தொடரும் தோழர்கள்

புதன், ஜனவரி 25, 2012

சில சிந்தனைகள்!


நான் பணத்திடம் சொன்னேன்”நீ என்ன வெறும் காகிதம்தானே?”

அது சிரித்தது.பின் சொன்னது”உண்மைதான் .ஆனால் எனக்கான குப்பைத் தொட்டி எதுவுமேயில்லை!

------------------------------------------------------------------------------------------


நாக்குக்கு எலும்பில்லை.

ஆனால் அதனால் ஒரு இதயத்தை உடைக்க முடியும்!

உடைந்த ஒரு உள்ளத்தை சரி செய்ய ஒரு தூணாகவும் முடியும்!

----------------------------------------------------------------------------------------


ஒவ்வொரு இரவும் படுக்கச் செல்கையில்,எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை நாளை விழித்தெழுவோமென!

ஆயினும் நாளைக்கான திட்டங்களை இன்று வகுத்துக் கொண்டேதானிருக்கிறோம்!

அதுதான் நம்பிக்கை!

---------------------------------------------------------------------------------------------

மன்னிப்பென்பது என்ன?

ஒரு மலரைக் கசக்கும்போது அது ஒரு  நறுமணத்தைத் தருகிறதே,

அதுதான்!

--------------------------------------------------------------------------------------------

 நாளை என்பது தினம் வரும்.

ஆனால் இன்று என்பது இன்று மட்டுமே வரும்.

எனவே இன்றைய வேலையை இன்றே முடியுங்கள்!

நாளை நிம்மதியாக இருங்கள்!

-----------------------------------------------------------------------

 
நேற்றைய நிகழ்வுக்காய் வருந்தி

நாளைய நிகழ்வெண்ணிக் கவலுற்று

இன்றைய மகிழ்ச்சியைத்

தொலைக்கிறோம் நாம்!


நேற்று நிகழ்ந்ததை அழிக்க இயலாது

நாளை நிகழ்வதை நாளை எதிர்கொள்வோம்

இன்றேன் இழக்க வேண்டும் மகிழ்ச்சி?

--------------------------------------------------------------

28 கருத்துகள்:

  1. மின்னஞ்சலில் வாசித்து இருக்கிறேன். நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  2. அத்தனையும் வாழ்க்கைக்கான வேதங்கள்...

    அழகிய தொகுப்பு...

    பதிலளிநீக்கு
  3. அத்தனையும் பொன்மொழிகள்.
    பகிர்வுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  4. அறிவுரைக்கும் - பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. ஞானப்பெண்ணிடம் வாங்கிய கருத்து முத்துக்கள் ஒவ்வொன்றும். அருமையிலும் அருமை.

    தமஓ 5.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ! நறுக்கு ஓலையில் பொறிக்கப்பட்ட நல்வாழவிற்கான நல்ல சிந்தனை வரிகள்!

    பதிலளிநீக்கு
  7. சிந்திக்க வைத்தது ஐயா..

    பதிலளிநீக்கு
  8. சிந்திக்கவைக்கும் அருமையான பொன்மொழிகள்
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 8

    பதிலளிநீக்கு
  9. நல்ல நல்ல சிந்தனைத் துளிகள் !

    பதிலளிநீக்கு
  10. நான் பணத்திடம் சொன்னேன்”நீ என்ன வெறும் காகிதம்தானே?”

    அது சிரித்தது.பின் சொன்னது”உண்மைதான் .ஆனால் எனக்கான குப்பைத் தொட்டி எதுவுமேயில்லை!//

    தல கலக்கலா இருக்கே ம்ம்ம்ம் உண்மைதான் பணத்துக்கு குப்பைத் தொட்டி ஏது???

    பதிலளிநீக்கு
  11. ஒவ்வொரு இரவும் படுக்கச் செல்கையில்,எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை நாளை விழித்தெழுவோமென!//

    உண்மைதான் தல, ஒவ்வொரு வாக்கியங்களும் சும்மா சுரீர்னு இருக்கு நன்றிகள்...!!!

    பதிலளிநீக்கு
  12. //மன்னிப்பென்பது என்ன?
    ஒரு மலரைக் கசக்கும்போது அது ஒரு நறுமணத்தைத் தருகிறதே,
    அதுதான்!//

    அனைத்துமே அருமை. அதுவும் மேலே உள்ளது மிக அருமை.

    பதிலளிநீக்கு
  13. //மன்னிப்பென்பது என்ன?

    ஒரு மலரைக் கசக்கும்போது அது ஒரு நறுமணத்தைத் தருகிறதே,
    அதுதான்!//

    நான் இதை மிகவும் ரஸித்தேன்.

    பதிலளிநீக்கு