தொடரும் தோழர்கள்

செவ்வாய், நவம்பர் 15, 2011

ஏழாம் அறிவும்,வேலாயுதமும்!

நான் எப்போதுமே கொஞ்சம் தாமதம்.


எனவேதான் ஏழாம் அறிவு ,வேலாயுதம் பற்றி எழுதுவதில் இவ்வளவு தாமதம்.


லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து விட்டேன்!


இதோ----




மனிதர்கள் ஆறிவு உள்ளவர்கள் என்று சொல்கிறோம்.

இந்த ஆறறிவுகள் எவை?

தொல்காப்பியர் சொல்கிறார்---

ஒன்றறிவு அதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடு செவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனனே”

மெய்,வாய்,மூக்கு,கண்,காது ஆகியவற்றோடு மனம் என்பதை ஆறாவது அறிவாகச் சொல்கிறார் தொல்காப்பியர்.

இதையே நாம் பகுத்தறிவு என்கிறோம்.

அப்படியானால் ஏழாம் அறிவு என்பது என்ன?

திரைப்படம் என்ன சொல்கிறது என்று எனக்குத் தெரியாது.நான் பார்க்க வில்லை
காலத்தைக் கடந்தது முக்காலமும் அறியும் திறன்தான் ஏழாம் அறிவா?

அக்காலத்தில் ஞானிகளுக்கு ஞான திருஷ்டி இருந்ததுஎன்று சொல்வார்களே அதுதான் ஏழாம் அறிவா?

அப்படியென்றால் அது வேண்டவே வேண்டாம்! வருவதைத் தெரிந்து கொண்டால் பிரச்சினைகள்தான் அதிகமாகும்.ஒரு படத்தில் மற்றவர் மனதில் இருப்பதை அறியும் சக்தி பெற்று விவேக் கஷ்டப்படுவாரே,அது போல.

வேண்டாம் ஏழாம் அறிவு!

ஏழாம் அறிவைப் பற்றிப் பேசி விட்டோம்.

இனி வேலாயுதம்.

சூரபத்மன் என்ற அசுரன் தேவர்களையெல்லம் துன்புறுத்தி,இந்திரனையும் சிறைப் படுத்தி விட்டான்.

அவனை அழிப்பதற்காக முருகன் உருவானான்.

முருகன் போருக்குச் செல்லும்போது,அன்னை பார்வதி முருகனிடம் ஒரு சக்தி வேல் கொடுத்தாள்,சூரனைக் கொல்லும் ஆயுதமாய்.அதுதான் வேலாயுதம்.

சூரனையே பிளந்த ஆயுதம் வேலாயுதம்!

காக்க காக்க கனக வேல் காக்க!

49 கருத்துகள்:

  1. ஏழாம் அறிவை வேண்டாம் என்கிறீர்கள்.மற்றவர் மனதில் இருப்பதை அறியவே மனிதன் விரும்புகிறான்.ஆனால் அடைந்துவிட்டால் கஷ்டம்தான்.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் கூறுவது போல் எழாவது அறிவு என்பது ஞான திருஷ்டியினை குறிக்குமானால் அது இல்லாமல் இருப்பது தான் சுவாரசியம் .. உலகை அளிக்க அணு ஆயிதங்கள் தேவை இல்லை .இந்த அறிவே போதும் .. நிற்க வேலாயுததில் நடிகர் விஜய்யின் ஆற்றலை பார்த்தல் அந்த முருகனே அவருக்கு அடிமை ஆகி இருப்பார் . இரு நூறு KM வேகத்தில் போகும் ஒரு ரயிலில் சிறுது காயம் படாமல் தாவ அந்த முருக கடவுளே தயங்கி இருப்பார் . petrol இல்ல ஒரு வண்டியினை ஓட்டத்தான் முருகனால் முடியுமா .. பாருங்கள் வேலாயுத்தினை . வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  3. நான் எங்கேயாவது போயி மலையில் இருந்து குதிக்கப்போறேன் விடுங்கய்யா என்னை....

    பதிலளிநீக்கு
  4. படம் விமர்சனம் சூப்பரா இருக்கும்னு வந்தா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    பதிலளிநீக்கு
  5. பித்தரே!
    தங்கள் விமர்சனம் தான்
    சரியானது!
    நன்றி ஐயா!
    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  6. திரைப்படம் என்ன சொல்கிறது என்று எனக்குத் தெரியாது.நான் பார்க்க வில்லை//எப்படி அய்யா இதெல்லாம்..

    பதிலளிநீக்கு
  7. முதலில் 6 அறிவோடு மனிதனாக வாழ முயற்சிப்போம்
    பிறகு 7வது அறிவைப் பற்றி சிந்திக்கலாம் என்பது என் கருத்து அன்பரே..

    பதிலளிநீக்கு
  8. பித்தரே
    தங்கள் விமர்சனமே
    மிகவும் சரியானது!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சென்னை பித்தரே..!

    ஆஹா ஒரு முடிவோடுதான் கிளம்பி இருக்கீங்க போல..

    நானும் ஏதோ படத்துக்குதான் விமர்சனம்ன்னு வந்தேங்க.. நல்லா பல்பு கொடுத்திட்டிங்க..

