தொடரும் தோழர்கள்

சிகரெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிகரெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஆகஸ்ட் 18, 2011

அந்தப் பலகைகளை அகற்றி விடலாம்!

பெட்டிக் கடைகளில் காணப்படும் ஒரு அறிவிப்புப் பலகை--”இது புகை பிடிக்கத்தடை செய்யப்பட்ட பகுதி.இங்கே புகைபிடித்தல் தண்டனைக்குரிய குற்றம்”

சிகரெட்டை முற்றாக ஒழிக்க முடியாத நிலையில், பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதைத் தடுப்பது நல்ல யோசனைதான்.ஆனால்,அமல்படுத்த முடியாத இடத்தில் தடை உத்தரவு போடுவது ஒரு கேலிக்கூத்துதான்.

புகை பிடிப்பதைத் தடுக்க வேண்டும் என அரசு நினைத்தால்-அது தேவையா இல்லையா என்பதல்ல இங்கு விவாதம்-சிகரெட் உற்பத்தியை,விற்பனையைத் தடை செய்ய வேண்டும்.

பெட்டிக்கடையில் சிகரெட் வாங்குபவர்கள் அதை எங்கே சென்று பிடிப்பார்கள்?ஒவ்வொரு தெருவிலும் சிகரெட் பிடிப்பதற்கென்று தனி இடம் ஒதுக்கப் பட்டிருக்கிறதா?பெட்டிக் கடைகளில் வாங்கும்பொருள்களில் சிலவற்றை அங்கேயே பயன் படுத்த முடியும்.சிலவற்றை அப்படிப் பயன் படுத்த முடியாது.சிகரெட் என்பது பிஸ்கட்,சாக்லெட்டைப் போலக் கடை வாசலிலேயே நுகரக்கூடிய ஒன்று.அப்படி நுகர்வது பொதுச் சூழலுக்கும் சிகரெட் பிடிக்காத வர்களுக்கும் எதிரான செயல் என்பதில் ஐயமில்லை.இதைத்தடுக்க வேண்டும் என்ற அக்கறையோடு அரசு இந்தத் தடையைக் கொண்டு வந்திருக்கிறது என்றால் அது செய்ய வேண்டிய காரியங்கள்,தடையைக் கறாராக அமல் படுத்துதல்,ஒவ்வொரு தெருவிலும் புகை பிடிக்க இடம் ஒதுக்குதல் ஆகியவைதான்.

சாலைகளில் செல்பவர்கள் அவசரத்துக்குச் சிறுநீர் கழிக்கக்கூட ஏற்பாடு செய்ய இயலாத நிர்வாகத்திடம் புதிதாக எந்த வசதியையும் எதிர்பார்க்க முடியாது.தன் மக்கள் புகை பிடிப்பது குறித்து அவர்கள் உடல் நலம் சார்ந்த அக்கறை அரசுக்கு இருக்கும் என்றால்,சிகரெட் மூலம் வரும் கோடிக் கணக்கான வருமானத்தை இழக்க அது தயாராக இருக்க வேண்டும்.கள்ளச் சந்தையில் சிகரெட் விற்பனை நடப்பதைத் தடுக்கும் திறமை வேண்டும்.

இவற்றில் எதுவுமே சாத்தியமில்லை என்பதால்,சாத்தியமான ஒரே விஷயத்தைச் செய்யலாம்--

அந்த அறிவிப்புப் பலகைகளை எடுத்துவிடலாம்!

நன்றி:நம்ம chennai