தொடரும் தோழர்கள்

வெள்ளி, நவம்பர் 04, 2011

நிச்சயமா “அது” இல்லை!


ஒரு சிறு விளக்கம். ”துணை” முதல் பகுதிக்கு வந்த பின்னூட்டங்களைப் பார்க்கும்போது, நிறைய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருப்பதை உணர்கிறேன்.  இக் கதையில் , திருப்பங்களோ,’அது’ போன்ற சமாசாரங்களோ கிடையாது.நான் தொடரும் போட்ட காரணம் அதிகமாகத்  தட்ட முடியவில்லை என்பதுதான்.இது வாழ்க்கையின் அபத்தங்களைக்  கூறும் ஒரு கதை .அவ்வளவே!எனவே எதையும் எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்!


காலை முதல் கணினி தகராறு!திரையில் ’no signal input’  என்றே செய்தி வந்து கொண்டிருந்தது. பொறியாளரிடம் கூறினேன். மழைக்காலம் எனவே ram இல் ஈரம் படிந்திருக்கும்.துடைத்துப் போட்டால் சரியாகி விடலாம் என்று கூறி வருவதாகச் சொன்னார். நானே எடுத்துத் துணியால் துடைத்துப் போட்டேன். சரியாகவில்லை. பொறியாளர் வந்து  ram ஐ எடுத்து ரப்பரால் துடைத்து விட்டுப் போட்டார் .சரியாகி விட்டது!அவர் சரி செய்து விட்டுப் போகும்போது மணி மாலை 3.45.  மணி 4 முதல் 5 வரை மின்சாரம் துண்டிப்பு.5.30க்கு ஒரு  நிச்சயதார்த்தத்துக்குப் புறப்பட்டேன்.திரும்பி வீடு வந்து சேரும்போது மணி இரவு 8.இதற்கு மேல் யோசித்து,எண்ணங்களைச் சொற்களாகித் தட்டிப் பதிவேற்றுவதென்பது என்னால் இயலாத செயல். எனவே துணை நிறைவுப்பகுதி நாளைதான்.


முடிக்கும் முன் சில  சிந்தனைகள்---


1)பணம் மகிழ்ச்சியைத்தராது;ஆனால் ஒரு சைக்கிளின் மீது அமர்ந்து அழுவதை விட,ஒரு பென்ஸ் காரினுள் அமர்ந்து அழுவது வசதியாகத்தான் இருக்கும் !

2)உன் எதிரியை மன்னித்துவிடு:ஆனால் அந்த அயோக்யனின் பெயரை மறக்காதே!

3)கஷ்டத்தில் இருக்கும் ஒருவனுக்கு உதவி செய்;அவன் உன்னை நிச்சயம் நினைப்பான்,அவன் மீண்டும் கஷ்டப்படும்போது!

4)பலர் இன்னும் உயிருடன் இருக்கக்காரணம் –அவர்களைக் கொல்வது சட்டப்படி குற்றமாகும்!

5)மது எந்தப் பிரச்சினையையும் தீர்த்துவிடுவதில்லை;--பாலும்தான்!

47 கருத்துகள்:

  1. அடடா, இதுவே எதிர்பாராத திருப்பமா இருக்கே.. tomorrow

    பதிலளிநீக்கு
  2. அருமையான சிந்தனைத் துளிகள் ஐயா! நன்றி.

    பதிலளிநீக்கு
  3. முடிக்கும் முன் சில சிந்தனைகள்
    >>>
    அத்துனையும் முத்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் ஒரு தீர்க்கதரிசி பித்தரே!
    பலரின் மன ஓட்டத்தை புரிந்து கொள்
    கிற சக்தி தங்களிடம் உள்ளது
    நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  5. இது தான் ட்விஸ்ட் ...-:)

    பதிலளிநீக்கு
  6. சிந்தனைகள் அருமை.தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  7. சிலநேரங்களில் இந்தமாதிரி பிரச்சனைகள்
    வந்துவிடுவது சாதாரணம் தான்...
    நாளை வரை பொறுத்திருப்போம்...

    சிந்தனைத் துளிகள் அத்தனையும் அருமை ஐயா.....

    பதிலளிநீக்கு
  8. உன் எதிரியை மன்னித்துவிடு:ஆனால் அந்த அயோக்யனின் பெயரை மறக்காதே!//

    ஆமாம் தல கண்டிப்பா மறக்கக்கூடாது...

    பதிலளிநீக்கு
  9. பொன்மொழிகள் சூப்பரோ சூப்பர்ப் தல...!!!

    பதிலளிநீக்கு
  10. தமிழ் பத்து, இணைப்பு குடுத்துட்டேன் தல....

