தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஏப்ரல் 24, 2012

இன்று என்ன நடந்தது?என்ன செய்யலாம்?

 
இன்று அட்சய திரிதியை!

இந்நாளில் புராண காலத்தில் என்னவெல்லாம் நடந்தது?

திருமாலின் ஆறாவது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.


குசேலர் துவாரகை சென்று கிருஷ்ணரைக் கண்டு அவல் அளித்துப் பெருஞ்செல்வம் பெற்றார்.
(இது பற்றிய எனது பழைய கவிதை----
     குசேலர்!
     பெற்றது இருபத்தேழு
     கற்றது எம்.பி.ஏ.மார்க்கெட்டிங்கா?
     விற்றது என்னவோ ஒரு பிடி அவல்தான்-விலையாய்ப்
     பெற்றதோ பெருஞ்செல்வம்!)


குபேரன்,லக்ஷ்மி தேவியைப் பிரார்த்தித்துத் தன் கருவூ லத்தை நிரப்பிக் கொண்டான்.

திரௌபதி அட்சய பாத்திரம் பெற்றாள். 

வியாசர் சொல்ல,விநாயகர் மகாபாரதம் எழுதத் தொடங் கினார். ----------------

(தொடர்வது  சென்ற ஆண்டு அட்சய திரிதியை அன்று எழுதி வெளியிட்ட பதிவு.எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எழுதியவை எல்லாம் மாறாத உண்மைகள்தானே!)





”என்ன சார்,காலையில் ரெண்டு பாக்கெட் பால் வாங்கிட்டு வந்தீங்க போல?”


”ஆமாம் சார்,பாயசம் செய்யத்தான்!”


“வீட்டில ஏதும் விசேஷமா? நிறைய மல்லிப்பூவெல்லாம் வாங்கிட்டு வந்தீங்க?”


”வீட்டில இல்லை சார்,நாட்டிலேயே விசேஷம்தான். இன்னிக்கு அட்சய திரிதியை!”


“ஓகோ!அதுதான் பால் ,பாயசம், மல்லிப்பூவெல்லாமா! இன்னும் ஏதோ பாக்கி இருக்கு போலிருக்கே?”


”அதுக்குத்தான் மனைவியோடு நகைக் கடைக்குப் போகப் போகிறேன்.அவளுக்கு நகை வாங்க.”


”தங்க நகைதானே?”


”இல்லை.பிளாட்டினம் நகை.அதுதான் ரொம்ப நல்ல துன்னு  டி.வி யில் சொன்னாங்க!”


“வெண்மை நல்லது என்றால் வெள்ளி வாங்கலாமே?”


“விலை மதிப்பில்லாத பிளாட்டினம்தான் நல்லதாம்”


“என்ன வாங்கப் போறீங்க?”


“ஒரு சங்கிலியும்,பெண்டண்ட்டும்.அதுதான் ஒரு நடிகையும் வாங்கினாங்களாம்”


சில ஆண்டுகளாக இப்படித்தான் மக்கள் முட்டாளாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


பிளாட்டினம் வாங்குவது நல்லது என்றால் ,யாருக்கு நல்லது? இன்று நகை வாங்கினால் மென்மேலும் நகை வந்து சேரும் என்ற ஒரு நம்பிக்கையைச் சில ஆண்டுகளாகக் கிளப்பி விட்டு இலாபம் காண்பவர்களுக்கு நல்லதுதான்!


க்ஷயம் என்ற வட மொழிச் சொல்லுக்கு ,வடமொழி-தமிழ் அகராதியில் பொருள்-அழிவு,நஷ்டம்,வீழ்ச்சி,குறைதல்.


அக்ஷயம் என்பது அதற்கு எதிரான பொருளைத் தரும்.-அதாவது குறையாதது அல்லது வளர்வது.


எனவே இந்த நாளில் செய்யப்படும் எதுவும் வளரும் என்ற நம்பிக்கை!


முன்பெல்லாம்,இந்நாளில் தானம் செய்து வந்தார்கள்; அதிலும் அன்னதானம் செய்வது சிறப்பான பலனைத் தரும் என நம்பி அவ்வாறே செய்தார்கள்.அதனால் கிடைக்கும் புண்ணியம் பல மடங்காகப் பெருகும் என்பதே நம்பிக்கை!


அந்த நம்பிக்கையிலாவது சில பசித்த வயிறுகளுக்கு நல்லது நடந்தது.தானம் செய்தவர் களுக்கும் ஒரு மன நிறைவு இருந்தது.


ஆனால் இன்றோ!


உங்களுக்குப் பாவ புண்ணியங்களில் நம்பிக்கை இல்லாவிடினும்,கொடுக்கின்ற அந்த மகிழ்ச்சிக்காக,சில பசித்த வயிறுகள் நிறையும்,அந்த முகங்கள் மலரும்,அந்த மனங்கள் வாழ்த்தும் என்ற காரணத்துக்காக இந்த ஒரு நாளிலாவது, நகைக் கடையில் வரிசையில் நின்று செலவழிக்கும் பணத்தில் ஒரு அற்பமான பகுதியில்,தானம் செய்து மகிழ்ச்சியைப் பரப்பலாமே!


இந்த தானத்தை நகைக்கடைக்காரர்களே கொஞ்சம் பெரிய அளவில் செய்யலாமே!

இன்றைய விற்பனையில் இரண்டு விழுக்காட்டுக்குக் குறையாமல் அன்ன தானத்திற்கு எனத் தீர்மானித்து கடைக்கு அருகில் ஒரு மண்டபத்தில் அன்ன தானம் செய்யலாமே! கடையில் ஒரு அறிவிப்புப் பலகையில் இதை வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் காண வைத்தால் ஒரு விளம்பரமும் ஆகுமே!


பொருள் வாங்கிச் செல்பவர்களுக்கு ஒரு கடவுள் படம் போட்ட அட்டையின் பின்புறம், அவர்கள் பில் தொகை யின் 2 % தொகையைக்குறிப்பிட்டு,”இது இன்று உங்கள் புண்ணியக் கணக்கு” என்று அச்சிட்டுக் கொடுக்கலாமே!


அப்படியெல்லாம் நடந்தால்----வியாபாரத்துக்கு வியாபாரம்,விளம்பரத்துக்கு விளம்பரம், புண்ணியத்துக்குப் புண்ணியம்!


கொஞ்சமாவது நல்லது நடக்கட்டுமே!





23 கருத்துகள்:

  1. சூப்பர் சார் ...............

    பதிலளிநீக்கு
  2. ஆமாங்க கொஞ்சமாவது நல்லது நடக்கட்டும்

    பதிலளிநீக்கு
  3. நல்லா சொல்லிருக்கீங்க

    மனமார தானம் பன்னினால் உண்மையிலேய புண்ணியம் தான்

    பதிலளிநீக்கு
  4. நகைக் கடைக் காரங்க எல்லோரும் சேர்ந்து பிளேட்ட அப்படியே மாத்திட்டாங்களே...

    பதிலளிநீக்கு
  5. இந்த ஒரு நாளிலாவது, நகைக் கடையில் வரிசையில் நின்று செலவழிக்கும் பணத்தில் ஒரு அற்பமான பகுதியில்,தானம் செய்து மகிழ்ச்சியைப் பரப்பலாமே///
    சிறப்பான கருத்து ஐயா சிந்திப்பார்களா ?

    பதிலளிநீக்கு
  6. அண்ணே உங்களுக்கு ஆசை அதிகம்னே...ரொம்ப பேரு இன்னிக்கு வாங்குன தங்கம் மூலமாத்தான் குபேரன் ஆகறதா பேசிக்கிறாங்க...வெயில் தங்கத்த உருக்காம இருந்தா சர்தான்!

    பதிலளிநீக்கு
  7. தர்மம் தலை காக்கும் ..! உணர்வார்களா மக்கள்..?

    பதிலளிநீக்கு
  8. //பொருள் வாங்கிச் செல்பவர்களுக்கு ஒரு கடவுள் படம் போட்ட அட்டையின் பின்புறம், அவர்கள் பில் தொகை யின் 2 % தொகையைக்குறிப்பிட்டு,”இது இன்று உங்கள் புண்ணியக் கணக்கு” என்று அச்சிட்டுக் கொடுக்கலாமே!//

    நல்லதொரு ஆலோசனை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  9. இந்த ஒரு நாளிலாவது, நகைக் கடையில் வரிசையில் நின்று செலவழிக்கும் பணத்தில் ஒரு அற்பமான பகுதியில்,தானம் செய்து மகிழ்ச்சியைப் பரப்பலாமே///

    நல்லா சொல்லிருக்கீங்க...

    Profile படம் மறுபடி மாத்திட்டீங்க...இது கல்லூரில படிக்கும் போது உள்ளது தானே...-:)

    பதிலளிநீக்கு
  10. நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க ஐயா. கடைபிடித்தால் நல்லது.. ஆனால் செய்யதான் மறுக்கிறார்கள்....

    பதிலளிநீக்கு
  11. நன்றி ரெவெரி.
    படம் பள்ளியில் படிக்கும்போது எடுத்ததா எனக்கேட்காமல் போனீர்களே!

    பதிலளிநீக்கு
  12. அக்ஷயம் என்பது வளர்ச்சி தருவது என்பதை மறைத்து நகை வாங்குவதற்கான நாளாக்கப்பட்டு விட்டது வேதனைதான்! சிந்திக்க வேண்டிய விஷயம்! நல்லது நடந்தால் மகிழ்வே...!

    பதிலளிநீக்கு
  13. கொஞ்சமாவது நல்லது நடக்கட்டுமே!
    >>
    கரெக்ட்தான் இந்த நல்ல நாளை நாம் நல்லதுக்கு பயன்படுத்திக்கலாமே

    பதிலளிநீக்கு
  14. அட்சய திரியைக்கு இப்படி ஒரு வரலாறா புதிய தகவல் எனக்கு

    பதிலளிநீக்கு
  15. கேட்பதற்கு நல்லாதான் இருக்கு ஆனா நடக்கனுமே!!! :(

    பதிலளிநீக்கு
  16. நல்ல யோசனை. அடுத்த ஆண்டாவது இதை நகை கடைக்காரர்கள் செய்வார்களா?

    பதிலளிநீக்கு