தொடரும் தோழர்கள்

வெள்ளி, மார்ச் 16, 2012

காதல்-திருக்குறள் கதை-நிறைவுப் பகுதி

அவர்கள் இருவரும் கைகோத்தபடி,ஹாலுக்குள் நுழைந்தனர். அவனுக்கும் ஓவியத்தில் விருப்பமும் சிறிது புரிதலும் இருந்தாலும்,  அவள் ஒவ்வொரு ஒவியத்தின் முன் நின்று அதை விமரிசித்த பாங்கைக் கண்டு வியந்தான்.ஒரு ஓவியத்தின் முன் நின்று”வாவ்,இளங்கோவின் ஒவியம்;வண்ணங்களை அவர் கையாளும் விதத்தை பாருங்கள் அஸ்வின்!” என்று வியந்து பாராட்டும்போதே அருகில் வந்து நின்ற மனிதர் அவளைப் பார்த்து”ஹலோ காயத்ரி” என்றழைக்க,”மிஸ்டர் இளங்கோ! எப்படியிருக்கீங்க.! இவர் என் நண்பர் அஸ்வின் குமார்—அஸ்வின்,மிஸ்டர் இளங்கோ” என்று அறிமுகம் செய்து வைத்து விட்டு,”இப்போதுதான் உங்கள் ஒவியத்தின் சிறப்புப் பற்றி அஸ்வினிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்”என்றாள்.

”ஹலோ” என்றவாறு கைகுலுக்கிய அவர் காயத்ரியிடம் சொன்னார்”இன்றுதான் உங்களை ஒரு கண்காட்சியில், தனியாகவின்றி, ஒரு துணையுடன் பார்க்கிறேன்..மிக விசேஷமான நண்பர் என நினைக்கிறேன்”காயத்ரியின் கன்னம் வெட்கத்தால் சிவந்தது போல் குமாருக்குத் தோன்றியது. ஒவியங்களை ரசியுங்கள் என்று சொல்லி அவர் சென்று விட்டார்.

அவர்கள் கண்காட்சியை முழுதும் இரு முறை சுற்றி வந்தனர். வெளியே வந்து மதிய உணவு அருந்தினர்.அப்போது அவளையே  பார்த்துக் கொண்டிருந்தான்.
 

”நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக்
குறுமுறுவல் பதித்த முகம்
தரளம் மிடைந்து ஒளி தவழக் குடைந்து இரு
பவளம் பதித்த இதழ் ”
என்ற நா.பா.வின் வரிகள் மனதில் ஓடின.
 

அவளது அழகு அவனைப் பேச்சற்றவனாக ஆக்கியது.அதே நேரம் ஒரு பெண் அவர்களைகடந்து செல்லும்போது அவனைப் பார்த்துக் கொண்டே சென்றாள்.காயத்ரி சிறிது பொய்க் கோபத்துடன் கேட்டாள்”என்ன, அவளைப் பார்த்ததும் பேச்சே வரவில்லையோ?’

” நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்

யாருள்ளி நோக்கினீர் என்று ”

(அவளுடைய அழகை நினைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும்,யாரை நினத்து ஒப்புமையாக என்னைப் பார்க்கிறீர் என்று சினம் கொள்வாள்). 


அவளிடம் கெஞ்சி,கொஞ்சி, தணிந்து, பணிந்து அவளது ஊடலை நீக்க வேண்டியதாயிற்று.


இப்படியாக அவர்கள் காதல் வளர்ந்தது.ஒரு கட்டத்தில் இனி திருமணத்தை தள்ளிப் போடக் கூடாது என்று முடிவு செய்தவர்கள் அதற்கான முயற்சியில் இறங்கினர்.எந்த வித எதிர்ப்பும் இடையூறுமின்றி திருமணம் நடந்தேறியது.

முதல் இரவு—
அத்தனை நாட்கள் வெறும் கைகளின் தொடுகையில் மட்டுமே இருந்த அவர்களுக்கு உரிமம் வழங்கப் பட்டு விட்டது.
 

அவர்கள் தழுவிக் கொண்டனர்.ஒருவருக்குள் ஒருவர் புதைந்து போக வேண்டும் என நினைப்பது போன்ற ஒரு தழுவல்.இதய உணர்வுகளுக்கு வடிகாலே போன்ற தழுவல்.அதில் வெறும் காமம் இல்லை.அளவற்ற காதல் இருந்தது.

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.”
(காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்)

அவள் முகத்தை அவன் முகம் நெருங்கியது.இதழ்களை இதழ்கள் நெருங்கின.

“ஆரஞ்சுத் தேன்சுளையா !

அங்கென்ன தத்தையொன்று
கூரலகால் கொத்திவந்த
கோவையா- யார்தான்
பவளத்தைக் கீறிவைத்தார்
பார்ப்போம் ! அடடா
அவளின் இதழா
அவை.
(நன்றி,சிவகுமாரன்)
.............
இணைந்தன...

“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.”
(மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர்,பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.)