    பதிலளிநீக்கு
  11. சிந்தனைத் துளிகள் அருமை
    தொடர்ந்தால் மகிழ்வோம்
    த.ம 7

    பதிலளிநீக்கு
  12. கொஞ்சம் வித்தியாசமான சிந்தனைத் துளிகள் அருமை ஐயா .
    வாழ்த்துக்கள் .ஒரு சின்ன வேண்டுகோள் தமிழ் 10 ல் பாடல்பிரிவில் என் கவிதைகள் (என் கனவுக்களும்கூட )
    காத்திருக்கும் பகுதியில் (தமிழ் 10 இணைக்கும் முன் நான் வெளியிட்ட
    என் ஆரம்ப காலக் கவிதைகள் ) தொடராக இப்போது பிரசுரித்துள்ளேன் .முடிந்தவரை அவைகளுக்கு உங்கள் கருத்தினையும் ஓட்டுக்களையும் அளித்து என் ஆக்கங்கள் அனைவரையும் சென்றடைய உதவுமாறு அன்போடு
    கேட்டுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி ஐயா உங்கள் ஒத்துளைப்புகளிற்கு .

    பதிலளிநீக்கு
  13. சென்னை பித்தன் என்றாலே ‘புதுமை பித்தன்’ என் எல்லோருக்கும் தெரியும். எனவே உங்களிடமிருந்து எதிர்பாராததையே எதிர்பார்க்கிறேன். சிந்தனைக்கு விருந்தாக இருந்தது நீங்கள் முடிவில் தந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  14. ஆகா! எப்பேர்பட்ட சிந்தனை! அட்டகாசம் போங்க.

    பதிலளிநீக்கு
  15. suryajeeva சொன்னது…

    //அடடா, இதுவே எதிர்பாராத திருப்பமா இருக்கே.. tomorrow//
    இது மட்டும்தான்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  16. Yoga.S.FR கூறியது...

    //அருமையான சிந்தனைத் துளிகள் ஐயா! நன்றி.//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  17. ராஜி கூறியது...

    // முடிக்கும் முன் சில சிந்தனைகள்
    >>>
    அத்துனையும் முத்துக்கள் ஐயா//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  18. புலவர் சா இராமாநுசம் கூறியது...

    // நீங்கள் ஒரு தீர்க்கதரிசி பித்தரே!
    பலரின் மன ஓட்டத்தை புரிந்து கொள்
    கிற சக்தி தங்களிடம் உள்ளது
    நன்றி//

    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  19. ரெவெரி கூறியது...

    //இது தான் ட்விஸ்ட் ...-:)//
    இவ்வளவுதான் ட்விஸ்ட்!
    நன்றி ரெவெரி.

    பதிலளிநீக்கு
  20. shanmugavel கூறியது...

    // சிந்தனைகள் அருமை.தொடருங்கள்.//
    நன்றி சண்முகவேல்.

    பதிலளிநீக்கு
  21. மகேந்திரன் கூறியது...

    //சிலநேரங்களில் இந்தமாதிரி பிரச்சனைகள்
    வந்துவிடுவது சாதாரணம் தான்...
    நாளை வரை பொறுத்திருப்போம்...

    சிந்தனைத் துளிகள் அத்தனையும் அருமை ஐயா.....//

    நன்றி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு
  22. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    // நல்லதொரு பகிர்வு//
    நன்றி சிபி.

    பதிலளிநீக்கு
  23. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //உன் எதிரியை மன்னித்துவிடு:ஆனால் அந்த அயோக்யனின் பெயரை மறக்காதே!//

    ஆமாம் தல கண்டிப்பா மறக்கக்கூடாது...//
    ரைட்டு!

    பதிலளிநீக்கு
  24. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    // பொன்மொழிகள் சூப்பரோ சூப்பர்ப் தல...!!!//
    நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  25. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //தமிழ் பத்து, இணைப்பு குடுத்துட்டேன் தல....//
    பத்து நன்றி.

    பதிலளிநீக்கு
  26. Ramani கூறியது...

    //சிந்தனைத் துளிகள் அருமை
    தொடர்ந்தால் மகிழ்வோம்
    த.ம 7//
    தொடர்ந்து விடலாம்!
    நன்றி ரமணி.

    பதிலளிநீக்கு
  27. அம்பாளடியாள் கூறியது...

    //கொஞ்சம் வித்தியாசமான சிந்தனைத் துளிகள் அருமை ஐயா .
    வாழ்த்துக்கள் .ஒரு சின்ன வேண்டுகோள் தமிழ் 10 ல் பாடல்பிரிவில் என் கவிதைகள் (என் கனவுக்களும்கூட )
    காத்திருக்கும் பகுதியில் (தமிழ் 10 இணைக்கும் முன் நான் வெளியிட்ட
    என் ஆரம்ப காலக் கவிதைகள் ) தொடராக இப்போது பிரசுரித்துள்ளேன் .முடிந்தவரை அவைகளுக்கு உங்கள் கருத்தினையும் ஓட்டுக்களையும் அளித்து என் ஆக்கங்கள் அனைவரையும் சென்றடைய உதவுமாறு அன்போடு
    கேட்டுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி ஐயா உங்கள் ஒத்துளைப்புகளிற்கு .//
    கண்டிப்பாக!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வே.நடனசபாபதி கூறியது...

