தொடரும் தோழர்கள்

செவ்வாய், அக்டோபர் 13, 2015

புறக்கணிக்கப் பட்ட பெண்கள்!



சாக்லெட் பெண்கள் என்ற கதையின் இறுதிப் பகுதியை 7 ஆம் தேதி வெளியிட்டேன்.

ஆனால் அப்பெண்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

என் சுய தம்பட்டத்தில்,சாக்லெட் பெண்கள் மறக்கப்பட்டு விட்டனர்!

முடிவு என்ன என்று யாருமே கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

மாலினிக்கு,சுமாவுக்கு,குழந்தை மைத்ரிக்கு நான் அநீதி இழைத்து விட்டதாக நினைக் கிறேன்.

யாரும் முடித்து வைக்க விழையாத நிலையில் கதையை நானே முடிக்க வேண்டியதாக இருக்கிறது

//இதற்குப் பல முடிவுகள் உள்ளன.

மகிழ்ச்சியான முடிவு;
சோகமான முடிவு;
நகைச்சுவையான முடிவு;
சட்ட பூர்வ முடிவுஇத்யாதி இத்யாதி!//

இது பதிவில் நான் சொன்னது.

முடிவுகள் ஒவ்வொன்றாக வரும்!

முதல் முடிவு என்று?

அடுத்த வாரம்?!
 

எதற்கும்  இன்னொரு முறை படித்து விடுங்களேன்.

 

14 கருத்துகள்:

  1. உண்மையில் அந்த கதையில் முடிவு என்ன என்று எனக்கு புரியாத நிலையில் தான் நான் இருந்தேன். அதற்கேற்பவே பின்னூட்டம் இட்டேன். முடிவுகளை படிக்க ஆவலாக உள்ளேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிக்க உங்களால் முடியும்.
      நன்றி

      நீக்கு
    2. முடிக்க உங்களால் முடியும்.
      நன்றி

      நீக்கு
    3. அய்யா நான் அன்றே சொன்னேன் எதிர்பார்த்த முடிவை படக்கென்று முடித்துவிட்டீர்கள் மத்த முடிவுகளை தாங்களே எழுதுங்கள் என்று??? நன்றி

      முதல் முடிவு இன்னும் ஒரு வாரமா????

      நீக்கு
  2. முடிவுக்கு இன்னும் ஒரு வாரமா ?

    பதிலளிநீக்கு
  3. ஐயா. கதையை முக்கால் வாசி எழுதிவிட்டேன். அனேகமாக நாளை மாலை பதிவிடுவேன். பொறுத்தருள்க.

    பதிலளிநீக்கு
  4. முடிவுகளில் பலவகை இருக்கலாம். பாத்திரங்கள் சரியாக விளக்கப் படாததால் மாலினியின் கணவனுக்குக் குழந்தைகள் மீது ப்ரியம் உண்டா போன்ற விவரங்களும் சொல்லப் படவில்லை.

    1. அந்த சாக்லேட் பெட்டியே ஏதோ ஒருவகையில் அந்தக் குழந்தைக்கே மதன்லால் வாங்கி வைத்திருக்கக் கூடும்.

    2. ஏதாவது ரகசிய வியாபாரமாயிருந்தால் போலீஸ் வந்து இங்கு தேடும்போது கிடைக்காமல் மதன்லாளுக்கு நல்ல பெயர். அதனாலேயே மதன்லால் திருந்துதல்!

    3. அது போதை பொருளாகவோ, விஷமாகவோ இருந்தால் சோக முடிவு.

    4. ஏற்கெனவே திறந்திருப்பதால் அதை குழந்தை சாப்பிட வேண்டாம் என சுமா நிராகரித்து, அதனால் ஆபத்திலிருந்து தப்பக் கூடும்.

    5. மதன்லால் கடைசி நேரத்தில் இதைத் தெரிந்து கொண்டு, நல்ல சாக்லேட் வாங்கி வந்து கொடுத்து இதைத் தெரிம்பப் பெற்றுச் செல்லலாம்!

    :)))))))))))))

    பதிலளிநீக்கு
  5. சுரேஷ் ஒரு வகை அழகான முடிவு கொடுத்திருந்தார் வாசித்தோம்..உங்கள் முடிவை அறிய வேண்டும்

    பதிலளிநீக்கு