தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜனவரி 17, 2012

சாணக்கியர் பேசுகிறார்!

1)மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.அந்தத் தவறுகள்  அனைத்தையும் செய்வதற்கு உங்களுக்கு ஒரு வாழ்நாள் போதாது.

2)ஒருவர் மிக நேர்மையானவராக இருக்கக் கூடாது.நேரான மரங்களே    முதலில்  வெட்டப்படுகின்றன. நேர்மையானவரே முதலில் ஏமாற்றப் படுகிறார்கள்.

3)ஒரு பாம்பு விஷமில்லாததாக இருக்கலாம்;ஆனால் அது விஷமுள்ளது    போல் நடிக்க வேண்டும்.

4)ஒவ்வொரு நட்புக்குப் பின்னும் கொஞ்சம் சுயநலம் இருக்கிறது;சுய       நலமற்ற நட்பு     என்பதே கிடையாது.இது கசப்பான உண்மை.

5)எந்த வேலையையும் தொடங்கும் முன் மூன்று கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்.  இதை ஏன் செய்கிறேன்?முடிவு என்னவாக இருக்கும்?    இதில் வெற்றி பெறுவேனா? உங்களுக்குத் திருப்தியான விடைகள் கிடைத்தால் பணியைத் தொடங்குங்கள்.

6)அச்சம் என்பது உங்களை அணுகும்போதே அதைத் தாக்கி அழித்து விடுங்கள்.

7)உலகின் மிகப்பெரிய சக்தி,இளமையும் ஒரு பெண்ணின் அழகுமே.

8)ஒருவன் தன் செயல்களினால் சிறப்படைகிறான்.பிறப்பினால் அல்ல.

9)பார்வை இல்லாதவனுக்கு ஒரு முகம்பார்க்கும் கண்ணாடி  எவ்வளவு பயனுள்ளதோ    அது  போன்றதே,ஒரு முட்டாளுக்குப்  புத்தகங்கள்.

10)உங்கள் குழந்தைக்கு முதல் ஐந்து ஆண்டுகள் செல்லம் கொடுங்கள், அடுத்த ஐந்து ஆண்டுகள் கண்டிப்புடன் வளருங்கள்.16 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள். அவர்கள்தான் உங்கள் சிறந்த நண்பர்கள்.

37 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா!அருமையான சாணக்கியப் பேச்சு!பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்! சாம்ராட் அசோகன் காட்சியில் சிவாஜி கணேசன். அதே போன்று நீண்ட அங்கியோடு சாணக்கியர் வேடத்தில் சென்னை பித்தன் அவர்கள், மேலே சொன்ன வாசகங்களை மேடையில் சொல்வது போல கற்பனை செய்து பார்த்தேன். சென்னை பித்தனின் குரலில் சாணக்கியன் சொல் கேளிர் !

    பதிலளிநீக்கு
  3. சாணக்கிய சிந்தனைகள் அனைத்தும் அருமை. அதிலும் 2வது... வைர வரிகள் என்றே ‌சொல்லலாம். பிரமாதம்!

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் பாஸ்
    காலையில் நல்ல ஒரு பதிவை படித்த உணர்வு பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. அருமையான சிந்தனைகளை கொடுத்திருக்கீங்க.நன்றி.

    பதிலளிநீக்கு
  6. பிரபா,
    என் நண்பர் அனுப்பிய மின்னஞ்சல் செய்தியின் தமிழாக்கமே இப்பதிவு. அவர் தெரிவித்த 15 கருத்துக்க ளிலிருந்து 10 ஐ மட்டும் தமிழாக்கித் தந்தேன்.இது தினத்தந்தியில் வெளி வந்ததா என எனக்குத் தெரியாது.நான் தினத்தந்தியும் படிப்பதில்லை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. பத்துக்குப் பத்தும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  8. சின்னப் பசங்களுக்கு செல்லம குடுத்தா ரொம்ப அடம் பன்னுரான்களே என்ன செய்ய?

    பதிலளிநீக்கு
  9. வாழ்விற்கு சிறந்த அறிவுரைகள் கூறும் சாணக்கிய
    மந்திரங்கள் ஐயா..
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. //என் நண்பர் அனுப்பிய மின்னஞ்சல் செய்தியின் தமிழாக்கமே இப்பதிவு. அவர் தெரிவித்த 15 கருத்துக்க ளிலிருந்து 10 ஐ மட்டும் தமிழாக்கித் தந்தேன்.//

    மீதி உள்ள ஐந்து கருத்துக்களையும் தமிழாக்கம் செய்து தந்திருக்கலாம். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  11. ஒருவன் தன் செயல்களினால் சிறப்படைகிறான்.பிறப்பினால் அல்ல.
    மிகச்சரியான உண்மைகள் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  12. நலமா தலைவா ?1 ,6 ,8 மிகவும் அருமை !

    பதிலளிநீக்கு
  13. @சக்தி கல்வி மையம்
    5 வயது வரைதானே!

    பதிலளிநீக்கு
  14. @koodal bala
    நலமே தம்பி.நீங்கள் நலமா?
    நன்றி.

    பதிலளிநீக்கு
  15. நல்ல
    கருத்து,
    கருத்து.
    கருத்து,
    கருத்து,
    கருத்து,
    கருத்து,
    கருத்து,
    கருத்து,
    கருத்து,
    கருத்து. வாசு

    பதிலளிநீக்கு
  16. சாணக்கிய சிந்தனைகள் அருமை...

    பதிலளிநீக்கு
  17. ஆஹா அமர்க்களம்
    பதிவுலக சாணக்கியருக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  18. 2ம்,5ம் நான் புதிதாக தங்களிடம் அறிந்து கொண்டவை! வலையேற்றத்திற்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு