தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜூலை 07, 2015

முத்தத்தில் என்னதான் இருக்கிறது?!



முத்தம்!!

சொல்லும்போதே,கேட்கும்போதே,நினைக்கும்போதே மனசெல்லாம் ஒரு மகிழ்ச்சியை, உடலெல்லாம் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும் ஒரு சொல். நாம் முத்தம் என்றவுடன் நினைப்பது உதடுகள் இணையும் முத்தத்தையே.ஆனால் முத்தத்தில் எத்தனை வகை?

பாசத்தின் வெளிப்பாடாக நெற்றியின் உச்சியில் இடும் முத்தம்.

குழந்தையை அணைத்துக் கன்னத்தில் இடும் முத்தம்.(கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி)

ஒரு மரியாதைக்காகக் கையில் இடும் முத்தம்.(இங்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. மங்களூரில் ஒரு கிறித்துவ நண்பரின் திருமணத்துக்கு சர்ச்சுக்குப் போயிருந்தோம்.திருமணம் முடிந்ததும் அனைவரும் மணப்பெண்ணின் கையில் முத்தமிட்டனர்.நாங்களும்தான்.எங்கள் நண்பர் ஒருவர் நேரம் கழித்து வந்தார்.நாங்கள் சொன்னதைக் கேட்டு மிஸ், பண்ணி விட்டேனே என்று வருத்தப்பட்டார்!)

முன்பெல்லாம் ஆங்கிலப் படங்களில்தான் முத்தத்தைப் பார்க்க முடியும்.ஆனால் இப்போதெல்லாம் தமிழ்ப் படங்களிலும் அவ்வப்போது முத்தத்தைப் பார்க்க முடிகிறது-உபயம்-உலகநாயகன்.

அப்படி என்னதான் இருக்கிறது இந்த முத்தத்தில்?அதன் சுவை என்ன?

வள்ளுவர் சொல்கிறார்---

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.

மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர்,பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும் (டாக்டர்.மு.வ.-உரை).

நான் ரசித்த சிவகுமாரனின் கவிதை ஒன்று

“ஆரஞ்சுத் தேன்சுளையா !
அங்கென்ன தத்தையொன்று
கூரலகால் கொத்திவந்த
கோவையா- யார்தான்
பவளத்தைக் கீறிவைத்தார்
பார்ப்போம் ! அடடா
அவளின் இதழா
அவை.

இப்படியிருந்தால் சுவைக்காமல் இருக்க முடியுமா?


முடிப்பதற்கு என் பழைய கவிதை ஒன்றிலிருந்து சில வரிகள்,இதழின் பெருமை பேசுபவை!

//என்னிடம் இருக்கும் செல்வங்கள் ஏராளம்
அடைந்தவை சில,அபகரித்தவை சில
அனைத்துமே விலை மதிப்பற்றவை
பார்த்தால் நீங்கள் சிரிப்பீர்கள்
அதன் மதிப்புத் தெரியாத காரணத்தால்
பார்க்கலாம் வாருங்கள்.
இதோ இப்பெட்டியில் பட்டுத்துணியில்
படுத்திருக்கும் இந்த ஸ்பூன்.
ஐஸ்க்ரீம் பார்லரில் ஆட்டையைப் போட்டது.
ஐஸ்க்ரீமைத் துளிதுளியாய் அவளெடுத்து
செம்பவள இதழ் திறந்து உண்ணும்போது
அவள் உதட்டில் உரசும் பாக்கியம் பெற்றது.
இன்றைக்கும் அவள் இதழின் இனிமை
இதை விட்டு நீங்கவில்லை!
இந்த டம்ப்ளரில் எழுதியிருக்கிறது
சாந்தி விஹாரில்  திருடப்பட்டதென்று
சாயம் பூசாமலே சிவந்திருக்கும்
அவள் உதடுகள் தழுவிய சுகம் கண்டவை.
வேறு யார் உதடும் இதில் படக்கூடாது.
எனவே நான் எடுத்து வந்து விட்டேன்.
அந்தக் கசங்கிய டிஷ்யூக் காகிதம்!
சாப்பிட்ட பின் நளினமாய் அவள்
இதழொற்றிக்  கசக்கியெறிந்த  காகிதம்
சட்டைப் பையில் வைத்து எடுத்து வரும்போது
அவள் இதழ் என் மார்பில் பதிவதாய் உணர்ந்த நாள்.//

எல்லா இளைஞர்களுக்கும்  இந்த முதிய இளைஞனின் முத்த தின வாழ்த்துகள்! 

(முத்தத்துக்கு என்று தனியாக ஒரு தினம் வேண்டுமா என்ன!)

21 கருத்துகள்:

  1. தமிழ்மண முதலிடம் உங்களுக்குத்தான் ,ஒரே நாளில் இரண்டு பதிவுகள் போட்டு அசத்தறீங்களே :)

    பதிலளிநீக்கு
  2. மொத்த ஆராய்ச்சி! முத்த ஆராய்ச்சி!

    முத்தத்தில் என்னதான் இருக்கிறது?

    எச்சல்தான்! ஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த எச்சிலைத்தான் பாலொடு தேன் கலந்தற்றே என்று சொல்கிறார் வள்ளுவர்!
      நன்றி

      நீக்கு
  3. அடாடா... எனக்கு உங்கள் பதிவின் முன் பகுதியைப் பார்த்ததும் ராமின் தங்க மீன்கள் படம் நினைவுக்கு வந்தது.

    பதிவின் பிற்பகுதி நீங்கள் எத்துனை ரசனை மிக்க இளைஞர் என்பதை தெரிவித்தது.

    அருமை.

    God Bless You

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பதிவின் பிற்பகுதி நீங்கள் எத்துனை ரசனை மிக்க இளைஞர் என்பதை தெரிவித்தது.// ----------------

      நன்றி!

      நீக்கு
  4. பார்...ரா
    அடையாறு அஜீத்தின் ஆராய்ச்சியை!?!?
    கடைசியா போட்ட கவிதை...
    வாவ்... இவ்ளோ இருக்கு சார் உங்க வாழ்க்கையில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஜீஸ்!ரொம்ப நாளாச்சு நம்ம வலைப்பக்கம் வந்து..நல்லாருக்கீங்களா!
      அதெல்லாம் கற்பனைதானே!!
      நன்றி

      நீக்கு
  5. முத்தமான பதிவு
    சிவகுமாரனின் வெண்பா அருமை.
    வெண்பாவை மடக்கிப் போட்டு புதுக்கவிதை ஆக்கி விட்டீர்களே. அதற்கும் பொருத்தமாகத்தான் உள்ளது

    பதிலளிநீக்கு
  6. மொ(மு)த்த ஆராய்ச்சியும் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  7. கலக்கிட்டீங்க அய்யா ..

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    ஐயா
    முத்தம் பற்றிய சிறப்பான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் ஐயா பகிர்வுக்கு நன்றி த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. முத்தத்திற்கு
    ஒரு
    சத்தான பதிவு ஐயா
    ந்ன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  10. மூ(மு)த்த இளைஞனின் முத்த நாள் வாழ்த்துகளை தெரிவித்த விதம் அருமை!

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்,
    இதழொற்றிக் கசக்கியெறிந்த காகிதம்
    சட்டைப் பையில் வைத்து எடுத்து வரும்போது
    அவள் இதழ் என் மார்பில் பதிவதாய் உணர்ந்த நாள்
    ஆஹா என்னமாய் உணர்ந்துள்ளீர்கள்,
    தங்கள் கவி வரிகளில் முத்தம் அருமை,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. இதழ் ஆராய்ச்சிக்கும்
    இதழோடு இதழ் பதிப்பிற்கும்
    மொழி தேவையா?!!!
    விழி மூடி
    இதழ் பதித்து
    காதல் செய்திட
    மொழி தேவையில்லாத
    இதழ் ஒற்றும் முத்த தினத்திற்கு
    முதல் வணக்கம்...வாழ்த்துகளும்!!!

    ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க சார்...அதுவும் ஐயனின் வார்த்தைகளோடு...ஐயன் அனுபவித்துதான் சொல்லி இருப்பாரோ?


    பதிலளிநீக்கு