    // சென்னை பித்தன் என்றாலே ‘புதுமை பித்தன்’ என் எல்லோருக்கும் தெரியும். எனவே உங்களிடமிருந்து எதிர்பாராததையே எதிர்பார்க்கிறேன். சிந்தனைக்கு விருந்தாக இருந்தது நீங்கள் முடிவில் தந்தது. நன்றி.//
    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  29. அப்பாதுரை கூறியது...

    //ஆகா! எப்பேர்பட்ட சிந்தனை! அட்டகாசம் போங்க.//
    :) நன்றி அப்பாஜி.

    பதிலளிநீக்கு
  30. ஒரு தொடருக்கு எத்தனை இடையூறு ...

    பதிலளிநீக்கு
  31. இனிய காலை வணக்கம் ஐயா,
    கதையின் நிறைவுப் பகுதி வரும் நேரத்தில் இப்படிக் கோளாறு வந்து விட்டதே...

    நீங்கள் இறுதியில் கொடுத்திருக்கும் சிந்தனைகள் ஊடாக கதையின் முடிவினை கொஞ்சம் ஊகிக்க கூடியதாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  32. சிந்தனைத்துளிகள் அருமை ஜயா.....

    துணை இரண்டாம் பகுதியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கோம்

    பதிலளிநீக்கு
  33. சிந்தனைத் துளிகள் நன்று. நிச்சயமா “அது” இல்லை என்று சொன்னபிறகு என்ன நடந்ததோ என்ற எதிர்பார்ப்பு... :) அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  34. //)பணம் மகிழ்ச்சியைத்தராது;ஆனால் ஒரு சைக்கிளின் மீது அமர்ந்து அழுவதை விட,ஒரு பென்ஸ் காரினுள் அமர்ந்து அழுவது வசதியாகத்தான் இருக்கும் !


    //
    100 % உண்மை

    பதிலளிநீக்கு
  35. எதிர்மறை கருத்துக்களாக இருக்கிறேதே. ஆனாலும் சுவாரசியம்தான்.

    சைக்கிள் மீது உட்கார்ந்து அழுதால் ஏன் என்று கேட்க ஒரு ஆளாவது வருவார்கள். காருக்குள் உட்கார்ந்து அழுதால் ஏன் என்று டிரைவர் கூட கேட்க மாட்டான்.

    பதிலளிநீக்கு
  36. koodal bala சொன்னது…

    //ஒரு தொடருக்கு எத்தனை இடையூறு .//
    அதானே!எல்லாம் நேரம்!
    நன்றி பாலா.

    பதிலளிநீக்கு
  37. நிரூபன் கூறியது...

    //இனிய காலை வணக்கம் ஐயா,
    கதையின் நிறைவுப் பகுதி வரும் நேரத்தில் இப்படிக் கோளாறு வந்து விட்டதே...

    நீங்கள் இறுதியில் கொடுத்திருக்கும் சிந்தனைகள் ஊடாக கதையின் முடிவினை கொஞ்சம் ஊகிக்க கூடியதாக இருக்கிறது.//
    அப்படியா!பார்க்கலாம்.
    நன்றி நிரூபன்.

    பதிலளிநீக்கு
  38. K.s.s.Rajh கூறியது...

    // சிந்தனைத்துளிகள் அருமை ஜயா.....

    துணை இரண்டாம் பகுதியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கோம்//
    நன்றி ராஜா.

    பதிலளிநீக்கு
  39. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //சிந்தனைத் துளிகள் நன்று. நிச்சயமா “அது” இல்லை என்று சொன்னபிறகு என்ன நடந்ததோ என்ற எதிர்பார்ப்பு... :) அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்...//
    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  40. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    //)பணம் மகிழ்ச்சியைத்தராது;ஆனால் ஒரு சைக்கிளின் மீது அமர்ந்து அழுவதை விட,ஒரு பென்ஸ் காரினுள் அமர்ந்து அழுவது வசதியாகத்தான் இருக்கும் !


    //
    // 100 % உண்மை//
    நன்றி ராஜா.

    பதிலளிநீக்கு
  41. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    //இன்று என் வலையில்
    விஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு//
    ஓகே!

    பதிலளிநீக்கு
  42. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    // சிந்தனைகள் சிந்திக்க வைக்கின்றன..//
    நன்றி கருன்.

    பதிலளிநீக்கு
  43. பாலா கூறியது...

    //எதிர்மறை கருத்துக்களாக இருக்கிறேதே. ஆனாலும் சுவாரசியம்தான்.

    சைக்கிள் மீது உட்கார்ந்து அழுதால் ஏன் என்று கேட்க ஒரு ஆளாவது வருவார்கள். காருக்குள் உட்கார்ந்து அழுதால் ஏன் என்று டிரைவர் கூட கேட்க மாட்டான்.//
    கேட்டு என்ன செய்ய? வசதியாய் உட்கார்ந்து யாருக்கும் தெரியாமல் அழுவது பெட்டர் இல்லை?!
    நன்றி பாலா.

    பதிலளிநீக்கு