தொடரும் தோழர்கள்

வியாழன், அக்டோபர் 13, 2011

வங்கத்திலோடி வரும் நீரின் மிகையால்......



ஒரு முறை இரு அரசர்கள் போருக்குத் தயாராக ரோஹிணி நதிக் கரையில் படைகளை அணிவகுத்து நிறுத்தினர்.இதை அறிந்த புத்தர் அங்கு விரைந்து சென்று படைகளுக்கு நடுவில் நின்றார்.அச்சண்டைக்குக் காரணத்தைக் கேட்டறிந்தார்.இரு மன்னர்களும் அந்நதி நீர் முழுவதும் தமக்கே என்றனர்.புத்தர் அம்மன்னர்களைப் பார்த்துப் பேசலானார்.

அந்நதியிலிருந்து சிறிது நீர் எடுத்து "இந்நீரின் மதிப்பு என்ன?" என வினவினார்.மன்னர்கள் பதிலளித்தனர்-இயற்கையில் இலவசமாகக் கிடைக்கும் நீருக்குப் பெரிய மதிப்பேதும் இல்லை என்று.


புத்தர் கேட்டார்,"மன்னர்களே,உங்கள் மதிப்பு என்ன?"

"அதிகம்"அவர்கள் பதில்.

"அரசிகளின் மதிப்பென்ன?"புத்தர் வினவினார்.இருவரும் பதிலளித்தனர்"நான் என் ராணியை மிக நேசிக்கிறேன்.அவ்ள் மிக மதிப்பு வாய்ந்தவள்."


"உங்கள் படைகளின் மதிப்பென்ன?"

"என் படை வீரர்கள் எனக்கு மிக முக்கியமானவர்கள்.மிக மதிப்பு வாய்ந்தவர்கள்"

புத்தர் கேட்டார்"மன்னர்களே!மதிப்பு வாய்ந்த உங்கள் உயிரை,நீங்கள நேசிக்கும் உங்கள் அரசியின் உயிரை,முக்கியமான வீரர்களின் உயிர்களைக் கடலில் சென்று வீணாகும் இந் நதி நீருக்காகத் துறக்கப் போகிறீர்களா?இந்த ஆற்றில் உங்கள் ரத்த ஆற்றைக் கலக்கப்போகிறீர்களா?சிந்தியுங்கள்"


மன்னர்கள் தங்கள் ஆயுதங்களை நழுவ விட்டனர்.இருவரும் கலந்து பேசி ஒரு நல்ல முடிவுக்கு வந்தனர்.நதி நீரைப் பங்கிட்டுக் கொண்டனர்.

அன்று ஒரு புத்தர் இருந்தார்.அவர் அறிவுரைகளைக் கேட்டு நடக்கும் அறிவும்,பணிவும் அம்மன்னர்களுக்கு இருந்தது.

ஆனால் இன்று?எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்.பொது நலனைப் பற்றி நினைக்க யாரும் தயாராக இல்லை.இன்றைய குறு நில மன்னர்கள் தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் பொது நலனைப் புறக்கணிக்கிறார்கள்.

கால இயந்திரத்தில் ஏறி அந்தக்காலத்துக்குப் போக முடியுமா ?

49 கருத்துகள்:

  1. கருத்து மிக்க குட்டி கதை ...

    பதிலளிநீக்கு
  2. இலவசமாய் கிடைப்பது அனைத்தும் விலை மதிக்க முடியாதது என்பது என் எண்ணம்..

    பதிலளிநீக்கு
  3. அருமை ஐயா ,நல்ல கருத்து

    த.ம 4

    பதிலளிநீக்கு
  4. சிந்திக்க வைக்கும் பகிர்வு.

    பதிலளிநீக்கு
  5. நம்ம தமிழ்நாடு கர்நாடகா கேரளா இதானே இப்போ தண்ணிக்காக மன்னர்களை போல் அடித்துக் கொள்கிறார்கள் அரசியல் ஆதாயத்திற்காக நல்ல உவமை அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
  6. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்.பொது நலனைப் பற்றி நினைக்க யாரும் தயாராக இல்லை.இன்றைய குறு நில மன்னர்கள் தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் பொது நலனைப் புறக்கணிக்கிறார்கள்.


    முத்தாய்ப்பான வரிகள் நிதர்சன்மான அற்புதம்.

    பதிலளிநீக்கு
  7. முன்பு சொல்பவனும் ஞானியாய் இருந்தான்
    கேட்பவனும் அறிவுள்ளவனாய் இருந்தான்
    செயல்படுபவனும் அடங்குபவனாய் இருந்தான்
    இப்போது எல்லாம் தலைகீழ்
    அருமையான் அபதிவு
    த.ம 6

    பதிலளிநீக்கு
  8. அருமையான கதை ஐயா

    பொதுநலன் என்பது சுத்தமாக நீர்த்துப் போன
    இப்புவியில் அன்றோ புத்தர்களாய் சிலர் அவனித்து
    பொதுநலன் வியாபித்தனர். கேட்பதற்கும் தயாராய் இருந்தனர்..

    இன்று யாருக்கு சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்காய்
    பயனற்று போகிறது..

    கதை நன்று ஐயா

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் ஐயா, நலமா?

    விவாத மேடை கொஞ்சம் ரணகளமாகியதால் வர முடியவில்லை.

    சிந்திதுச் செயற்பட்டால் எத்தகைய அழிவுகளையும் தடுக்கலாம் எனும் நீதியினை விளக்கி நிற்கும் அருமையான கதை.

    பதிலளிநீக்கு
  10. அடுத்த உலகப்போர் மூண்டால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்கிறார்கள்.சரியான சமயத்தில் மறைமுகமாக எச்சரித்து இருக்கிறீர்கள்.நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  11. நல்ல ஒரு குட்டிக்கதை ஜயா.பல விடயங்களைச்சொல்கின்றது

    பதிலளிநீக்கு
  12. நல்ல கதை ஐயா... காலச்சக்கரத்தில் ஏறிப் போக முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்....

    பதிலளிநீக்கு
  13. ஐயா! இன்று புத்தரும் இல்லை
    புத்தியும் இல்லை!
    அருமை!

    த.ம.ஓ 13

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  14. தண்ணீர்ப் பிரச்னை, இலவசத்துக்கு என்றும் மதிப்பில்லை போன்ற பல விஷயங்களை மறைபொருளாய் உணர்த்தியது புத்தர் கதை. அருமை.

    பதிலளிநீக்கு
  15. நமக்குதான் பொருமையில்லையே, யோசிக்கவும் மாட்டார்கள்...!!!

    பதிலளிநீக்கு
  16. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...

    // ம் ...//

    ஓ!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  17. கந்தசாமி. கூறியது...

    // கருத்து மிக்க குட்டி கதை ...//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  18. suryajeeva கூறியது...

    //இலவசமாய் கிடைப்பது அனைத்தும் விலை மதிக்க முடியாதது என்பது என் எண்ணம்..//
    சரி.நன்றி.

    பதிலளிநீக்கு
  19. M.R கூறியது...

    //அருமை ஐயா ,நல்ல கருத்து

    த.ம 4//
    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  20. வைரை சதிஷ் கூறியது...

    //puththar arumaiyana kelviyaithan keettirukkirar//
    நன்றி சதீஷ்.

    பதிலளிநீக்கு
  21. shanmugavel கூறியது...

    // சிந்திக்க வைக்கும் பகிர்வு.//
    நன்றி சண்முகவேல்.

    பதிலளிநீக்கு
  22. காட்டு பூச்சி கூறியது...

    //நம்ம தமிழ்நாடு கர்நாடகா கேரளா இதானே இப்போ தண்ணிக்காக மன்னர்களை போல் அடித்துக் கொள்கிறார்கள் அரசியல் ஆதாயத்திற்காக நல்ல உவமை அருமை நண்பரே//
    நன்றி காட்டு பூச்சி.

    பதிலளிநீக்கு
  23. இராஜராஜேஸ்வரி கூறியது...

    எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்.பொது நலனைப் பற்றி நினைக்க யாரும் தயாராக இல்லை.இன்றைய குறு நில மன்னர்கள் தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் பொது நலனைப் புறக்கணிக்கிறார்கள்.


    //முத்தாய்ப்பான வரிகள் நிதர்சன்மான அற்புதம்.//
    நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  24. Ramani கூறியது...

    //முன்பு சொல்பவனும் ஞானியாய் இருந்தான்
    கேட்பவனும் அறிவுள்ளவனாய் இருந்தான்
    செயல்படுபவனும் அடங்குபவனாய் இருந்தான்
    இப்போது எல்லாம் தலைகீழ்
    அருமையான் அபதிவு//
    நன்றி ரமணி.

    பதிலளிநீக்கு
  25. அன்று ஒரு புத்தர் இருந்தார்.அவர் அறிவுரைகளைக் கேட்டு நடக்கும் அறிவும்,பணிவும் அம்மன்னர்களுக்கு இருந்தது.

    சிந்திக்க வைக்கும் பகிர்வு.

    பதிலளிநீக்கு
  26. மகேந்திரன் கூறியது...

    //அருமையான கதை ஐயா

    பொதுநலன் என்பது சுத்தமாக நீர்த்துப் போன
    இப்புவியில் அன்றோ புத்தர்களாய் சிலர் அவனித்து
    பொதுநலன் வியாபித்தனர். கேட்பதற்கும் தயாராய் இருந்தனர்..

    இன்று யாருக்கு சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்காய்
    பயனற்று போகிறது..

    கதை நன்று ஐயா//

    நன்றி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு
  27. செங்கோவி கூறியது...

    //வருத்தத்திற்குரிய உண்மை ஐயா.//
    நன்றி செங்கோவி.

    பதிலளிநீக்கு
  28. நிரூபன் கூறியது...

    // வணக்கம் ஐயா, நலமா?

    விவாத மேடை கொஞ்சம் ரணகளமாகியதால் வர முடியவில்லை.

    சிந்திதுச் செயற்பட்டால் எத்தகைய அழிவுகளையும் தடுக்கலாம் எனும் நீதியினை விளக்கி நிற்கும் அருமையான கதை.//
    நன்றி நிரூ.

    பதிலளிநீக்கு
  29. வே.நடனசபாபதி கூறியது...

    //அடுத்த உலகப்போர் மூண்டால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்கிறார்கள்.சரியான சமயத்தில் மறைமுகமாக எச்சரித்து இருக்கிறீர்கள்.நல்ல பதிவு.//
    நன்றி சபாபதி அவர்களே.

    பதிலளிநீக்கு
  30. K.s.s.Rajh கூறியது...

    //நல்ல ஒரு குட்டிக்கதை ஜயா.பல விடயங்களைச்சொல்கின்றது//
    நன்றி ராஜ்.

    பதிலளிநீக்கு
  31. FOOD கூறியது...

    //பதில் சொல்ல முடியாத கேள்வி.//
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  32. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //நல்ல கதை ஐயா... காலச்சக்கரத்தில் ஏறிப் போக முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்....//
    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  33. புலவர் சா இராமாநுசம் கூறியது...

    // ஐயா! இன்று புத்தரும் இல்லை
    புத்தியும் இல்லை!
    அருமை!

    த.ம.ஓ 13//
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  34. கணேஷ் கூறியது...

    //தண்ணீர்ப் பிரச்னை, இலவசத்துக்கு என்றும் மதிப்பில்லை போன்ற பல விஷயங்களை மறைபொருளாய் உணர்த்தியது புத்தர் கதை. அருமை.//
    நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  35. விக்கியுலகம் கூறியது...

    //அண்ணே அருமையான் பதிவு!//
    நன்றி விக்கி.

    பதிலளிநீக்கு
  36. DrPKandaswamyPhD கூறியது...

    // அருமையான கதை.//
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  37. koodal bala கூறியது...

    //நல்ல அறிவுரை !//
    நன்றி பாலா.

    பதிலளிநீக்கு
  38. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //நமக்குதான் பொருமையில்லையே, யோசிக்கவும் மாட்டார்கள்...!!!//
    உண்மை.

    பதிலளிநீக்கு
  39. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //அருமையான சாட்டையடி பதிவு தல...!!!//
    நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  40. ரிஷபன் கூறியது...

    //அன்று ஒரு புத்தர் இருந்தார்.அவர் அறிவுரைகளைக் கேட்டு நடக்கும் அறிவும்,பணிவும் அம்மன்னர்களுக்கு இருந்தது.

    சிந்திக்க வைக்கும் பகிர்வு.//
    நன்றி ரிஷபன்.

    பதிலளிநீக்கு
  41. அருமையான சிந்தனைக் கதை. புத்தர் போதனை புற்றுக்குள் போனதால் தான் இன்று அநீதிகளால் உலகு பொத்தலாகி உள்ளது. வாழ்த்துகள் சகோதரரே!.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு