தொடரும் தோழர்கள்

ஞாயிறு, செப்டம்பர் 26, 2010

மஞ்சள் துண்டு எங்கே?!!

நேற்று முதல் இதே கேள்விதான் ஓடிக்கொண்டிருக்கிறது மனதில்—எங்கே மஞ்சள் துண்டு?
இதற்கான விடையை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.
தங்கை கேட்டாள்”என்னண்ணா ஒரே யோசனை?’
“மஞ்சள் துண்டு எங்கே போச்சுன்னே தெரியலை”.
“போண்ணா,உனக்கு வேற வேலையில்லை”
தங்கை போய் விட்டாள்.
”அம்மா!”-அழைத்தேன்.
என்னடா என்றபடி அம்மா வந்தாள்.
“எங்கேம்மா மஞ்சள் துண்டு?
”உன் கிட்ட ஏதுடா மஞ்சள் துண்டு?”
“அதாம்மா,இங்கே வச்சிருந்தேனே ஒரு துண்டு மஞ்சள்.-கருக்கி முகர்ந்து பார்ப்பதற்காக,அதுதான்”

“அதுவா,நேற்று வெள்ளிக் கிழமை இல்லையா.அடுத்த வீட்டு ராஜி வந்திருந்தாள்.வெற்றிலை பாக்கோடு கொடுக்க உள்ள வேறே குண்டு மஞ்சளே இல்லை.அதுதான் இங்கே இருந்ததை எடுத்துண்டேன்.வெளியில் போகும்போது மறக்காம 50 கிராம் குண்டு மஞ்சள் வாங்கிண்டு வந்துடு.”

இதுதான் மஞ்சள் துண்டு –துண்டு மஞ்சள்-காணாமல் போன சம்பவம்.