விளக்க இயலாதது
முடிவொன்று இல்லாதது
தன்னலம் கலவாதது
என்றும் நிலைப்பது
அழிவற்றது,
அகற்ற இயலாதது
பொறுமை நிறைந்தது
மன்னிப்பு அருள்வது
என்றும் துணை நிற்பது
நம்பிக்கை வைப்பது
நல்லதையே செய்வது
அனைத்தையும் கடந்தது
அறிவால் அளக்க முடியாதது
ஆண்டவனின் ஆசிர்வாதம்
அம்மாவின் அன்பன்றோ!