தொடரும் தோழர்கள்

செவ்வாய், மார்ச் 27, 2012

காலத்துக்குக் காலம் கொடுங்கள்!


@காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றவல்லது.காலத்துக்குக் கொஞ்சம்  காலம் கொடுங்கள், செயலாற்றுவதற்கு.

@எல்லா விவாதங்களையும் வெல்ல வேண்டும் என்பதில்லை. உடன் பாடின்மைக்கும் உடன்படத் தெரிந்து கொள்ளுங்கள்.

@ஒவ்வொரு இரவும் படுக்கப் போகும் முன்  கீழ்க்கண்ட வாக்கியங் களை   முழுமையாக்குங்கள்

1.நான் இறைவனுக்கு (இதற்காக) நன்றி செலுத்துகிறேன்.

2.இன்று நான் (இச்செயலைச்) சாதித்தேன்.

@ஒவ்வொரு நாளும் காலை எழுந்ததும்  இந்த வாக்கியத்தை முழுமை யாக்குங்கள்
    *இன்று நான் செய்ய வேண்டியது  (இது)...........”

@மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என நினைப்பது உங்கள் வேலையல்ல.

@நிலைமை எவ்வளவு நல்லதாகவோ/மோசமானதாகவோ இருந்தாலும், அதுவும்  மாறும்

@வாழ்க்கை என்பது ஒரு பள்ளிக்கூடம்.நீங்கள் அதில் பயில வந்திருக் கிறீர்கள்.தேர்வுகளில் வெற்றி பெறுங்கள்.பிரச்சினைகள் பாடத் திட்டத்தின் பகுதியே.அவை வகுப்புகள் போல் வந்து போகும் .ஆனால் கற்றுக்கொண்டவை உங்களுடன் நிற்கும்.

@உங்களது மகிழ்ச்சி உங்கள் கையில்தான் இருக்கிறது.மற்றவர்களிடம் இல்லை.

@உங்கள் வாழ்க்கையை மற்றவர் வாழ்க்கையோடு ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணம் எதை நோக்கி என்பது உங்களுக்குத் தெரியாது.

@வாழும் நாள் கொஞ்சமே.அதில் பிறரை வெறுப்பதற்குச் செலவிட நேரமேது?

@அனைத்திலும் சிறந்தது  இனிமேல்தான் வர இருக்கிறது....நம்புங்கள்

42 கருத்துகள்:

  1. மிகவும் நல்ல அறிவுரைகள், ஐயா.
    பகிர்வுக்கு பாராட்டுக்கள், நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல கருத்துக்கள் அய்யா

    பதிலளிநீக்கு
  3. அனைத்திலும் சிறந்தது இனிமேல்தான் வர இருக்கிறது. -இந்த நம்பிக்கையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மனதைத் தொட்ட விஷயங்கள். நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  4. நல்ல கருத்துக்கள்..... பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அனைத்திலும் சிறந்தது இனிமேல்தான் வர இருக்கிறது....நம்புங்கள் என்ற முத்தாய்ப்பான கருத்தே அனைத்தைவிடவும் சிறப்பானது என்பது என் கருத்து.
    நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. if u dont love the person u see,
    then how u will love the god whome u dont see?
    ...mother theresa

    பதிலளிநீக்கு
  7. #@எல்லா விவாதங்களையும் வெல்ல வேண்டும் என்பதில்லை. உடன் பாடின்மைக்கும் உடன்படத் தெரிந்து கொள்ளுங்கள்.#

    அழகான அருமையான கருத்து அய்யா...இதன்படி நடக்க தொடங்கினால் பெரும்பாலான ஈகோக்கள் முடிவுக்கு வந்துவிடும்...

    பதிலளிநீக்கு
  8. ஆஹா தல'ன்னா சும்மாவா கருத்துகள் சும்மா சுருக் சுருக்குன்னு இருக்கு...!!!

    பதிலளிநீக்கு
  9. செப்பிட வார்த்தை யில்லை
    சித்தரா! பித்தரா! உமக்கு
    ஓப்பிட உவமை யில்லை
    உரைத்திட ஏதுயெல்லை

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  10. //அனைத்திலும் சிறந்தது இனிமேல்தான் வர இருக்கிறது....நம்புங்கள்//

    அருமை.

    பதிலளிநீக்கு
  11. @நிலைமை எவ்வளவு நல்லதாகவோ/மோசமானதாகவோ இருந்தாலும், அதுவும் மாறும் //
    அனைத்து கருத்துக்களுமே முத்தானவை .

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ஐயா, நீண்ட நாளின் பின்னர் ப்ளாக் பக்கம் வந்திருக்கேன். நல்லா இருக்கிறீங்களா?

    நாளைய பொழுதை நன் நாளாக ஆரம்பிக்க ஏற்ற அருமையான கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறீங்க. ரொம்ப நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  13. நல்ல பல கருத்துகள். பகிர்வுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  14. உங்கள் வருகை கண்டு மிக மகிழ்ச்சியடைந்தேன். நலந்தானே நிரூ?
    நன்றி

    பதிலளிநீக்கு
  15. நெறிப்படுத்தும் பதிவு. தினமும் புத்துணர்வுகளை மனிதர்களையும்,. மாறுபாடுகள் நிறைந்த அவரது மனங்களை எதிர்கொள்ளவும் நிச்சயம் வழிகாட்டும் வார்த்தைகளை பகிர்ந்துள்ளீர்கள் நன்றி..

    பதிலளிநீக்கு
  16. சென்னை பித்தன் அல்ல நீங்கள் பதிவுலக சித்தன்..

    பதிலளிநீக்கு
  17. //உங்கள் வாழ்க்கையை மற்றவர் வாழ்க்கையோடு ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணம் எதை நோக்கி என்பது உங்களுக்குத் தெரியாது.//

    - எனக்குப் பிடித்த வரிகள். ஆனாலும் அத்தனையும் அருமை. வைர வரிகள் முழுதும். நச்...நச்...வரிகள்...! கலக்குறிங்க.

    பதிலளிநீக்கு