தொடரும் தோழர்கள்

சனி, மார்ச் 31, 2012

பிலாசபியின் வேலை என்ன?!


இது நிச்சயமாகப் ’பிலாசபி பிரபாகரன்’ பற்றிய பதிவு அல்ல!

பாவம் அவர் ஏற்கனவே நொந்து போயிருக்கிறார்.

ஏன் என்று பலருக்குத் தெரியலாம்;சிலருக்குத் தெரியாதிருக்கலாம்.

அவர்களுக்காக இந்தத்  தகவல்.

சென்ற வார(28-3-12) என் விகடனில் வலையோசை பகுதியில் பிரபாகரனின் வலைப்பூ  அறிமுகம் என்று சொல்லி அவரது புகைப்படத்துடன்(பிடரி  மயிர் இல்லாத சிங்கம் பார்த்திருக் கிறீர்களா?), அறிமுகக் குறிப்புக்களுடன், பதிவிலிருந்து சில பகுதிகள் வெளியிட்டிருந்தார்கள்.

ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அந்தப் பதிவு அவருடையதல்ல.வேறு ஒரு ’யூத்’ பதிவருடையது!
(’யூத்’ என்பதை அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள்!)

அதில் ஒரு பதிவு “அங்கிள்,இது லேடீஸ் டாய்லெட்” என்ற தலைப்பிட்ட பதிவு.அதைப் படித்துவிட்டுப் பல நண்பர்கள் பிரபாகரனுக்குப் போன் செய்து”என்னப்பா,ஒரு பேரிளம்பெண் உன்னை அங்கிள் என்று அழைத்து விட்டாளா  ” என்று கலாய்த்து விட்டார்களாம்.

பாவம் பிரபாகரன்.மாற்றிப் போட்துதான் போட்டார்கள்;ஒரு உண்மையான ’யூத்’ பதிவரின் பதிவைப் போட்டிருக்கக் கூடாதோ?

எனவே இது அவரைப் பற்றிய பதிவு அல்ல.

அறிவியல் சில அடிப்படைகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது.

“எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் “ என்பது ஒன்று.

அப்படியானால்,இந்தசுழலும் உலகத்துக்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

கடவுள் எனப் பதில் சொன்னால்,அடுத்த கேள்வி அந்தக் கடவுளுக்குக் காரணம் என்ன?

கடவுள் தானாகவே உண்டானவர் என்றால்,ஏன் உலகம் தானாகவே உண்டாயிருக்கக்   கூடாது என்ற கேள்வி எழுகிறது.

எனவே ஒரு கட்டத்தில் அடிப்படைக் கோட்பாடு உடைந்து போகிறது.

இதைத்தான் பிலாசபி செய்கிறது

(பட்டவகுப்பில் -1961—64- ஒரு  சிறிய  பாடம்,”நவீன அறிவியலின் அடிப்படைகள்,தத்துவத்தின் பிரச்சினைகள்” என்பது.எனது முக்கிய பாடமான கணிதத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு?!என்னவோ பாடத்திட்டம்!)

இது போலத்தான் தர்க்கவியல் என்று ஒன்று உண்டு.அதில் தவறான வாதம் என்று  ஒன்று சொல்வார்கள்
உதாரணம்,--விஸ்கியும் தண்ணீரும் சேர்த்துக் குடித்தால் போதை வருகிறது
                     பிராந்தியும் தண்ணீரும் சேர்த்துக் குடித்தால் போதை வருகிறது
                     ரம்மும்   தண்ணீரும் சேர்த்துக் குடித்தால் போதை வருகிறது
                    இவை மூன்றிலும் பொதுவானது தண்ணீர்.
                    எனவே தண்ணீர் குடித்தால் போதை வரும்!
இது ஒரு தவறான வாதம்.(ஃபேலஸி)

ஒரு சர்தார்ஜி கரப்பை வைத்துப் பரிசோதனை செய்து கொண்டிருந்தாராம்
     ஒரு காலை வெட்டி விட்டு நகர் என்றால் நகர்ந்தது.
      இன்னோரு காலை வெட்டி விட்டு நகர் என்றால் நகர்ந்த்து
     மூன்றாவது காலை வெட்டி விட்டு நகர் என்றால் நகர்ந்த்து.
     நான்காவது காலையும் வெட்டி விட்டு எத்தனை முறை நகர் என்று சொல்லியும் நகரவில்லை!
உடனே அவர் எழுதினார்”கரப்புக்கு நான்கு கால்களையும் வெட்டி விட்டால் காது கேட்காது”

34 கருத்துகள்:

  1. கடைசியில் கூறப்பட்டுள்ள இரண்டு உதாரணங்களும் அருமையான நகைச்சுவை.

    ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் தங்கள் எழுத்தில் படித்ததும் மீண்டும் சிரிப்பு வந்தது. பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  2. கரப்புக்கு காது கேட்காது என்பதை எப்படி எல்லாம் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிச்சிருக்காங்க!
    எதுவும் நிரந்தரமில்லை, மாறக்கூடியதே என்பதை கூறுகிறீர்கள். நேற்றைய ஃபிலாஸஃபி இன்றைய கேலிக்கூத்து!
    வாழ்க ஆராய்ச்சிகள்!

    பதிலளிநீக்கு
  3. நானும் இதை வாசித்தேன் விகடனில்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  4. அடிக்கோடிட்டாலும் இடாவிட்டாலும் சென்னைப்பித்தன் அவர்கள் யூத்தான்

    பதிலளிநீக்கு
  5. "ஃபிலாஸஃபி" -ஐ விட "தேடல்" களே பல உண்மைகளைக் கற்றுக்கொள்ள உதவும்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு பித்தரே. என்ன ... நம்ம மண்டைக்குத் தான் தத்துவம் கொஞ்சம் ஏறல. மீண்டும் வாசிக்கப் போறேன்.

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான பகிர்வு அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  8. ஹா.. ஹா.. கரப்புக்கு காது கேட்காது மேட்டரும், தண்னீர்ல போதை இருக்குங்கிற மேட்டரும் டாப்புங்கண்ணா...

    நட்புடன்
    கவிதை காதலன்

    பதிலளிநீக்கு
  9. வழக்கம்போல் பல்சுவைப் பதிவை தந்தமைக்கு நன்றி!
    தர்க்கவியலில் அடிக்கடி சொல்லப்படும் இதோ இன்னொரு தவறான வாதம்.
    God is Love
    Love is Blind
    So God is Blind!
    தத்துவதைப் தாங்கள் படித்ததால்தான் சில பதிவுகள் தத்துவங்களைத் தாங்கி வருகின்றனவோ? என் விகடனில் தவறுதலாக வெளியிட்ட பதிவு எந்த ‘யூத்’ பதிவருடையது என்பதை வெளியிடுங்களேன்!

    பதிலளிநீக்கு
  10. ஒரு பக்திமானின் சட்டை பகுத்தறிவாளருக்கு...தொளதொளவென்றுதான் இருக்கும் அய்யா!நானும் பிலாசபி பிரபாகரனைச் சொல்லலை!ஹஹ!

    பதிலளிநீக்கு
  11. @வே.நடனசபாபதி
    யார் என்று சொல்லவும் வேண்டுமா.?கஸாலி சொல்லிட்டார்!

    பதிலளிநீக்கு
  12. சட்டை அவருதில்லைன்னு அன்னிக்கே அவர் சொல்லிட்டாரே!
    நன்றி சுரேஸ்குமார்

    பதிலளிநீக்கு
  13. Yow philosophy..un sirippukku ennayyaa artham. Rascol..

    பதிலளிநீக்கு
  14. அந்த யூத் பதிவரின் வயது 67 இருக்கும் போல் ! ஏன் என்ற கேள்வி கேட்டுகொண்டே போனால் வடிவேலு போல் தலை சுற்றி தான் விடும் வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  15. என்றும் இனிமை சர்தார்ஜி ஜோக்ஸ்!

    பதிலளிநீக்கு
  16. வணக்கம்! நொந்து போன ஒரு பதிவரில் தொடங்கி அறிவியல், விஸ்கி – தண்ணீர் என்று சர்தார்ஜி ஜோக்கில் நிறுத்தி, தத்துவ விளக்கமே இப்படித்தான் என்பதனை சொல்லி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  17. "அடிக்கோடிட்டாலும் இடாவிட்டாலும் சென்னைப்பித்தன் அவர்கள் யூத்தான்" cool one.....
    http://www.dunkindonutscoupons.com

    பதிலளிநீக்கு