இனி அங்கு இருப்பது நாகரிகமில்லை.
 

அவர்கள் இனிதே வாழ வாழ்த்தி விடை பெறுவோம். 

(இனி இல்லறம்  என்ற நல்லறம் ஆரம்பம்.அதையும் வள்ளுவர் காட்டிய வழியில் வாழ்வார்களா?!)

30 கருத்துகள்:

  1. விளக்கம் அருமை தல, கண்டிப்பாக வள்ளுவர் காட்டும் வழியில் வாழ்வார்கள்...!

    பதிலளிநீக்கு
  2. காதல் குறித்த கண்ணிய பகிர்வு.

    பதிலளிநீக்கு
  3. வாழும் நெறி உரைத்த வள்ளுவனின் குறள் படி வாழ்வாங்கு வாழட்டும் என்று அவர்களையும், பல குறள்களைத் தொடுத்து மாலையாய் கதை என்னும் நாரில் கட்டித் தந்த உங்களையும் மனம் நிறைந்து வாழ்த்துகின்றேன் யான்.

    பதிலளிநீக்கு
  4. இலக்கிய நயத்தோடு கூடிய கதையை எவ்வளவு முறை படித்தாலும் அலுக்காது என்பது உண்மை என்பதை உங்கள் பதிவு மூலம் தெரிந்துகொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அழகான புதிய நடையில் விளக்கம்

    பதிலளிநீக்கு
  6. //அவளது அழகு அவனைப் பேச்சற்றவனாக ஆக்கியது.அதே நேரம் ஒரு பெண் அவர்களைகடந்து செல்லும்போது அவனைப் பார்த்துக் கொண்டே சென்றாள்.காயத்ரி சிறிது பொய்க் கோபத்துடன் கேட்டாள்”என்ன, அவளைப் பார்த்ததும் பேச்சே வரவில்லையோ?’//

    மிகவும் யதார்த்தமான உரையாடல்.

    நல்ல சுபமான முடிவு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. ஒவ்வொருவரின் உள்ளே உள்ள இள வயது காதல் அனுபவத்தை தட்டி எழுப்பி அந்தக் காலத்திற்கே கொண்டு சென்று விட்டது உங்களின் நான்கு பதிவுகளும். மிக மிக அருமையாக அனுபவத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் உணர்வுகளை எழுத்துக்களின் மூலம் கொண்டு வந்து இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.

    இருந்தபோதிலும், நீங்கள் கேட்டிருக்கும் //அதையும் வள்ளுவர் காட்டிய வழியில் வாழ்வார்களா?!) // என்ற கேள்வி சாதரணமாகத் தோன்றவில்லை, இதிலும் ஏதோ ஒரு செய்தி இருப்பது ஒளிந்து கொண்டிருப்பது நன்றாகவே தெரிகிறது.

    ஏனெனில், மிகப்பெரும்பான்மயான காதலர்களின் மத்தியில் காதலின் போது உள்ள ஒரு ஈடுபாடு கல்யாணம் என்ற எதார்த்த வாழ்விற்கு பின்னால், குடும்பத்துடன் சேர்ந்து வாழும்பொழுது சிறுக சிறுக மறைந்து விடுகிறது. எனது நண்பர்களின் வாழ்வில் நான் கண்களால் கண்டது இது. ஒரு சிலர் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  8. அகரத்தில் தொடங்கிய வள்ளுவனை சிகரத்தில் ஏற்றி வைத்த பதிவு அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  9. மிகவும் ரசித்தேன். குறளிணைப்பு இயல்பாக இருந்தது. சிவகுமாரன் எழுதிய கவிதை குறளை விட ஒரு படி மேல்.

    பதிலளிநீக்கு
  10. கதை முடியலாம்!காதல் முடிவதில்லை!
    பாடலின் கருத்தை கதையொடு
    பின்னி சுவை மிகத்தந்தீர்!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்! இடைவேளை விட்டு இறுதியில் சுபம் போட்டு விட்டீர்கள். நல்லது.

    பதிலளிநீக்கு
  12. @Syed Ibramsha
    அந்தக்கேள்வியை எழுப்பியபோது என் மனதில் இருந்த எண்ணத்தை அப்படியே சொல்லி விட்டீர்கள். சரியான புரிதல்,விட்டுக் கொடுத்தல் ,அனுசரித்துப்போதல் இவையெல்லாம் இல்லை யென்றால்,காதல் வென்றும் கல்யாணம்
    தோற்றுப்போகும்.அதுவும் இவர்கள் இருவரும் அழுத்தம் மிகுந்த மென்பொருள் துறையில் பணி புரிகிறார்கள்.பார்க்கலாம்.
    நன்றி

    பதிலளிநீக்கு
  13. "காதல்-திருக்குறள் கதை-நிறைவுப் பகுதி"

    சுபமங்கள நிறைவுக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  14. "காதல்-திருக்குறள் கதை-நிறைவுப் பகுதி"

    சுபமங்கள நிறைவுக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு