தொடரும் தோழர்கள்

புதன், மார்ச் 28, 2012

தவறுகளின் தொகுப்பு என்ன செய்யும்?


@தவறுகள் நடக்கும்போது வேதனை ஏற்படுத்தும்;ஆனால் சில ஆண்டுகளுக்குப் பின் அத்தவறுகளின் தொகுப்பான அனுபவம் எனப்படுவது நம்மை வெற்றிக்கு இட்டுச் செல்லும்.

@வாழ்க்கை பல விதங்களில் பதில் தருகிறது.உங்களுக்குச் சரி என்று சொல்லி நீங்கள் விரும்புவதைத்  தருகிறது.இல்லை என்று சொல்லி அதை  விடச் சிறந்ததை அளிக்கிறது.    காத்திரு என்று சொல்லி அனைத்திலும் சிறந்ததை அளிக்கிறது.

@எல்லோருக்கும் எல்லாமே கிடைப்பதில்லை.அதுவே வாழ்க்கைச் சட்டம். உங்களுடையதல்லாததை அடைய முயலாதீர்கள்.ஆனால் உங்களுடையது எதையும்  இழக்கத் துணியாதீர்கள்!

@வாழ்க்கையில் தோல்வியடையும் மனிதர்கள் இரு விதம்.---
        யார் சொல்வதையும் கேட்காதவர்கள்
        யார் சொன்னாலும் கேட்பவர்கள்!

@புன்னகை என்ற வளைவு  பல விஷயங்களை நேராக்க உதவும்.

@நீங்கள் சரியாய் நடந்தால் யாரும் அதை நினைவில் வைப்பதில்லை
நீங்கள் தவறாக நடந்தால் யாரும் அதை மறப்பதில்லை.

பூட்டு செய்பவர்கள் சாவியில்லாத  பூட்டு செய்வதில்லை;கடவுளும் தீர்வு இல்லாத பிரச்சினைகளை உருவாக்குவதில்லை.தேடுங்கள்.சாவி கிடைக்கும்!

ஒரு நாளில் இரண்டு பேரையாவது மகிழ்ச்சியடையச் செய்யுங்கள். அதில் ஒருவர் நீங்களாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.

நீங்கள் ஏழையாகப் பிறந்தால் உங்கள் தவறல்ல.ஆனால் நீங்கள் ஏழையாகவே இறந்தால் அது உங்கள் தவறே  (பில்ல் கேட்ஸ்)

வாழ்க்கையில் எதையும் எவரிடமிருந்தும் எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்த்தது  கிடைக்க வில்லையெனில் வருத்தம் ஏற்படும். எதிர்பாராதது கிடைத்தால் மகிழ்ச்சி மிகும்.உங்கள் கடமையைச் செய்யுங்கள்.மீதியைக் கடவுளிடம் விட்டு விடுங்கள்..


46 கருத்துகள்:

  1. தொடருங்கள் உங்கள் நல்லவை த்வீட்சை @@@@@

    பதிலளிநீக்கு
  2. அத்தனையும் முத்துக்கள். அற்புத அனுபவ மொழிகள். பகிர்வுக்கு நன்றி.

    என்னைக் கவர்ந்த மொழி:

    //வாழ்க்கை பல விதங்களில் பதில் தருகிறது.உங்களுக்குச் சரி என்று சொல்லி நீங்கள் விரும்புவதைத் தருகிறது.இல்லை என்று சொல்லி அதை விடச் சிறந்ததை அளிக்கிறது. காத்திரு என்று சொல்லி அனைத்திலும் சிறந்ததை அளிக்கிறது.//

    பதிலளிநீக்கு
  3. அறிவுரைகள் அனைத்துமே அருமையானவை.

    //வாழ்க்கையில் எதையும் எவரிடமிருந்தும் எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்த்தது கிடைக்க வில்லையெனில் வருத்தம் ஏற்படும். எதிர்பாராதது கிடைத்தால் மகிழ்ச்சி மிகும்.உங்கள் கடமையைச் செய்யுங்கள்.மீதியைக் கடவுளிடம் விட்டு விடுங்கள்..//

    OK OK Understood. Thank you Sir.

    பதிலளிநீக்கு
  4. யதார்த்தமான உண்மைகள் அய்யா சூப்பர்

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்!
    // பூட்டு செய்பவர்கள் சாவியில்லாத பூட்டு செய்வதில்லை ; கடவுளும் தீர்வு இல்லாத பிரச்சினைகளை உருவாக்குவதில்லை. தேடுங்கள் சாவி கிடைக்கும் //
    நவீன உலகில் நல்ல சித்தாந்தம்

    பதிலளிநீக்கு
  6. araumai !
    arumai !
    nalla thokuppau!

    ungal vaazhvin anuapavangal-
    pesukirathu!

    பதிலளிநீக்கு
  7. எதைச் சொல்ல... எதை விட! எல்லாக் கருத்துக்களுமே ரத்தினங்கள்தாம்! பகிர்ந்த தங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் ஏழையாகப் பிறந்தால் உங்கள் தவறல்ல.ஆனால் நீங்கள் ஏழையாகவே இறந்தால் அது உங்கள் தவறே (பில்ல் கேட்ஸ்)

    >>>>>
    இதுதானே டாப்பு..இதை தான் நானும் முயன்று கொண்டு இருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  9. நீங்கள் சரியாய் நடந்தால் யாரும் அதை நினைவில் வைப்பதில்லை
    நீங்கள் தவறாக நடந்தால் யாரும் அதை மறப்பதில்லை.

    சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள் ஐயா..

    பதிலளிநீக்கு
  10. எல்லாமே எங்களுக்கான அறிவுரைகள்....மிக்க நன்றி!

    @போட்டிருக்கிங்க டுவிட்டினிங்களா?

    பதிலளிநீக்கு
  11. #@புன்னகை என்ற வளைவு பல விஷயங்களை நேராக்க உதவும்.#
    ரொம்ப டாப்பு....அனைத்தும் அருமை அய்யா...

    பதிலளிநீக்கு
  12. பிரிண்ட் எடுத்து முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒட்டிவைத்துவிட்டேன்.
    நல்ல விஷயத்தை மனதில் பதியவைத்ததற்கு நன்றிகளைய்யா!

    பதிலளிநீக்கு
  13. @ரெவரி
    சும்மா @ போட்டேன்..நான் ட்வீட்டுவதே இல்லை

    பதிலளிநீக்கு
  14. எதை விடுவது, அனைத்துமே அருமையாக இருக்கும் பொழுது!!!!

    பதிலளிநீக்கு
  15. வீடு K.S.சுரேஸ்குமார் கூறியது...

    // எல்லாமே எங்களுக்கான அறிவுரைகள்....மிக்க நன்றி!

    @போட்டிருக்கிங்க டுவிட்டினிங்களா?//
    இல்லை சுரேஸ்குமார்.சும்மா @ போட்டேன்.(@போட்டா ட்வீட்னு அர்த்தமா?!)

    பதிலளிநீக்கு
  16. கருத்துக்கள் அனைத்தும் முத்துகள் தான் ஆனால் எனக்குப்பிடித்தது.

    // வாழ்க்கையில் தோல்வியடையும் மனிதர்கள் இரு விதம்.---
    யார் சொல்வதையும் கேட்காதவர்கள்
    யார் சொன்னாலும் கேட்பவர்கள்!//

    நல்ல கருத்தை தந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் ஐயா,
    நீண்ட நாள் விடுமுறையின் பின்னர் வந்தேன்.

    டெம்பிளேட் எல்லாம் கலக்கலா இருக்கு.

    பதிவு பற்றி அடுத்த பின்னூட்டத்தில் சொல்றேன்

    பதிலளிநீக்கு
  18. வாழ்வை மேம்படுத்த உதவும் அருமையான பொன் மொழிகளைத் தொகுத்திருக்கிறீங்க.

    உங்களைப் போன்ற பெரியோர்கள் பதிவுகளில் நல் மொழிகளை அனுபவம் வாயிலாக உருவாக்கிப் பகிர்வது தான் எம் போன்ற சிறியோருக்கு வழிகாட்டியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  19. வாழ்க்கையில் எதையும் எவரிடமிருந்தும் எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்த்தது கிடைக்க வில்லையெனில் வருத்தம் ஏற்படும். எதிர்பாராதது கிடைத்தால் மகிழ்ச்சி மிகும் .// அற்ப்புதமான வரிகள் . அனைத்தும் சிறப்பு .

    பதிலளிநீக்கு
  20. நீங்கள் கூறிய கடைசி நான்கு வரிகளைத்தான் சார் நான் பின்பற்றி வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  21. \\\பூட்டு செய்பவர்கள் சாவியில்லாத பூட்டு செய்வதில்லை;கடவுளும் தீர்வு இல்லாத பிரச்சினைகளை உருவாக்குவதில்லை.தேடுங்கள்.சாவி கிடைக்கும்!\\\ பொன்மொழி !

    பதிலளிநீக்கு
  22. அத்தனையுமே அருமையான நல் முத்துகள்.

    பதிலளிநீக்கு
  23. ஐயா நீங்க மகிழ்ச்சியாவே இருப்பதன் ரகசியம் புரியுது .

    பதிலளிநீக்கு
  24. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிரூ!

    பதிலளிநீக்கு