    பதிலளிநீக்கு
  10. ஆறாவது அறிவே பலருக்கு வேலை செய்வதில்லை . இதில் ஏழாவது அறிவா ?
    எப்படி எல்லாம் பதிவெழுத தங்களுக்கு ஐடியா கிடைக்கிறது. ?

    பதிலளிநீக்கு
  11. வெல்டன் தல... ஆனா ஒரு சின்ன மிஸ்டேக்...

    வேண்டாம் ஏழாம் அறிவு!
    சூரனையே பிளந்த ஆயுதம் வேலாயுதம்!

    அப்படின்னு ரெண்டு பதிவு போட்டிருக்கலாம்... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்....

    பதிலளிநீக்கு
  12. அண்ணே மீ பாவம் விட்ருங்க...சாமி முடியல ஹிஹி!

    பதிலளிநீக்கு
  13. படம் பார்க்காமலே, விமரிசனம் எழுத உங்களால் மட்டுமே முடியும்.

    பதிலளிநீக்கு
  14. தலைப்பைப் பார்ததுமே சந்தேகப்பட்டேன். நீங்கள் ‘அவை’களைப்பற்றி எழுதமாட்டீர்களே என்று! நான் நினைத்தது சரியே.

    மொக்கை என்ற பிரிவின் கீழே எழுதியிருந்தாலும் சொல்லப்பட்ட செய்திகள் சாரமானவையே. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. 7ம் அறிவு பற்றி உங்கள் கேள்விகள் சிறப்பு

    நானும் பட விமர்சனம் என்று வந்தேன் இப்படி பல்பு கொடுத்துட்டீங்களே

    பதிலளிநீக்கு
  16. பல்பு கொடுத்ததுக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  17. சார் உங்க விமர்சனம் புல்லரிக்குது. இப்படியே எல்லா படத்துக்கும் இனி எழுதுங்க...

    பதிலளிநீக்கு
  18. உனக்கெல்லாம் எதுக்கு இந்த வேலென்னு கலாய்க்கனும்னுதான் உள்ளே வந்தேன் வாத்யாரே!
    ஆனா தப்சிட்டேபா தப்சிட்டெ.

    பதிலளிநீக்கு
  19. என்ன ஒரு இனிய ஏமாற்றம்! மனிதன் மனிதமுடன் நடந்து கொண்டாலே போதும், எதற்கு ஏழாம் அறிவு என்ற முனைவரின் கருத்து சரியே... மிக ரசித்தேன் தங்கள் குறும்பை...

    பதிலளிநீக்கு
  20. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //நான் எங்கேயாவது போயி மலையில் இருந்து குதிக்கப்போறேன் விடுங்கய்யா என்னை....//
    இதைப் படிச்சுட்டு எனக்கு சிரிப்பை அடக்க முடியலே!ஹா,ஹா,ஹா.
    நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  21. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    // படம் விமர்சனம் சூப்பரா இருக்கும்னு வந்தா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....//
    :))

    பதிலளிநீக்கு
  22. @முனைவர்.இரா.குணசீலன்
    சரியே.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  23. @Philosophy Prabhakaran

    தெரியாமப் போச்சே!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  24. சத்தியமா சினிமாவை பற்றி இருக்காது என்று நம்பி வந்தேன் ...அப்படியே
    இருந்தது .....
    இந்த தலைப்பு எப்படி
    ஏழாம் அறிவும்,வேலாயுதமும்!காக்க காக்க தான் !

    இது எப்படி இருக்கு ஐயா .. பழையபடம் ஆனாலும்

    பதிலளிநீக்கு
  25. ஹா ஹா.. ஐயா உங்களுக்கு எட்டாம் அறிவு... அசத்திவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  26. ஏன் பாஸ்! எதுக்கு? எதுக்காக? :-)

    பதிலளிநீக்கு
  27. என்னது? அண்ணனுக்கே மைனஸா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  28. @ரியாஸ் அஹமது
    தலைப்பு சூப்பர்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  29. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    //என்னது? அண்ணனுக்கே மைனஸா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
    பெரிய பதிவர் ஆயிட்டேன் போல!
    நன்றி சிபி.

    பதிலளிநீக்கு
  30. அட சென்னை பித்தன் ஐயா சினிமா விமர்சனம் எழுதி இருக்கிறாரே எனப் பார்க்க வந்தால் இந்த போடு போட்டு இருக்கீங்களே....

    பதிலளிநீக்கு
  31. அட சென்னை பித்தன் ஐயா சினிமா விமர்சனம் எழுதி இருக்கிறாரே எனப் பார்க்க வந்தால் இந்த போடு போட்டு இருக்கீங்களே....

    பதிலளிநீக்கு
  32. வெங்கட் நாகராஜ் சொன்னது…

    //அட சென்னை பித்தன் ஐயா சினிமா விமர்சனம் எழுதி இருக்கிறாரே எனப் பார்க்க வந்தால் இந்த போடு போட்டு இருக்கீங்களே....//
    :) நன்றி வெங்கட்

    பதிலளிநீக்கு