தொடரும் தோழர்கள்

புதன், செப்டம்பர் 30, 2015

சிரிப்பதற்கு விடுமுறை வரை காத்திருப்பானேன்?!இன்றே நன்று!!

காலை கணவன் எழுந்தான்.

யோகா வகுப்புக்குச் செல்ல எண்ணினான்

அவன் தயார் செய்து கொண்டிருந்தபோது மனைவி கண் விழித்துப் பார்த்தாள்

அன்பே! என்னுடன் யோகாவுக்கு வருகிறாயா?” என்றான்

நான் குண்டாக இருக்கிறேன் என்று சொல்கிறீர்களா?” மனைவி

அய்யய்யோ!அப்படியில்லை.உனக்கு எழ விருப்பம் இல்லை என்றால் வேண்டாம்

அப்ப,நான் சோம்பேறி என்கிறீர்களா?”

நீ என்னைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டே

ஓ!நான் உங்களை புரிஞ்சுக்கறதே இல்லை,அப்படித்தானே?”

நான் அப்படிச் சொல்லவில்லையே!

அப்படின்னா நான் பொய் சொல்றேனா?”

அடக்கடவுளே!நானும் யோகவுக்குப் போகாம இருக்கறதுதான் நல்லது

அப்படி வாங்க வழிக்கு!உங்களுக்குப் போக விருப்பமேயில்லை;ஆனா பழியை எம்மேல போடப்பாக்கறீங்க!?

கணவன் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்க ஆரம்பிக்கிறான்.

செவ்வாய், செப்டம்பர் 29, 2015

’கிரேசி’ கரடி--முடிவு!

சென்னை பித்தனை தொலைபேசியில் அணுகி, "நீங்கள் அடையாறில்தானே இருக்கிறீர்  கள்?என்னைச் சந்திப்பதற்காக, ஐஐடி பக்கத்தில் கீரிடம்போல தோற்றம் உள்ள மண்டபம், யாரும் வராத இடம் என்றுசொல்கிறார்களே? அங்கே வர முடியுமா? ”என்று பணிவாகக் கேட்டது.

உன்னால அந்த ’மூதறிஞரி ‘ன் நினைவு மண்டபத்திற்கு போகும் இன்னொரு சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கிறதே என்று மனமகிழ்ந்து அங்கே வருவதாக அவர் ஒப்புக் கொண்டார். 

“ஆமா? என்னை எப்படிக் கண்டுபிடிக்கப் போற.?”
 
”உங்க போட்டோவை உங்க வலைப்பூல என்னைப் பற்றி என்றபகுதில நிறைய வாட்டி
பார்த்திருக்கேனே என்று சொல்லி லேட்டஸ்டா வராட்டாலும் லேட்டா மட்டும் வராதீங்க”  
என்று குறும்புத் தனமாக கேட்டுக் கொண்டது. 

”என்னை அடையார் அஜீத் என்றுதான் அழைக்கிறார்கள்;சூப்பர்ஸ்டார் என்றழைப் பதில்லை” என்றார் செபி

வெறிச்சோடிக்கிடக்கும் ராஜாஜி நினைவு மண்டபத்தில் சென்னை பித்தன் நுழைந்தவுடன், புதரில் மறைந்து நின்ற கரடி அவரை வரவேற்றது. ஐயா,எனக்கு  மகிழ்ச்சியானமுடிவைக் கொடுங்கஎன்று வேண்டிக் கொண்டது.

சரி நீ ஆணா, பெண்ணா?

நான் கல்யாணத்திற்காக காத்திருக்கும் யுவதி.

அப்படியானா உன் மனசுல இருக்கிற கரடியோட உன்ன ஒண்ணு சேர்த்துர்றேன் என்று முடிவை ஆரம்பித்தார்.

அன்று பெளர்ணமி. முழு நிலவு பொழிந்து கொண்டிருந்தது. மனதை வருடம் மலைய மாருதம். கிணற்றில் விழுந்த கரடி, “இப்படி யாரும்இல்லாம தனியொருவளா போயிட் டோமே”. என்று மனம் நெகிழ்ந்தது.

போன முழு நிலவன்று அருவியில் தன் காதலனுடன் நடத்திய சரசங்கள் இப்பொதைய சோகத்தை அதிகமாக்கியது. அப்போது ”திக்கு தெரியாத காட்டில் உன்னைத் தேடித் தேடி அலைந்தேனே”. என்ற பாட்டு அவன்குரலில் ஒலித்தது போன்ற பிரமை. பிறகு பாட்டு மிக அருகில் கேட்டது.

பாட்டுக்கு பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்கலையோஎன்று எசப்பாட்டுதொண்டை கிழிய பாடியது பெண் கரடி. சரசரவென்று பெரிய சத்தம் கேட்டது. நிலவை மறைத்து காதலனின் முகம் கிணற்றுக்கு வெளியே தெரிந்தது. ஆண் கரடி கிணற்றுக்குள் பாய்ந்து தன் காதலியை முதுகு மேல் ஏற்றிக் கொண்டு வெளியில் வந்து ராக் அன் ரோல் ஆடிவிட்டு பின் 
அவர்களுக்கு பிடித்த அருவிக்கு போய் சந்தோஷமடைந்து கானகம் திரும்பின.


முடிவை கேட்ட ஆண் கரடி புதரில் இருந்து வெளியேறி ராக் அன் ரோல் அடிகளை எடுத்து வைத்து நடனமாடி சென்னைப் பித்தனை மகிழ்வித்தது. 


பிறகு ஒரு அழகிய சந்தன பேழையில் ஒரு பென்டிரைவ் ஒன்றை வைத்து  அவரிடம் அளித்து இதற்குள் எங்கள் தாரக மந்திரம் பதிவாகி இருக்கிறது. எங்கள் லிபியில் மறைக்குறி யீடாக்கம் (Encrypt) செய்யப் பட்டுள்ள அந்த வாசகங்களை முடிந்தால்  மறையீடு நீக்கி  (Decrypt) செய்து பார்த்து மகிழுங்கள் என்று மனமகிழ்ச்சியுடன் விடை பெற்றன கரடி தம்பதி..

சென்னை பித்தனுடைய லேப்டாப்பால் அந்த டிரைவை  படிக்க  முடியவில்லை. ஐபிஎம் நிறுவனத்தில் பணிபுரியும் தன் நண்பரிடம் அந்த பென்டிரைவைக் கொடுத்தார். அவர் யுஎஸ்ஸில் உள்ள தங்கள் தலைமையகத்துக்கு அனுப்பி அந்த லிபியை மறையீடு நீக்கம் (Decrypt)  செய்து சென்னை பித்தனுக்கு மின்னஞ்சலில் அனுப்பினார். சென்னை பித்தன் அதை பார்த்து நம்மையே கிரேசியாக்கிவிட்டதே இந்த கரடிகள்என்றுஅகமகிழ்ந்தார். கரடிகளின் தாரக மந்திரம் இதோ.

    டி

ர யி ல்

டி ல் லி

!!!!!!!!!!!!!!!!

டிஸ்கி:கரடி பூடகமாக ஏதோ சொல்கிறதோ!ரயிலில் ஏறி டில்லி போகப் போகிறதோ?!  எதற்கு?ஏதாவது கட்சி ,கரடிச் சின்னம் கேட்டிருக்குமோ?!அல்லது ஏதாவது உரிமை கேட்டுப் போராடப் போகிறதோ?

திங்கள், செப்டம்பர் 28, 2015

’கிரேசி ’கரடி!

 பார்த்தசாரதி எழுதுகிறார்........!

ஆரண்ய காண்டம்” பதிவுக்கு வாசகர்களின் எதிர்வினை அன்று ”நடந்த நிகழ்ச்சிகளை சுற்றியே இருந்தன; இதனை நினைத்து கரடி தன்னிரக்கம் அடைந்து மனக்கலவரத்துடன் என்னை அணுகியது. 



நான்   கிணற்ரிலிருந்து வெளியில் வந்தேனா இல்லையா என்று எந்த ஒரு வாசகரும் கவலைப் படவில்லையே. ஏன்?”

சிறுவாரி அனுபவங்கள் தான் அதற்கு முக்கிய காரணம்.  நீ அந்த விறகு வெட்டிகளுக்காக வருந்தவில்லையா

இல்லாமல் இல்லை. நீங்கள் தான் எதை எதனுடன் முடிச்சுப் போடுவது என்று தெரியாமல் எனக்கு வரவேண்டிய அனுதாபத்தை இருட்டு அடையச் செய்துவிட்டீர்கள். நான் உங்கள் பதிவாளர் சென்னை பித்தனிடம் புகார் செய்யப் போகிறேன் என்று மிரட்டியது.

கொஞ்சம் பொறு. இப்பொழுது உன் கதைக்கு மூன்று முடிவுகள் தருகிறேன். எந்த முடிவு சரியாக இருக்கும் என்று நீயே தேர்ந்தெடு. 

சொல்லுங்க, பிடிச்சிருக்கா பார்க்கறேன் என்றது கரடி.

முடிவு 1.

இரவு வந்தது. அன்று அமாவாசை. நட்சத்திரங்களின் வெளிச்சம் மேகமூட்டத்தில் மறைந்திருந்தது. ஒரு நாகப்பாம்பு கிணற்றுக்கள் இறங்கியது. சரசரவென்று சத்தம் கேட்டு கரடி பயந்தது. கிணற்றுக்கடியில் இருந்த மறைவிடத்தில் சென்று ஒளிந்து கொண்டது. அப்போது நல்ல பாம்பு மாணிக்கத்தை கக்கியது. கரடிக்கு கண்கள் கூசின. பரம்பொருளை பார்த்த உணர்வு. சிறிது நேரத்தில் அருகிலிருந்த ஒரு பொந்தில் பாம்பு நுழைந்து மறைந்தது. கரடி மாணிக்கத்தை எடுத்து வாளியில் போட்டுவிட்டு ஏணி ஏறி கானகம் விரைந்தது. மாணிக்கத்தை, உணவு, தண்ணீர், ஏணி முதலியவற்றை வைத்து உதவிய கிழவன் எடுத்துக் கொள்ளட்டுமே என்று கருணை உள்ளத்துடன் அப்படி செய்தது கரடி. 

முடிவை கேட்ட கரடி, நாங்ககெல்லாம் பாம்பை பார்த்து பயப்பட மாட்டோம்”.

நீ என் கதையின் ஹீரோ. நான் நினைச்ச மாதிரி தான் கதையின் போக்கு இருக்கும் என்ற என் பதில் கரடியை கோபமூட்டியது. பிறகு சாந்தப்படுத்திக் கொண்டு வேறு முடிவுகளை கேட்க ஆர்வம் காட்டியது.

இடக்கு முடக்கா பேசாதே அப்ப தான் மத்த முடிவுகளை சொல்லுவேன் என்று கரடியை கண்டித்துவிட்டு முடிவுகளை சொல்ல ஆரம்பித்தேன்.

முடிவு 2.

உலர்ந்த கிணற்றில் நிலவிய குளிர்ச்சி கரடியை சற்று ஒய்வெடுக்கத் தூண்டியது. அப்ப வேட்டு வெச்ச மாதிரி ஒரு பெரிய சத்தம். கிணற்றின் ஒரு பக்கம் வெடித்துப் போய் வாயு வேகமாக பீரிட்டுக் கொண்டு வெளியானது. கொஞ்ச நேரத்தில் கரடிக்கு மயக்கம் வந்தது. விஷவாயுவாக இருக்குமோ?! உடனே கரடி தத்தித் தத்தி ஏணியிலே ஏறி கிணத்துக்கு வெளியே வந்து சற்று தூரத்துக்கு தள்ளாடி நடந்து வெளியே விழுந்தது. வெள்ளி  முளைக்கும் நேரம். வாளியிலே தண்ணியும் சாப்பாடும் வச்ச கிழவன் வந்து உதவி பண்ணியதால கரடி ஒரு மிருக வைத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் அவசர வைத்தியம் பார்த்து கரடியை பிழைக்க வைத்து பின் அதை ஹைதராபாத் மிருக காட்சிச்  சாலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்.

முடிவான முடிவு 2.

அமாவாசை. காரிருள். பேய்க் காற்று. கனக மின்னலுடன் சுறாவளி. கானகம் கரைப்புரண்டு வெள்ளக்காடாகியது. ஏணியில் ஏற முயலும் கரடி வழுக்கி விழுகிறது. கஷ்டப்பட்டு ஏறி வந்து நீச்சலடித்து தப்பி செல்ல முழு முயற்சி எடுக்கிறது. உத்தம வில்லன் படத்தில் வந்த உத்தமன் கமல்போல் சாகா வரம் பெற்றதா இந்த கரடி? அருவியில் இருந்து விழுந்து பரிசலில் மிதக்கிறது. 


கானகம் கடந்து பறிதவிக்கும் கரடி அடுத்த கானகத்தின் கரையில் ஒதுங்குகிறது. அந்த கானகத்தின் கரடி தலைவன் ஆணையின் பேரில் முதலுதவி அளிக்கப்பட்ட கரடி மயக்கம் தெளிகிறது. தலைவனின் அழகிய மகள் லஜ்ஜையுடன் அண்ணலை நோக்கினாள். அவரும் நோக்கினார்.

இந்த முடிவுகள் நன்றாகத் தான் இருக்கின்றன. ஆனால் சென்னைப் பித்தன் இதைவிட பிரமாதமான முடிவை தருவார் என தான் நம்புவதாக கூறி அவரிடம் விரைகிறது.

-தொடரும்

டிஸ்கி:அடக்கடவுளே!இந்தப் பார்த்தசாரதி நம்மளை இப்படி மாட்டி விட்டுட்டாரே!கரடி எப்ப வரப் போகுதோ?என்ன ஆகப் போகுதோ!ஜாம்பவானே ,காப்பாத்து!

ஞாயிறு, செப்டம்பர் 27, 2015

விடுமுறை,சிரிமுறை!



ஒரு மருத்துவர் ஒரு பொறியாளர் இரண்டு பேரும் என் பெண்ணை மணக்க விரும்பினார்கள்.

அப்படியா?கடைசியில் யார் அதிர்ஷ்டசாலி?

மருத்துவர்தான்,என் பெண் பொறியாளரை மணக்கச் சம்மதித்து விட்டாள்

.............

திருமணமான முதல் ஆண்டில் கணவன் பேசுகிறான்,மனைவி கேட்கிறாள்.

இரண்டாம் ஆண்டில் மனைவி பேசுகிறாள்,கணவன் கேட்கிறான்.

மூன்றாம் ஆண்டில் இருவரும் பேசுகின்றனர்;அண்டை அயலார் கேட்கின்றனர்!

சனி, செப்டம்பர் 26, 2015

தனி ஒருவன் - முடிவு!



கிருஷ்ணசாமி அந்த செக்கை மேஜை மீது வைத்து, அதன் மீது தண்ணீர் டம்ளரை பாரமாக வைத்து விட்டு தன் உரையை ஆரம்பிக்கத் தயாரானார்.  

அங்கு நிலவிய பரிபூரண அமைதியைக் கிழித்துக் கொண்டு அவரது கம்பீரமான குரல் அம்மாபெரும் கூட்டத்தின் காதுகளில் தேனாகப் பாய்ந்தது.

                 விழாவை அமைப்பதற்கு அரும்பாடுபட்ட குழுவிற்கு நன்றி தெரிவித்து உரையைத் தொடங்கினார்.  தமது 33 வருட உத்யோக அனுபவித்தின்போது தன்னை வெகுவாக பாதித்த சிலபல அனுபவங்களை அழகாக விவரித்தார்.  தனக்கு முன் பேசிய சிலர் தனது உத்யோக வெற்றியின் ரகசியம் எதுவாக இருக்கும் என்று கேள்வி எழுப்பி தங்கள் அனுபவத்தில் கண்ட சில காரணங்களை வரிசைப் படுத்தியதில் பல காரணங்கள் மிகையானவை என தான் எண்ணுவதாகக் குறிப்பிட்டார்.  


பிறகு தன் உத்யோக வெற்றியின் காரணம் என்னவாக இருக்கும் என்று தான் நினைப் பதை விளக்கினார். 

                  அந்தரங்க ஸுத்தி என்பது பொதுப் பணி புரியும் ஒவ்வொருவருக்கும் மிகமிக அவசியம்.  கண்டவற்றை, கேட்டவற்றை, படித்தவற்றை எல்லாவற்றையும் ஆராய்ந்து ஒரு தீர்க்கமான முடிவெடுக்க, அந்தரங்க ஸுத்தி தான் ஆதாரம்.  தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற விருப்பு வெறுப்பு இன்றி எந்த ஒரு விஷயத்தையும் எவ்வித முன் தீர்மானமும் இல்லாமல் அணுகினால் அதன் காரணமாகக் கிடைக்கும் தீர்வு அப்பழுக்கு அற்றதாக இருக்கும்.  தன்னிச்சைப்படி காரியங்களை முடித்துக் கொள்ள முயற்சி செய்யாது, எது நியாயமோ அதை அரும்பாடுபட்டாவது கண்டு பிடித்து அதன் வழி நடப்பதே சத்தியம்.  தனது பணி என்ன, அதை எங்கே, எப்படி ஆரம்பித்து, எப்படி முடிப்பது என அறிந்து நியாயம் ஒன்றே குறிக்கோள் என்று செயல் பட்டால், எந்த விதத் தவறும் எந்தக் கணத்திலும் நடக்காது, அதற்கு என் உத்யோக வாழ்க்கையே எடுத்துக் காட்டுஎன்று குறிப்பிட்டார்.  


                 கடமையாற்றும்போது குறுக்கே வரும் ஆசைகளை, பேராசைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு சரியானவைகளையே செய்யும் வெறியுடன் செயல்பட வேண்டும் என்று அவர் ஆணித்தரமாக சொன்னபோது அவர் பேச்சின் தீவிரம், சத்தியம், உண்மை அங்கு கூடியிருந்தவர்களது அந்தரங்களை வெகுவாகத் தொட்டது.  


                தனக்கு அளிக்கப்பட்டுள்ள பண முடிச்சை Staff Benevolent Fundக்கு அப்படியே அளிப்பதாக அறிவித்து அந்த செக்கை endorse செய்து அதற்குரிய திகாரியிடம் அதை சேர்ப்பித்து தன் உரையை முடித்துக் கொண்டார்.


அவரது பேச்சு ஏற்படுத்திய பிரமிப்பலிருந்து விடுபட்ட ஊழியர்கள் கிருஷ்ணசாமி வாழ்க! வாழ்க! என்று நெஞ்சுருகி வாழ்த்தினர்.


                 ஒரு அரை மணி நேரம் மேடையிலேயே அமர்ந்திருந்து தன்னை வாழ்த்த வந்தவர் களையெல்லாம் சந்தித்து நன்றி கூறி விட்டு சுமார் 10 மணி அளவில் வீடு திரும்பினார்.

               இரவு 10.30 மணிக்கு காலிங் பெல் அடிப்பது கேட்டு, வந்தது யாராக இருக்கும் என்ற பரபரப்புடன் மாடியிலிருந்து ஹாலை நோக்கி வந்த கிருஷ்ணசாமிக்கு, ஹாலில் அன்னியச் செலாவணி ஜெனரல் மேனேஜரும், இரண்டாவது உயர் அதிகாரியும் காத்திருப்பது மிக்க வியப்பை அளித்தது.


               அயல் நாடுகளில் நிறுவப்படும் அன்னியச் செலவாணி கம்பெனியில் பணி புரிவதற்கான தேர்வின் முடிவுகளை நாளையே தாங்கள் அறிவிக்க விரும்புவதாக அவர்கள் அறிவித்தது, கிருஷ்ணசாமிக்கு ஓர் ஆனந்த அதிர்ச்சியைத் தந்தது.  நாளை காலை 11 மணிக்கு அதை ஆபிஸில் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டு படுக்கையில் படுத்த போது கிருஷ்ணசாமி மிக்க மன நிறைவடைந்தார்.  


              கிருஷ்ணசாமி நினைத்தது போல் அவர்கள் நல்லெண்ணத்துடன் ஒன்றும் வரவில்லை.  பதவி ஓய்வு பெறுவதற்கு முன் எப்படியும், கிருஷ்ணசாமி வெளி நாட்டிற்கு ஆபிஸர்களை அனுப்புவதற்கான லிஸ்டைப் பற்றி பிரஸ்தாபிப்பார் என்று அவர்கள் நன்கு அறிவர்.  அதை சமாளிக்க ஒரு திட்டம் தீட்டியிருந்தனர்.  


             அவர்களுக்கு எப்படியோ கிருஷ்ணசாமிக்கு டெல்லியிலிருந்து அளிக்கப்பட வேண்டியிருந்த பதவி பற்றிய விவரம் எட்டியிருந்தது.  அரசாங்க அதிகாரியின் உறவினரை லிஸ்டில் சேர்த்தால் தான் அந்த சேர்மன் பதவி இவருக்கு என்ற விவரமும் அவர்கள் அறிவர்.  அந்த விஷயத்தை வைத்து கிருஷ்ணசாமியை தங்களது எண்ணங் களுக்கு பணிய வைக்க ஒரு திட்டம் தீட்டியிருந்தனர்.  அதாவது 20 நபர்களுக்கான லிஸ்டின் முதல் 19 இடங்களை Merit Orderன் படி பூர்த்தி செய்து விட்டு, 20 வது இடத்தை மட்டும் கிருஷ்ணசாமியின் இச்சைக்கு விட்டுவிட வேண்டியது.  ஒரு வேளை கிருஷ்ண சாமி அந்த 20 வது இடத்தை டெல்லி அதிகாரியின் உறவினருக்கு  கொடுப்பாரேயானால் பிறகு அவரை கட்டாயப்படுத்தி தங்களுக்கு வேண்டியபடி லிஸ்டை மாற்றிக் கொள்வது என்று முடிவு செய்திருந்தினர்.  மறு நாள் கிருஷ்ணசாமிக்கு சத்திய சோதனை ஒன்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  


            இந்த விஷயங்களையெல்லாம் அறியாத கிருஷ்ணசாமி தனது கீழ் அதிகாரிகளின் திடீர் இரவு விஷயத்தைப்  பற்றி வியந்தவாறே மறு நாள் காலை அலுவலகத்தை நோக்கி நடந்தார். அவர் இருக்கையில் அமர்ந்த ஐந்து நிமிடங்களுக்கெல்லாம், அந்த லிஸ்டுடன் கிருஷ்ணசாமியின் அறைக்கு வந்தனர்.  லிஸ்டை சமர்ப்பித்தனர்.  20 பேர்கள் இருக்க வேண்டிய லிஸ்டில் 19 பேர்கள் தான் இருப்பது குறித்து, கிருஷ்ணசாமி அவர்களிடம் வினவியபோது, அவர்கள் அசட்டுச் சிரிப்புடன், டெல்லி உயர் அதிகாரியின் உறவினர் பெயரைச் சொல்லி, சேர்மன் விரும்பினால், அந்தப் பெயரை 20 வது பெயராக சேர்த்துக் கொள்ளலாம் என முன் மொழிந்தனர்.  அடி வயிற்றிலிருந்து வந்த சினத்தை கஷ்டப்பட்டுக் கொண்டு அடக்கிக் கொண்டு, பஸ்ஸரை அழுத்தி பியூன் மூலம் இண்டர்வியூ லிஸ்ட் அடங்கிய பைலை எடுத்து வர ஆணையிட்டார். 


           அந்த பைலில் இருந்த Merit Order லிஸ்டின் படி முதல் 19 பெயர்கள் அந்த அதிகாரிகள் கொடுத்த லிஸ்டில் சரிவர இடம் பெற்றுள்ளதா என உறுதி செய்து கொண்டு, Merit order ல் இருபதாவதாக இடம் பெற்ற ஊழியரின் பெயரை அந்த லிஸ்டில் தன் கையாலேயே பூர்த்தி செய்து, லிஸ்டை அங்கீகரித்து கையெழுத்திட்டார். 


           திரு கிருஷ்ணசாமியின் அந்தரங்க ஸுத்தியின் ஒளியில் அந்த இருபது ஊழியர் களின் எதிர்காலம் பிரகாசித்தது.


--பார்த்தசாரதி