ஒரு தன்னினந் தின்னி,நர மாமிச உண்ணி(cannibal) காட்டினுள்நடந்து சென்று கொண்டிருந்தான்.வழியில் மற்றொரு அவன் இனத்தானால் நடத்தப்படும் ஒரு உணவு விடுதியைக் கண்டான் .
அவனுக்குப் பசியாக இருந்ததால் அங்கு சென்று அமர்ந்து உணவுப் பட்டியலட்டையைப் பார்த்தான்.அதில்—
1)சுற்றுலாப்பயணி---ரூ.500
2)வாட்டிய சமயப் பரப்பூழியர்—ரூ.750
3) வறுத்த புதியவை தேடுபவர்---ரூ.1000
4)வேக வைத்த அமெரிக்க அரசியல்வாதி—ரூ.1250
5)மசாலா நிரப்பிய இந்திய அரசியல்வாதி—ரூ.2500
அவன் பணியாளை அழைத்துக் கேட்டான்”ஏன் இந்திய அரசியல் வாதிக்கு இந்த விலை?”
அவன் சொன்னான்.”எப்பவாவது அவங்களைச் சுத்தம் பண்ணிப் பாத்திருக்கீங்களா? ஒரே அழுக்கு,அசுத்தம், ஒரு நாள் முழுவதும் ஆகும்!”
--------------------------------------------------------------------------------------------------------------
ஒரு முறை மூன்று ஊழல் அரசியல்வாதிகள் தனி விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர்
ஒருவர் ஒரு நூறு ரூபாய் நோட்டை கீழே போட்டு,”நான் ஒரு இந்தியனுக்கு மகிழ்ச்சியளித்தேன்”என்றார்.
இன்னொருவர் இரண்டு நோட்டுக்களைக் கீழே போட்டு”நான் இரு இந்தியர்களை மகிழ்ச்சியடையச் செய்தேன்” என்றார்.
மூன்றாமவர் நூறு ஒரு ரூபாய் நாணயங்களப் போட்டு “நான் நூறு இந்தியர்களுக்கு
மகிழ்ச்சியளித்தேன்” என்றார்.
இவையனைத்தையும் கேட்ட விமான ஓட்டி சொன்னார்”இப்போது நான் உங்கள் மூவரையும் கீழே போட்டால் நூறு கோடி இந்தியர்கள் மகிழ்வார்கள்” என்று !