தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஜனவரி 08, 2012

ஆருத்ரா தரிசனம்.




மார்கழியின் மற்றொரு இனிய அங்கம்,திருவாதிரைப் பண்டிகை. ஆருத்ரா தரிசனம் என்று அழைக் கப்படும்,சிவனுக்கு உகந்த நாள். பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள். “கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை.

அன்று தான் தில்லையில் நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் தந்தாராம்.

அன்று,சிதம்பரத்தில் மிக விசேஷமான அபிஷேக ஆராதனைகள் செய்யப் படும் (கேட்டதுதான்.பார்த்ததில்லை)எங்கள் வீடுகளில் செய்யப்படும் களியும் ஏழு கறிக்கூட்டும் மிகவும் சுவையானவை. ஏழை பக்தரான சேந்தனார் அளித்த களியை சிவன் ஆவலோடு ஏற்றுக் கொண்டதிலிருந்து திருவாதிரை தினத்தில் களி முக்கிய நைவேத்தியம் ஆனது. இனிப்பான களியையும், உப்பு,காரம் நிறைந்த கூட்டையும் சேர்த்துச் சாப்பிடும்போது –சுகம்!
செய்முறை தெரிய வேண்டுமா?ஜெயஸ்ரீயைத் தவிர வேறு யாரைக் கேட்க முடியும்?

இன்று திருவாதிரை.தில்லை நடராஜரை வணங்கி எல்லா நலமும் பெறுவோம்.

டிஸ்கி:இன்று  நானே களியும் கூட்டும் செய்தேன் ---ஆசான் J.G யின் வழிகாட்டுதலின் படி..பிரமாதமாக இருந்தது.

11 கருத்துகள்:

  1. நான்கு ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தபோது ‘ஆருத்ரா தரிசனத்தை’ நேரில் கண்ட எனக்கு தங்களது பதிவு பழைய நினைவுகளை திரும்பவும் அசை போட உதவியது. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. களி, கூட்டு செய்யும் விதம் நேற்றே தமிழ்மணத்தில் ’மிரா’ஸ் கிச்சன்’எழுதியிருந்தார்கள். செய்ய நினைத்தேன், பக்கத்து வீடுகளிலிருந்து இரண்டும் கிடைத்துவிட்டபடியால், அடுத்த வருடம் தான் முயற்சிக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  3. இன்று நானே களியும் கூட்டும் செய்தேன் ---ஆசான் J.G யின் வழிகாட்டுதலின் படி..பிரமாதமாக இருந்தது.

    அருமையான் ஆருத்ரா தரிசனத்திற்கும்
    சுவையான களிப்பூட்டும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  4. ஆருத்ரா தரிசனம் விளக்கம் நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  5. "ஆருத்ரா தரிசனம்." செய்திக்கு நன்றி . இவையெல்லாம் எவ்வளவு முறை கேட்டாலும் படித்தாலும் திகட்டாது ..மகாபாரத/ ராமாயண கதைகள் போல் .. திருவாதிரை களி மற்றும் கூட்டு போல் சுவையான பதிவு . வாசு

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்!
    //இனிப்பான களியையும், உப்பு,காரம் நிறைந்த கூட்டையும் சேர்த்துச் சாப்பிடும்போது –சுகம்!//
    எதனையும் ருசித்துச் சாப்பிடும் தங்கள் காம்பினேஷன் சப்பு கொட்ட வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. களியும் கூட்டும் சிவதரிசனமும்
    இனிதாக ஆச்சு
    இது குறித்த தங்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    த.ம 6

    பதிலளிநீக்கு
  8. ஆருத்ரா தரிசனத்தை பற்றிய அரிய அருமையான விளக்கம்,
    த ம 7

    பதிலளிநீக்கு
  9. அழகிய பகிர்வொன்றின் மூலம் எங்களையெல்லாம் ஆருத்ரா தரிசனம் பண்ண வைத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு