தொடரும் தோழர்கள்

புதன், அக்டோபர் 19, 2011

சிரித்து , சிந்தித்து ,வாழ வேண்டும்!

வெளி நாட்டுக்குப் பயணம் சென்று திரும்பிய மிஸ்டர் x மனைவியிடம் கேட்டார்”என்னைப் பார்த்தால் வெளிநாட்டுக்காரன் மாதிரி இருக்கிறேனா?”

மனைவி சொன்னாள்”இல்லையே!ஏன் கேட்கிறீர்கள்?”

X சொன்னார்”லண்டனில் ஒரு பெண் என்னைப்பார்த்துக் கேட்டாள்”நீ வெளிநாட்டுக் காரனா?” என்று.

அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு சுற்றுலாப் பயணி எக்ஸிடம் கேட்டார் ”உங்கள் ஊரில் பெரிய மனிதர்கள் யாரும் பிறந்திருக்கிறார்களா?”

எக்ஸ் சொன்னார்”இல்லை!சின்னக் குழந்தைகள்தான் பிறப்பார்கள்!”

காந்தி ஜெயந்தி பற்றிக் குறிப்பெழுதச் சொன்னதற்கு எக்ஸ் எழுதினார்”காந்தி ஒரு மகான்.ஜெயந்தி யாரென்று எனக்குத் தெரியாது!”

ஆட்டோவில் தன் மனைவியுடன் பயணித்துக் கொண்டிருந்தார் எக்ஸ்.ஓட்டுநர் பின் பார்க்கும் கண்ணாடியைச் சரி செய்வதைக்கண்ட எக்ஸ் கோபமாகச் சொன்னார்”என் மனைவியைப் பார்க்கிறாயா? நீ பின்னாலே வா .நான் வண்டி ஓட்டுகிறேன்.”

எக்ஸ் சொன்னார்”அந்தப் பெண் செவிடு என நினைக்கிறேன்.”

மற்றவர் கேட்டார்” ஏன் அப்படி நினைக்கிறாய்?”

எக்ஸ் சொன்னார்”நான் அவளைக் காதலிக்கிறேன் எனச்சொன்னேன். அவளோ சம்பந்தமில்லாமல் அவள் செருப்பு புதிது என்று சொன்னாள்!”

இண்டர்வியூவில் எக்ஸிடம் கேட்டார்கள்”உங்களுக்கு MS office தெரியுமா?”

அவர் சொன்னார்”நீங்கள் விலாசம் கொடுத்தால் நான் அங்கே போய் விடுவேன்.”

ஆசிரியர் மாணவன் எக்ஸிடம் கேட்டார் “ஏசு, கிருஷ்ணர்,காந்தி அவர்களுக்குள் ஒற்றுமை என்ன?”

எக்ஸ்;”மூவரும் அரசு விடுமுறை அன்று பிறந்தவர்கள்!”

---------------------------------------------------------------------

உங்கள் சிந்தனைக்கு-

வாழ்க்கையின் மூன்று நிலைகள்!

1.பதின்ம வயது--------நேரம் இருக்கிறது,உடல் சக்தி இருக்கிறது,ஆனால் பணமில்லை!

2.பணிக்காலம்--------சக்தி இருக்கிறது;பணம் இருக்கிறது;ஆனால் நேரமில்லை!

3.முதுமைக்காலம்----நேரம் இருக்கிறது;பணம் இருக்கிறது ;ஆனால் சக்தியில்லை!

--------------------------------------------------------------------------------


55 கருத்துகள்:

  1. காந்தி ஜெயந்தி பற்றிக் குறிப்பெழுதச் சொன்னதற்கு எக்ஸ் எழுதினார்”காந்தி ஒரு மகான்.ஜெயந்தி யாரென்று எனக்குத் தெரியாது!”

    சிரித்து , சிந்தித்து ,வாழ வேண்டும்!"

    very nice..

    பதிலளிநீக்கு
  2. அத்தனையும் சிரிக்க வைக்கிறது ...இளமை ததும்பும் ஜோக்குகள் !

    பதிலளிநீக்கு
  3. செருப்பு புதிதா?
    ஐயஹோ!ஆளை விடுங்கள்!

    பதிலளிநீக்கு
  4. அருமையான ஜோக்ஸ்!கடைசியில் சொன்ன மூன்று பொன்மொழிகளும் முத்து!

    பதிலளிநீக்கு
  5. ஜெயந்தி தெரியும் எதிர் வீட்டு ஃபிகரு... யாருங்க அது காந்தி...

    பதிலளிநீக்கு
  6. சிரித்தேன் - 3 நிலைகளை சிந்திக்கிறேன் - வாழ்வேன்.

    பதிலளிநீக்கு
  7. ஜோக்குகள் முன்பே படித்து இருந்தாலும், திரும்பவும் தங்கள் பதிவில் படிக்கும்போது புதியது போலவே தோன்றுகிறது. அனைத்தும் அருமை. வாழ்க்கையின் மூன்று நிலைகளை எடுத்துரைத்தற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. ////வெளி நாட்டுக்குப் பயணம் சென்று திரும்பிய மிஸ்டர் x மனைவியிடம் கேட்டார்”என்னைப் பார்த்தால் வெளிநாட்டுக்காரன் மாதிரி இருக்கிறேனா?”

    மனைவி சொன்னாள்”இல்லையே!ஏன் கேட்கிறீர்கள்?”

    X சொன்னார்”லண்டனில் ஒரு பெண் என்னைப்பார்த்துக் கேட்டாள்”நீ வெளிநாட்டுக் காரனா?” என்று.//////

    ஹா.ஹா.ஹா.ஹா.......

    பதிலளிநீக்கு
  9. ////வாழ்க்கையின் மூன்று நிலைகள்!

    1.பதின்ம வயது--------நேரம் இருக்கிறது,உடல் சக்தி இருக்கிறது,ஆனால் பணமில்லை!

    2.பணிக்காலம்--------சக்தி இருக்கிறது;பணம் இருக்கிறது;ஆனால் நேரமில்லை!

    3.முதுமைக்காலம்----நேரம் இருக்கிறது;பணம் இருக்கிறது ;ஆனால் சக்தியில்லை!/////

    என்ன ஒரு அழகான கருத்துக்கள் ஜயா

    பதிலளிநீக்கு
  10. அருமையான நகைச்சுவைப் பதிவு
    மனம் விட்டு சிரிக்க முடிந்தது அருமை
    இறுதியாக எளிதாக்ச் சொல்லிப்போகும்
    வாழ்வின் தத்துவங்கள்தான் எத்தனை ஆழமானது
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. எல்லா ஜோக்ஸுகளுமே ஏதோ ஒரு கால கட்டத்தில் நான் படித்தது, கேட்டது,
    சொன்னது என்றாலும், அவை எல்லாமே எத்தனை தரம் கேட்டாலும் ரசிக்க வைக்கும். சிரிக்கவைக்கும்.
    சில சிந்திக்கவும் வைக்கும்.

    சிரித்து வாழவேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என பெரு வள்ளல் மக்கள் திலகம்
    எம்.ஜி.ஆர்.பாடியது நினைவுக்கு வருகிறது.

    இந்த கடைசி மூன்று கருத்துக்களுமே முத்தானவை. நற்சிந்தனைக்கு வித்தானவை.

    தொடர்ந்து எழுதவும். ஆல் த பெஸ்ட்.

    சுப்பு ரத்தினம்.

    பதிலளிநீக்கு
  12. அண்ணே எப்படி இப்பிடி....கலக்கல்!

    பதிலளிநீக்கு
  13. சிரித்தேன் சிந்தித்தேன்
    தமிழ் மணம் 9

    பதிலளிநீக்கு
  14. ஏற்கனவே இதே மாதிரி படித்த நினைவு இருக்கு, உங்க மீள் பதிவா?

    பதிலளிநீக்கு
  15. சிரித்து மகிழ்ந்தேன். கடைசியில் சொன்ன சிந்தனைகளை சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன். பிரமாதம்!

    பதிலளிநீக்கு
  16. @Philosophy Prabhakaran
    அதானே !காந்தியைத் தெரியாட்டியும் கட்டாயம் எதிர்வீட்டு ஜெயந்தியைத் தெரியணுமே!உங்க வயசு அப்படி!

    பதிலளிநீக்கு
  17. வாழ்க்கையில் கிடைத்தவை/இருப்பவை அதிகம். கிடைக்காதவை/இல்லாதவை குறைவு.
    ஆனால் இல்லாததே நம்மை அதிகம் பாதிக்கிறது.
    வாழும்போது செத்து செத்து வாழ்கிறோம்!
    பிறகு வாழாமலே சாகிறோம்!
    சிந்தனைத்துளிகள் மிகவும் அருமை

    பதிலளிநீக்கு
  18. @suryajeeva
    மீள்பதிவு இல்லை ஐயா.ஜோக்குகள் எல்லாம் வழக்கமாகச் சுற்றிக் கொண் டிருப் பவைதானே. கேட்டிருக்கலாம்; படித்திருக்கலாம்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  19. நகைச்சுவைகள் எல்லாம் அருமை சார்..

    இன்னும் சிரிப்பை நிப்பாட்ட முடியல

    பதிலளிநீக்கு
  20. முக்காலமும் எடுத்துரைத்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  21. காந்தி ஜெயந்தி பற்றிக் குறிப்பெழுதச் சொன்னதற்கு எக்ஸ் எழுதினார்”காந்தி ஒரு மகான்.ஜெயந்தி யாரென்று எனக்குத் தெரியாது!”

    அருமை !.....வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .....

    பதிலளிநீக்கு
  22. காந்தி ஜெயந்தி பற்றிக் குறிப்பெழுதச் சொன்னதற்கு எக்ஸ் எழுதினார்”காந்தி ஒரு மகான்.ஜெயந்தி யாரென்று எனக்குத் தெரியாது!”

    அருமை !.....வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .....

    பதிலளிநீக்கு
  23. காந்தி + ஜெயந்தி..

    ஹய்யோ ஹய்யோ முடியல.....

    பதிலளிநீக்கு
  24. அசத்தலான நகைச்சுவைத் தொகுப்பு.
    சிந்தனையும் அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  25. “ஏசு, கிருஷ்ணர்,காந்தி அவர்களுக்குள் ஒற்றுமை என்ன?” //

    மூவரும் இந்த மண்ணை விட்டு சென்றது... வெள்ளிக்கிழமை

    பதிலளிநீக்கு