தொடரும் தோழர்கள்

வெள்ளி, டிசம்பர் 05, 2008

ஜெகசிற்பியனின் மறைவுக்குப் பின்?

நேற்று அமெரிக்காவிலிருக்கும்(தற்சமயம்)என் அண்ணாவுடன் யாஹூ உரையாடலில் இருந்தபோது அவர் திடீரென்று ஒரு கேள்வி கேட்டார்.
"ஜெகசிற்பியன் அவர்கள் காலமானபின் என்ன நடந்தது என்று தெரியுமா?
"தெரியாது.என்ன நடந்தது?"-நான்.
"அவர் மனைவி பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார்-RC கிறித்தவப் பிரிவைச் சேர்ந்த இளைஞர் யாராவது அதிக செலவின்றி அவர் மகளை மணக்க முன் வருவாரா என்று"-அண்ணா
"எப்போது இது?"-நான்
"முப்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்"-அவர்
"இப்போது எப்படித் திடீரென்று நினைத்துக் கொண்டாய்"-நான்
"நேற்று உன் பதிவைப் படித்துக் கொண்டிருந்தேன்"-அவர்.
இரண்டுக்கும் என்ன தொடர்பு என்று எனக்குப் புரியவில்லை.அதை நான் அவரிடம் கேட்கவும் இல்லை
என் நினைவுகள் ஜெகசிற்பியனிடம் சென்றன.
அறுபதுகளின் தொடக்கத்தில்,நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது,விகடனில் சில அற்புதமான முத்திரைக் கதைகள் எழுதினார்.மறக்கமுடியாத பாத்திரங்களான ஆடிகோடா,பாடிகோடி என்ற இருவரைப் பற்றிய,'நரிக்குறத்தி' என்ற ஒரு பரிசு பெற்ற சிறுகதை.நான் மிக விரும்பிப் படித்த "ஆலவாய் அழகன்"என்ற ஒரு புதினம் இப்படி எத்தனையோ.
அவர் மறைவுக்குப் பின் இப்படி ஒரு நிலையேற்பட்டதென்றால்,இதென்ன கொடுமை?
இப்போது என் மனத்தை அரிக்கும் நினைவெல்லாம் ,"பின் என்னவாயிற்று?"
யாராவது நல்ல மனம் கொண்ட இளைஞன் அப்பெண்ணை மணந்து அவர்கள் சிறப்பாக வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்று மனம் விரும்புகிறது.
யாருக்காவது தெரியுமா?
சில மாதங்களுக்கு முன் ஜெகசிற்பியனின் படைப்புகள் பற்றி 'ஜீவி' என்பவர் ஒரு பதிவிட்டு அதில் நான் ஒரு பின்னூட்டமும் இட்டிருந்தேன்.
அவருக்குத் தெரியுமா?
யாருக்குத்தெரியும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக