்பி,முழிக்கறீங்க.நாந்தான் மாசாணம்,ஒங்க ஊரு வெட்டியான்!


34 கருத்துகள்:

  1. நானும் முழித்தேன் மாசாணத்தை பார்த்து....

    பதிலளிநீக்கு
  2. அடேடே.. ரொம்ப அருமையான கதைங்க. பிரமாதம்.
    உங்க நடை ரொம்ப casual ஆ இருக்கு. கதை crisp ஆவும் இருக்கு.

    God Bless You

    பதிலளிநீக்கு
  3. முடிவும் திருப்பமும் இரண்டுமே ரசனை.


    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அப்போது படிக்கவில்லை! இப்போது படித்து ரசித்தேன்! வழக்கம் போல அருமை!

    பதிலளிநீக்கு
  5. சாணத்தால் மூடி எடுத்தது ஒருவர் ,அனுபவிப்பவர் மா'சாணமா' :)

    பதிலளிநீக்கு
  6. ஆஹா.... வெட்டியான் கையில் கிடைத்து விட்டது நாகரத்தினம்....

    பதிலளிநீக்கு
  7. மாசாணம்...எப்படி "மா" சாணம் ஆனார்னு புரிஞ்சுருச்சு...கதையின் முதல் முடிவும் சரி, திருப்பமும் சரி அருமை...கதை நடை அருமை...

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    ஐயா
    இறுதியில் சொல்லி முடித்தது.. சிறப்பு ஐயா நல்ல நடையில் எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 11
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    பதிலளிநீக்கு
  9. ஆஹா... அப்போ நாகரத்தினம் இருக்கிறது என்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு

  10. //படித்தவர்கள் மீண்டும் படியுங்கள்;அல்லது தாண்டிச் சென்று விடுங்கள் /./

    அக்டோபர் 4 ஆம் நாள் 2011 ஆம் ஆண்டு படித்த கதையை, அதுவும் சுவாரஸ்யமான கதையை படிக்காமல் எபப்டி தாண்டி செல்லமுடியும்?

    அப்போது சொன்ன கருத்தைத்தான் இப்போது சொல்லவிரும்புகிறேன், ஆல்ஃப்ரெட் ஜோசஃப் ஹிட்ச்காக் ஒரு படத்திற்கு பெருவாரியான இரசிகர்களின் விருப்பம்போல் கதையை நகர்த்தியதைப்போல், கதையின் முடிவை இந்த தடைவையாவது அறிவிக்காமல் இரசிகர்களின் விருப்பம் அறிந்து முடித்திருக்கலாம்.

    இருப்பினும் முடிவு எதிர்பாராததே. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. பழைய பதிவு என்பதால் நான் படித்திருப்பேன்! தற்போது மறதி அதிகமல்லவா! சுவை மிகுதி!

    பதிலளிநீக்கு